search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirthawari"

    • முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தன.
    • திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    போரூர்:

    பிரசித்தி பெற்ற வட பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரவிழா கடந்த 21-ந் தேதி தொடங்கியது. கடந்த 3 நாட்களாக தினசரி காலை மற்றும் மாலையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தன.

    இந்த நிலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வடபழனி முருகன்கோவிலில் இன்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு உச்சி காலத்துடன் தீர்த்தவாரி மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    விருகம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து ஏராளமான பெண்கள், ஆண்கள் அலகு குத்தியும், காவடி சுமந்தும், பால் குடம் எடுத்தும் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    இன்று இரவு 7மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சாமி புறப்பாடு நடக்கிறது. இதைத்தொடர்ந்து நாளை முதல் வருகிற 27-ந்தேதி வரை 3 நாட்களும் இரவு 7 மணிக்கு திருக்குளத்தில் தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது.

    பாரிமுனை, ராசப்பா செட்டி தெருவில் உள்ள கந்தக்கோட்டை முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    குன்றத்தூர் முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பூந்தமல்லியில் உள்ள திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜபெருமாள் கோவிலில் கருட சேவையுடன், கோபுர தரிசனமும், திருவீதி உலாவும் நடைபெற்றது.

    மேலும் 3 பெருமாளும் கோவிலின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவில் வளாகத்தை சென்றடைந்தனர். மற்ற கோவில்களில் ஒரு கருட சேவை மட்டும் நடைபெறும். ஆனால் இங்கு மட்டும் 3 கருட சேவை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மாலையில் 3 பெருமாளுக்கும், திருக்கச்சி நம்பிகளுக்கும் அலங்கார திருமஞ்சனமும், திருப்பாவை சாற்று முறை தீர்த்த பிரசாத விநியோகமும் நடைபெறுகிறது.

    திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, தங்கவேல், தங்கக் கீரிடம், வைர ஆபரணங்கள் அணி விக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடு முறை மற்றும் பங்குனி உத்திரம் என்பதால் மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்து இருந்தனர். இதனால் பொது வழியில் மூலவரை தரிசிக்க பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

    • கொட்டையூர் கோடீஸ்வரர் கோவிலில் காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடைபெற உள்ளது.
    • கொட்டையூரிலுள்ள காவிரி கரையில் தீர்த்தவாரி விழா காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

    பட்டீஸ்வரம்:

    கும்பகோணம் பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களான குடந்தை கீழ்கோட்டம் அருள்மிகு ஸ்ரீபிரஹன்நாயகி சமேத நாகேஸ்வரர் (நாக தோஷப் பரிகாரத் தலம்), ஸ்ரீஆனந்தநிதியம்பிகை சமேத ஆதிகம்பட்ட விஸ்வநாதர், கொட்டையூர் ஸ்ரீபந்தாடுநாயகி சமேத கோடீஸ்வரர் ஆகிய மூன்று திருக்கோயில்களில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இம்மூன்று சிவாலயங்களில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர பெருவிழா இன்று மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர, வாஸ்து, மிருத்சங்கிரஹணம் ஆகிய பூஜைகளுடன் தொடங்குகிறது

    தொடர்ந்து நாகேஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர் ஆலயங்களில் நாளை காலை பத்து மணிக்கு மேல் கொடியேற்றமும், கொட்டையூர் கோடீஸ்வரர் கோவிலில் காலை 9-மணிக்கு மேல் கொடியேற்றமும் நடைபெற உள்ளது.

    தொடர்ந்து இவ்வால யங்களில் தினசரி மங்கல இன்னிசை முழங்க சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காலை பல்லக்கிலும் மாலை வேளைகளில் சந்திர பிரபை, சூரியபிரபை, பூதம், கிளி, அதிகார நந்தி, காமதேனு, யானை, சிம்மம், யாளி, கைலாசம், குதிரை, ரிசபம் போன்ற வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள வீதி உலா திருகாட்சியும் நடைபெறும்.

    மேலும் இவ்விழாவின் ஐந்தாம் திருநாளன்று வண்ண மின் விளக்குகள் ஒளிர ஓலைச் சப்பரத்தில் சுவாமி, அம்பாள் ரிசப வாகனத்தில் எழுந்தருள வீதியுலாவும், ஏழாம் திருநாளன்று மாலை திருக்கல்யாண உத்ஸவமும், ஒன்பதாம் திருநாளான்று காலை திருத்தேரோட்டமும், பத்தாம் திருநாளான்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் பங்குனி உத்திர தீர்த்தவாரி விழா ஏப்ரல்.4 காலை 11 மணிக்கும், கொட்டையூர் கோடீஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தவாரி விழாவானது கொட்டையூரிலுள்ள காவிரிக் கரையில் காலை 9-30 மணிக்கு மேலும் நடைபெறவுள்ளது.

    இவ்விழாக்களின் சிறப்பு ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை சுவாமிமலை துணை ஆணையர் உமாதேவி, மற்றும் கண்காணிப்பாளர் சுதா, ஆய்வாளர் வெங்கடசுப்ரமணியன் மற்றும் திருக்கோவில்களின் செயல் அலுவலர்கள் கணேஷ்குமார், சிவசங்கரி மற்றும் அந்தந்த திருக்கோ யில்களின் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    • தைப்பூசவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தீர்த்தவாரி விழாவும் நடைபெற உள்ளது.

    பட்டிஸ்வரம்:

    கும்பகோணம் அடுத்து ள்ள திருச்சேறை சாரநாதப் பெருமாள் கோவில் தைப்பூச திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது,

    மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 15 வது திவ்ய தேசமான

    இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்) நிறைந்தது. ஆதலால் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாள் சாரநாதப்பெருமாள் என அழைக்கப்படுகிறார்.தலத்தின் பெயரும் திருச்சாரம் என்று வழங்கப்பட்டது.

    காலப்போக்கில் மருவி திருச்சேறை ஆனது என்பது தலவரலாறாகும்.

    மேலும் கங்கை நதியை விட மேலான சிறப்படைய தவமிருந்த காவிரித் தாய்க்கு பெருமாள் மழலையாக எழுந்தருளி வரமருளிய தினம் இத் தைபூசத் தினமாகும்.

    இந்நிகழ்வை ஆண்டு தோறும்தைப்பூசப் பெரு விழாவாகதிருச்சேறை தலத்தில் அமையப்பெ ற்றுள்ள சாரநாதப் பெருமாள் கோவிலில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருவது கூடுதல் சிறப்பாகும்.

    இந்த ஆண்டுக்கான தைப்பூச விழாவானது கடந்த ஜன.28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது,

    இவ்விழாவின் ஒன்பதாம் திருநாளான இன்று அதிகாலை மங்கல இன்னிசை முழங்க, அருளும் சாரநாதப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் (பஞ்ச லட்சுமிகளுடன்) திருத்தேரில் எழுந்தருள திருத்தேரோட்டம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து தேர் வடம் பிடித்தார்கள்.

    இவ்விழாவினை தொடந்து இன்று இரவு 7- 30 மணிக்கு கோவில் திருக்குளமான சாரபுஷ்கரணியில் காவிரித்தாய்க்கு பெருமாள் காட்சியளிக்கும் நிகழ்வும், தீர்த்தவாரி விழாவும் நடைபெற உள்ளது இவ்விழா ஏற்பாடுகளை

    ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ×