search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீயணைப்பு துறை"

    • கிணற்றுக்குள் எதிர்பாராத விதமாக வள்ளியம்மாள் தவறி விழுந்தார்.
    • உடனடியாக இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு சூளை ஈ.பி.பி. நகரை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (80). இவர் அந்த பகுதியில் உள்ள காம்பவுண்ட் வீட்டில் வசித்து வருகிறார். அந்த காம்பவுண்ட் பகுதியில் 100 அடி பொது கிணறு உள்ளது. தற்போது அந்த கிணற்றில் 10 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்தது.

    இந்நிலையில் இன்று காலை வள்ளியம்மாள் ரேஷன் கடைக்கு செல்வதற்காக கிளம்பி சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள கிணற்றுக்குள் எதிர்பாராத விதமாக வள்ளியம்மாள் தவறி விழுந்தார். கிணற்றில் இருந்த கயிறை பிடித்து கொண்டு கூச்சலிட்டார்.

    இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் வள்ளியம்மாள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை தேடி அந்த பகுதி வழியாக வந்தனர். அப்போது கிணற்றில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து பதறி போய் கிணற்றை பார்த்தபோது வள்ளியம்மாள் கூச்சல் போட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த தீயணைப்பு உதவி அலுவலர் கலைச்செல்வம் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கயிறு கட்டி இறங்கி மூதாட்டியை உயிருடன் மீட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

    • போலீசார்-தீயணைப்பு துறையிடம் சான்றுகள் பெறுவது கட்டாயம்
    • சிலையின் உயரம் அதன் பீடம் மற்றும் அடித்தளத்துடன் சேர்த்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்

    நாகர்கோவில் :

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் கரைப்பதற்கு குமரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    சிலை வைக்க உத்தேசி க்கப்பட்டுள்ள இடம் பொது நிலமாக இருந்தால் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, நெடுஞ்சாலைத் துறையிடமும், தனியார் இடமாக இருந்தால் நில உரிமையாளரிடம் தடை யில்லா சான்று பெறப்பட வேண்டும்.

    விநாயகர் சிலை அமைக்க உத்தேசித்துள்ள அமைப்பாளர், சிலை வைக்கப்படும் இடத்திற்கு தடையில்லா சான்று பெற்று போலீசாரின் உரிய அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும். ஒலிப்பெருக்கி மற்றும் அனுமதிக்காக தடையில்லா சான்று தொடர்புடைய போலீஸ் இன்ஸ்பெக்டரிடமிருந்து பெற வேண்டும். காவல் துறையால் தெரிவிக்கப்படும் விதிமுறைகளுக்குட்பட்டு ஒலி பெருக்கிகள் பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் தடை செய்யப்பட்டுள்ளது.

    தற்காலிகக் கூடாரம் தீ பாதுகாப்பு தர நிலையை கடைபிடிப்பதாக உள்ளன என்பதற்கு தடையில்லா சான்று தீயணைப்பு துறை யிடம் பெற வேண்டும். மின் இணைப்பு வழங்கப்படு வதை குறிக்கும் கடிதம் மின்சார துறையிடமிருந்து பெற வேண்டும்.

    விநாயகர் சிலைகள் ஏற்கனவே வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுவ வேண்டும். அனுமதிக்க ப்பட்ட இடங்களில் மட்டுமே பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

    எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் கூடாரத்திலோ சிலை அமைக்கும் இடத்தி லோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பந்தலு க்குள் எளிதாக செல்லும் வகையில் உள்ளே செல்ல மற்றும் வெளியே வர விசாலமான பாதைகள் அமைக்கப்பட வேண்டும். ஓலைப் பந்தல் அமைப்ப தைத் தவிர்க்க வேண்டும்.

    சிலையின் உயரம் அதன் பீடம் மற்றும் அடித்தளத்துடன் சேர்த்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். மருத்துவமனை கள் கல்வி நிறுவனங்கள், பிற வழிபாட்டு தலங்கள் அருகில் சிலை வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    சிலை நிறுவப்பட்ட இடத்தில் அரசியல் கட்சி அல்லது ஜாதி தலை வர்களின் தட்டிகள் கண்டிப்பாக வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

    சிலை நிறுவப்பட்ட இடத்தில் 24 மணி நேரமும் யாராவது 2 தன்னார்வலர்கள் பாது காப்புக்காக இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும். 4 சக்கர வாகனங்களான மினிலாரி போன்ற வாகனங்களில் மட்டுமே சிலைகளை கரைப்பதற்கு கொண்டு செல்ல பயன்படுத்த வேண்டும்.

    விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடத்திலோ, கரைப்பதற்கு கொண்டு செல்லும் ஊர்வலத்திலோ, சிலையை கரைக்கும் இடத்திலோ கண்டிப்பாக பட்டாசுகள் வெடிப்பது தடை செய்யப்படுகின்றது.

    விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட பூ மற்றும் மாலைகள், துணிகள் அழகு சாதன பொருட்கள் கரைக்கப்படுவதற்கு முன்பு பிரிக்கப்பட வேண்டும்.

    விநாயகர் சிலை கரைப்பதற்கான ஊர்வலம் குறிப்பிட்ட நேரத்திற்குள் சிலைகள் கரைப்பதற்கு அறிவிக்கப்பட்ட இடத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். சிலை கரைப்புக்கான ஊர்வலம் போலீசார் வரையறுத்துக் கொடுத்த பாதை வழியாக மட்டுமே கொண்டு செல்லப்பட வேண்டும். சூரியன் மறைவதற்குள் அனைத்து சிலைகளும் கரைக்க வேண்டும்.

    பொது அமைதி, பொது மக்கள் பாதுகாப்பு, சமூக ஒற்றுமை ஆகியவற்றினை பாதுகாக்கும் நோக்கோடு வருவாய்த் துறை காவல் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரி களால் பிறப்பிக்கப்படும் இதர நிபந்தனை மற்றும் கட்டுப்பாடு விதிகளை ஏற்பாட்டாளர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

    மோட்டார் வாகன சட்டம் 1988-ல் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் நபர்கள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும்.

    கடந்த 2018-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசா ணையின் அடிப்படை யில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கென அரசின் புதிய நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள் வரும் பொழுது மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்படும் அனைத்தையும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

    சிலை கரைப்பு நடைபெற்ற பகுதிகளில் கழிவுகள், குப்பைகள் அனைத்தும் உள்ளாட்சி, பேரூராட்சி அமைப்பால் சுத்தம் செய்யப்பட வேண்டும். சிலை அமைப்பாளர்களால் உரிய இடத்தில் சிலை அமைக்க ப்பட்டுள்ளதையும், விதி மீறல்கள் உள்ளதா? என்பதை உறுதி செய்யவும், ஊர்வலம் புறப்படும் இடத்திலிருந்து விஜர்சனம் செய்யும் இடங்களுக்கான வழித்தடங்களையும் முன்கூட்டியே காவல் துறையினர் தெரிவிக்கவும் வேண்டும்.

    • பாத்திரம் தலையில் வசமாக மாட்டிக்கொண்ட நிலையில் அதனை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    • அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர், பாத்திரத்தை எடுக்க கடுமையாக முயற்சித்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை கங்கைகொண்டானை அடுத்த அணைத்தலையூர் கிராமத்தை சேர்ந்தவர் மிக்கேல் ராஜ். இவரது மகன் சேவியர் (வயது 4).

    சிறுவன் வழக்கம்போல நேற்று இரவு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து விளையாடி கொண்டிருந்தபோது ஒரு எவர்சில்வர் பாத்திரத்தை எடுத்து தலையில் மாட்டியுள்ளார்.

    அந்த பாத்திரம் தலையில் வசமாக மாட்டிக்கொண்ட நிலையில் அதனை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுவன் அலறல் சத்தம் போட்டான். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர், பாத்திரத்தை எடுக்க கடுமையாக முயற்சித்துள்ளனர். பாத்திரத்தை எடுக்க பலரும் போராடிய நிலையிலும் அதனை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிறுவனை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்குள்ள மருத்துவர்கள் தகவல் அளித்ததன் அடிப்படையில் மருத்துவமனைக்கு சென்ற பாளை தீயணைப்பு நிலைய வீரர்கள் அவர்களிடம் இருந்த பிரத்யேக கருவிகளை கொண்டு பாத்திரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

    இதனைத்தொடர்ந்து சிறுவனுக்கு கூடுதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுவனின் தலையில் சிக்கிய பாத்திரத்தை பல கட்ட போராட்டத்திற்கு பிறகு அகற்றப்பட்ட சம்பவத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சமையல் செய்யும் இடத்தின் அருகில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக் கூடாது.
    • வீட்டினுள் எரிவாயு கசிந்து இருக்கும் போது மின் சுவிட்சுகள் பயன்படுத்தக்கூடாது.

    வெள்ளகோவில் :

    தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு, வெள்ளகோவில் தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு, வெள்ளகோவில் தீயணைப்பு நிலையம் சார்பில் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் வேலுச்சாமி தலைமையில், நாட்ராய சாமி கோவில் வளாகத்தில் தீ தடுப்பு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது கோவில் செயல் அலுவலர் திலகவதி மற்றும் கோவில் ஊழியர்கள், பொதுமக்கள் முன்பு தீ தடுப்பு ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.

    மேலும் தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான , எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அடுப்பின் அருகில் வைக்கக்கூடாது. சமையல் செய்யும் இடத்தின் அருகில் குழ ந்தைகளை விளையாட அனுமதிக்கக் கூடாது. சமையல் முடிந்தவுடன் அடுப்பை முழுவதும் அணைத்துவிடவேண்டும். கேஸ் பயன்படுத்தி சமைத்து முடித்ததும் பின்னர் பர்ணர் மற்றும் சிலிண்டர் வால்வுகளை முழுவதுமாக மூடி விட வேண்டும்.

    வீட்டினுள் எரிவாயு கசிந்து இருக்கும் போது மின் சுவிட்சுகள் பயன்படுத்தக்கூடாது. செல்போன் உபயோகிக்க கூடாது. சமைக்கும் போது பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். சிம்னி விளக்குகளை படுக்கை அருகில் வைக்கக்கூடாது. படுக்கையில் புகைபிடிக்கக் கூடாது. பொதுமக்கள் கூடி உள்ள இடங்களில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. ராக்கெட் போன்ற வெடிகளை திறந்தவெளி மைதானத்தில் வெடிக்க வேண்டும். ஆடைகளில் தீப்பற்றிக் கொண்டால் ஓடாமல் படுத்து உருண்டும், போர்வையால் மூடி தீயை அணைக்கவும். தீ புண்ணில் குளிர்ந்த நீரை ஊற்றவும். பேனா மை, எண்ணெய் போன்றவைகளை உபயோகிக்கக்கூடாது. தீக்காயத்தை அழுத்தித் துடைக்க கூடாது. புகை சூழ்ந்து உள்ள இடத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும்.

    தீ விபத்து ஏற்பட்டால் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும். தொழில் கூடங்களில் தீயை ஆரம்பநிலையில் அணைக்க தீதடுப்பு சாதனங்களை உபயோகிக்க வேண்டும். தொழில் கூடம் மற்றும் பணி செய்யும் இடங்களில் பாதுகாப்பு சாதனங்களை அணியவேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு குறிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. இதில் வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். மேலும் ஒரு வாரத்திற்கு தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு வெள்ளகோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பொதுமக்களுக்கு தீ தடுப்பு ஒத்திகையும் செய்து காண்பிக்கப்படும் என வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் தெரிவித்தார்.

    • ஏப்ரல் மாதம் ஒரு வார காலம் தீயணைப்பு தொண்டு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது
    • பள்ளி மாணவ மாணவிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு கருத்துக்களை பேசினர்.

    கன்னியாகுமரி :

    தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டு உயிர்நீத்த அலுவலர் மற்றும் பணியாளர்களின் தியாகத்தினை போற்றும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் ஒரு வார காலம் தீயணைப்பு தொண்டு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தொண்டு வார விழாவையொட்டி பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து தென்தாமரைகுளத்தில் நேற்று மாலை கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) ஜவகர் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் தீயணைக்கும் படை வீரர்கள் ஸ்ரீனிவாசன், விவேகானந்தன், முருகன் அந்தோணி ராஜ் அசோக் குமார் ஆகியோர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு கருத்துக்களை பேசினர்.

    • ஆற்றில் மீன்பிடிப்பதற்காக 7 பேர் கொண்ட குழுவுடன் தனித்தனி படகில் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
    • காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறை நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே எய்யலூர் கிராமத்திற்கு உட்பட்ட மேல் பாதி பகுதியைச் சேர்ந்தவர் சங்கரன் (வயது 47). மீன்பிடி தொழிலாளி. சங்கரனின் மனைவி சில மாதங்களுக்கு முன்பு இறந்த நிலையில் 18 வயதில் ஒரு ஆண் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடிப்பதற்காக 7 பேர் கொண்ட குழுவுடன் தனித்தனி படகில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இதனை அடுத்து மீன் பிடித்து விட்டு ஆறு பேர் வந்துவிட்டனர். இதில் சங்கரன் கரை திரும்பவில்லை. இதனை அறிந்த சங்கரனின் குழந்தைகள் பதறிப் போய் காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறை நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீன்பிடிக்க சென்று நீரில் மாயமான சங்கரனை தேடுபணியில் ஈடுபட்டு வந்தனர். 3-வது நாளான இன்றும் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் வருவாய் துறையினரும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விளாத்திகுளம் சத்யாநகர் பகுதியை சேர்ந்த மாரிச்சாமியின் வீட்டிற்குள் 5 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது.
    • ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடித்தனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் சத்யாநகர் பகுதியை சேர்ந்தவர் மாரிச்சாமி. இவரது வீட்டிற்குள் திடீரென 5 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனை கண்ட வீட்டில் உள்ளவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விரைந்து வந்த ராதாகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடிக்க முயன்றபோது பாம்பு வீட்டுக்குள் இருந்த பீரோவுக்கு அடியில் சென்று மறைந்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடித்தனர். பிடிபட்ட சாரைப்பாம்பை கொண்டு சென்று அடர்ந்த காட்டுப் பகுதியில் விட்டனர்.

    • கிணற்றுக்குள் இருந்து காப்பாற்றுங்கள் ,காப்பாற்றுங்கள், என சத்தம் கேட்டது.
    • சிகிச்சைக்காக அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் கடைவீதி பின்புறமுள்ள சிதம்பரனார் வீதியில் சுப்ரமணியம் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இதில் சுமார் 7 அடி அகலமும் 30 அடி ஆழம் உடைய கிணறு உள்ளது. இந்த நிலையில், நேற்று அதிகாலையில். கிணற்றுக்குள் இருந்து காப்பாற்றுங்கள் ,காப்பாற்றுங்கள், என சத்தம் கேட்டது. இதையடுத்து அங்குள்ளவர்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது, உள்ளே ஒருவர் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து பல்லடம் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள், சம்பவ இடத்திற்கு வந்து கயிற்றின் மூலம் அவரை மீட்டனர். பின்னர் பல்லடம் போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் கோவை மாவட்டம் சூலூர் தாலுகா, வதம்பச்சேரி ஊராட்சி, நல்லூர் பாளையத்தைச் சேர்ந்த மவுனராஜ், (வயது 30) என்பதும், குடிபோதையில் நண்பரை தேடி வந்தவர், தொட்டி என நினைத்து கிணற்றுக்குள் விழுந்து விட்டது தெரியவந்தது.

    இதையடுத்து சிகிச்சைக்காக அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    • பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு கருவிகளை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையிடம் வழங்கினார்.
    • முழு கவச உடை ரூ.1,16,435 என ஆகமொத்தம் ரூ.5,56,551 மதிப்பிலான 34 கருவிகள் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டரின் தன்விருப்ப நிதி மற்றும் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு கருவிகளை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையிடம் வழங்கி, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

    வருகின்ற வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இச்சூழ்நிலையில் தீயணைப்பு துறையின் மூலம் பயன்படுத்தப்படும் மேம்படுத்தப்பட்ட கருவிகளை கொண்டு பொதுமக்களை பேரிடர்களிலிருந்து மீட்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தன்விருப்ப நிதி மற்றும் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து 2 எண்ணிக்கையிலான விபத்து மற்றும் மீட்பு பணியின் பொழுது இரும்பு கம்பிகளை சுலபமாக வெட்டும் கருவி ரூ.2,24,200 மதிப்பீட்டிலும்,

    மேலும் 2 எண்ணிக்கையிலான நீர் நிலைகள் மற்றும் கிணற்றுக்குள் மூழ்கி தவிப்பவர்களை தெரிந்துகொள்வதற்கான கேமரா, 2 எண்ணிக்கையிலான வெள்ளம் சூழ்ந்த இடங்களிலிருந்து நீரினை வெளியேற்றும் கருவி ஆகியவை ரூ.1,19,876 மதிப்பீட்டிலும், புகை சூழுந்த நிலையில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் கருவி ரூ.75,040 மதிப்பீட்டிலும்,

    5 எண்ணிக்கையிலான கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை மீட்கும் வகையில் கான்கிரிட் தளங்கள் மற்றும் இரும்புகளை அகற்றும் கருவி ரூ.21,000 மதிப்பீட்டிலும், 11 எண்ணிக்கையிலான பாம்பு பிடிக்கும் கருவி, 11 எண்ணிக்கையிலான முழு கவச உடை ரூ.1,16,435 என ஆகமொத்தம் ரூ.5,56,551 மதிப்பிலான 34 கருவிகள் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இக்கருவிகளை முழுமையாக பயன்படுத்தி பேரிடர் காலங்களில் பொதுமக்கள், கால்நடைகள் மற்றும் உடைமைகளை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் பாதுகாக்க வேண்டும் என கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுபிரியா, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சூரியபிரபு மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • விளையாட்டுப் போட்டிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு 52 வீரர்கள் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் தீயணைப்பு துறை சார்பில் நாகப்பட்டினத்தில் நடைபெறும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு 52 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 36 வீரர்கள் அணிவகுப்பு மற்றும் கயிறு ஏறுதல் போன்ற தேர்வுகள் மூலம் தேர்வு செய்யபட்டனர். இதில் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் குமார், நிலைய அலுவலர் விஜயகுமார், மற்றும் பண்ருட்டி நிலைய அலுவலர் ஜமுனா ராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.
    • நாகை மாவட்ட பேரிடர் பயிற்றுனர் அன்னபூரணி மற்றும் வாய்மேடு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் (பொறுப்பு) கண்ணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம்அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சிவகுரு பாண்டியன் தலைமை தாங்கினார் . பெண்கள் மற்றும் பேரிடர் குழு உறுப்பினர்களுக்கும் கிராம மக்களுக்கும் நாகை மாவட்ட பேரிடர்பயிற்றுனர் அன்னபூரணி மற்றும் வாய்மேடு தீயணைப்பு த்துறை நிலைய அலுவலர் பொறுப்பு கண்ணன்மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டுபயிற்சி அளித்தனர்.நிகழ்ச்சியில்ஊ ராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதி கள்உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×