search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்தாமரைகுளத்தில் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்
    X

    தென்தாமரைகுளத்தில் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்

    • ஏப்ரல் மாதம் ஒரு வார காலம் தீயணைப்பு தொண்டு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது
    • பள்ளி மாணவ மாணவிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு கருத்துக்களை பேசினர்.

    கன்னியாகுமரி :

    தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டு உயிர்நீத்த அலுவலர் மற்றும் பணியாளர்களின் தியாகத்தினை போற்றும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் ஒரு வார காலம் தீயணைப்பு தொண்டு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தொண்டு வார விழாவையொட்டி பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து தென்தாமரைகுளத்தில் நேற்று மாலை கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) ஜவகர் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் தீயணைக்கும் படை வீரர்கள் ஸ்ரீனிவாசன், விவேகானந்தன், முருகன் அந்தோணி ராஜ் அசோக் குமார் ஆகியோர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு கருத்துக்களை பேசினர்.

    Next Story
    ×