search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ட்ரஷர் ஐலண்ட் பள்ளி"

    • 6-ம் மற்றும் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட் - ஐ.ஐ.டி. அடிப்படைக்கான மாதிரி வகுப்புகள் நடைபெற்றது.
    • அறிமுக வகுப்பை ஆசிரியர் யாஷ் சர்மா இணைய வழியில் நடத்தினார்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் 2023-24-ம் கல்வியாண்டில் இருந்து 6-ம் வகுப்பு முதல் நீட் - ஐ.ஐ.டி. அடிப்படை பயிற்சிக்கான வகுப்புகள் தொடங்கி உள்ளது. அதன் முன்னோட்டமாக 6-ம் மற்றும் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட் - ஐ.ஐ.டி. அடிப்படைக்கான மாதிரி வகுப்புகள் நடைபெற்றது.

    வகுப்புகள் ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்களால் இணைய வழியில் நடத்தப்படுகிறது. அறிமுக வகுப்பை ஆசிரியர் யாஷ் சர்மா நடத்தினார். இதில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஐ.ஐ.டி., நீட் போன்ற போட்டி தேர்வுகளில் வெற்றி பெற 6-ம் வகுப்பு முதலே மாணவர்கள் அடிப்படை பயிற்சி வழங்க பள்ளி நிர்வாகம் எடுத்த முயற்சிக்கு மாணவர்களின் பெற்றோர் பாராட்டு தெரிவித்துள்னனர்.

    • பூமியை பாதுகாப்பதற்கான நோக்கங்கள் குறித்த பதாகைகள் பள்ளியின் வளாகத்தில் அமைக்கப்பட்டது.
    • மாணவ-மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் பூமியை பாதுகாப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் ஒவ்வொரு மாதமும் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு தலைப்பு தேர்வு செய்யப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன் பேரில் பூமியை பாதுகாத்தல் என்னும் தலைப்பு தேர்வு செய்யப்பட்டது. மாணவ-மாணவிகள் ஆசிரியர்களின் துணையோடு பூமியை பாதுகாப்பதற்கான நோக்கங்கள் மற்றும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் பதாகைகளை பள்ளியின் வளாகத்தில் அமைத்தனர். மேலும் அறிவியல் ஆசிரியைகள் ராஜேஸ்வரி, அபிஷா மற்றும் ரெக்ஸி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பூமியை பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.

    முடிவில் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரிய,ஆசிரியர்கள் அனைவரும் பூமியை பாதுகாப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர். விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் முன்னிலை வகித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் துணை முதல்வர் அருள் வர்ஷலா செய்திருந்தார்.

    • தேர்வு எழுதிய 17 பேரும் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றனர்.
    • மாணவி ரோஷன் சபிக்கா கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றார்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த 17 மாணவ, மாணவிகள் 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வை எழுதினர். இதில் தேர்வு எழுதிய 17 பேரும் சிறந்த மதிப்பெண்களுடன் 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.

    இப்பள்ளி மாணவி ரோஷன் சபிக்கா கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். பாடவாரியாக அவர், தமிழில் 98, அறிவியலில் 92, சமூக அறிவியலில் 94 மதிப்பெண்களை பெற்று 94 சதவீதத்துடன் பள்ளியில் முதலிடத்தை பிடித்தார்.

    தொடர்ந்து 2-வது முறையாக 100 சதவீத வெற்றியை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த ஆசிரியர்களையும், மாணவ- மாணவிகளையும் பள்ளியின் நிறுவனர் முகமது பண்ணையார், தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • உளவியல் ஆலோசகர் சத்திய பிரியங்கா மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கி கூறினார்.
    • நிகழ்ச்சியில் 6 முதல் முதல் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சித்த மருத்துவர் மற்றும் குழந்தைகள் உளவியல் ஆலோசகர் சத்திய பிரியங்கா கலந்து கொண்டு மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் உடல் நலத்தை பேணி பாதுகாப்பதற்கான நெறிமுறைகள் பற்றி விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள ட்ரஷர் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களுடைய சந்தேகங்களையும், ஆலோசனைகளையும் கேட்டு தெரிந்து கொண்டனர்.

    • சர்வதேச செஸ் கூட்டமைப்பில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த மாணவர்கள்உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.
    • மாணவன் ஜெகத் பிரபு 1204 புள்ளிகளை பெற்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு புள்ளி பட்டியலில் இடம் பிடித்தார்.

    தென்காசி:

    உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் சர்வதேச செஸ் கூட்டமைப்பில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த மாணவர்கள், சதுரங்க விளையாட்டு வீரர்கள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இந்த சர்வதேச கூட்டமைப்பு வீரர்களின் புள்ளி பட்டியலை அறிவித்த நிலையில் அதில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவன் ஜெகத் பிரபு 1204 புள்ளிகளை பெற்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு புள்ளி பட்டியலில் இடம் பிடித்தார். சாதனை படைத்த மாணவனை பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.

    • சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் சின்னதாய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
    • விழாவில் பங்கேற்ற மாணவர்களை, சிறப்பு விருந்தினர் பாராட்டி பேசினார்.

    தென்காசி:

    ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் மழலையர் பிரிவு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் சின்னதாய் கலந்து கொண்டார். பள்ளி நிறுவனர்கள் முகமது பண்ணையார், பாத்திமா மற்றும் சேர்மன் டாக்டர் சேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மாணவர்களை, சிறப்பு விருந்தினர் பாராட்டி பேசி பட்டங்களை வழங்கி வாழ்த்தினர்.

    • சதுரங்க போட்டியில் பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • போட்டியில் கலந்து கொண்ட மாணவன் சமேரியா மேவிஸ் 2-ம் இடத்தை பிடித்தார்.

    தென்காசி:

    ஐ.பி.எல். செஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த மாணவன் சமேரியா மேவிஸ் 9 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் கலந்து கொண்டு 2-ம் இடத்தை பிடித்து சுழல் கோப்பை மற்றும் சான்றிதழ் பெற்றார். வெற்றி பெற்ற மாணவன் சமேரியா மேவிசை பள்ளி தாளாளர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.

    • மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் பள்ளி மாணவன் ஜெகத் பிரபு 4-வது இடத்தை பிடித்தார்.
    • வெற்றி பெற்ற மாணவர்களை தாளாளர்,பள்ளி முதல்வர் பாராட்டினர்.

    தென்காசி:

    குயின் செஸ் அகாடமி நடத்திய மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியானது இரு வேறு இடங்களில் நடைபெற்றது. இதில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவன் ஜெகத் பிரபு 4-வது இடத்தை பிடித்து சுழல் கோப்பை மற்றும் சான்றிதழ் பெற்றார்.

    இதேபோல் தென்காசி செஸ் பெற்றோர் கமிட்டி நடத்திய மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர்கள் ஜெகத் பிரபு, அகமது இர்ஷத் கலந்துகொண்டு சான்றிதழ் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.

    • செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
    • பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை கூறினர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி கலந்துகொண்டு மாணவர்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாட அறிவுறுத்தினார்.

    பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் தீபாவளி கொண்டாடுவதன் நோக்கம் பற்றிய சிறப்புரையாற்றினார். மேலும் நிகழ்ச்சியின் முடிவில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை கூறினர்.

    • சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் 3 மாணவர்கள் தமிழ் மொழியில்100-க்கு 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
    • சிறந்த வெற்றியை பெற்றதற்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பள்ளியின் செயலாளர் முகமது பண்ணையார் வாழ்த்தினார்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்கள் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் முதல் ஆண்டிலேயே வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்கள் முகமது பாஹிம் 91.6 சதவீதம் பெற்று முதலிடமும், முகமது உசேன் 83.4 சதவீதம் பெற்று 2-ம் இடமும், முகமது சபீர் 82.2 சதவீதம் பெற்று 3-ம் இடம் பிடித்தனர்.

    3 மாணவர்கள் தமிழ் மொழியில்100-க்கு 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பள்ளி சராசரி மதிப்பெண் 70 சதவீதம் ஆகும். பொதுத்தேர்வை எதிர்கொண்ட முதல் ஆண்டிலேயே சிறந்த வெற்றியை பெற்றதற்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பள்ளியின் செயலாளர் முகமது பண்ணையார், பள்ளியின் தாளாளர் ஷேக் செய்யது அலி, முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டது. இந்த தேர்வில் மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

    ×