search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
    X

    சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

    • தேர்வு எழுதிய 17 பேரும் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றனர்.
    • மாணவி ரோஷன் சபிக்கா கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றார்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த 17 மாணவ, மாணவிகள் 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வை எழுதினர். இதில் தேர்வு எழுதிய 17 பேரும் சிறந்த மதிப்பெண்களுடன் 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.

    இப்பள்ளி மாணவி ரோஷன் சபிக்கா கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். பாடவாரியாக அவர், தமிழில் 98, அறிவியலில் 92, சமூக அறிவியலில் 94 மதிப்பெண்களை பெற்று 94 சதவீதத்துடன் பள்ளியில் முதலிடத்தை பிடித்தார்.

    தொடர்ந்து 2-வது முறையாக 100 சதவீத வெற்றியை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த ஆசிரியர்களையும், மாணவ- மாணவிகளையும் பள்ளியின் நிறுவனர் முகமது பண்ணையார், தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    Next Story
    ×