search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டூட்டி பேட்ரியாட்ஸ்"

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் இன்றைய போட்டியில் காரைக்குடி காளை அணியை 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டூட்டி பேட்ரியாட்ஸ். #TNPL2018 #KKvTP
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 28-வது மற்றும் கடைசி லீக் திருநெல்வேலியில் நடைபெற்றது. காரைக்குடி காளைக்கு எதிராக டூட்டி பேட்ரியாட்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி காரைக்குடி காளை அணியின் வி ஆதித்யா, ஸ்ரீகாந்த் அனிருதா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆதித்யா 31 பந்தில் 37 ரன்னும், அனிருதா 23 பந்தில் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த ஷாஜஹான் 17 பந்தில் 20 ரன்களும், ராஜ்குமார் 10 ரன்களில் வெளியேறினாலும், ராஜாமணி ஸ்ரீனிவாசன் அவுட்டாகாமல் 29 பந்தில் 46 ரன்கள் அடிக்க காரைக்குடி காளை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.



    பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி சேசிங் செய்ய தொடங்கியது. அந்த அணியின் கேப்டன் கவுஷிக் காந்தி மற்றும் தினேஷ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 

    இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், சுவாமிநாதன் வீசிய 4-வது ஓவரில் கவுஷிக் காந்தி பாஃப்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 10 பந்துகளில் 2 சிக்சர் ஒரு பவுண்டரி உள்பட 20 ரன்கள் அடித்திருந்தார்.

    அடுத்து, தினேஷ் 16 பந்துகளில் 23 ரன்கள் அடித்திருந்த நிலையில் சுவாமிநாதன் வீசிய பந்தில் பௌல்டு ஆகி வெளியேறினார். சுப்ரமணியம் ஆனந்த் 32, நிதிஷ் ராஜகோபால் 18 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ராஜகோபால் சதீஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

    அதன்பின், அபிஷேக் 7, ரங்கராஜன் 2 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினாலும், சதீஷின் சிறப்பான ஆட்டத்தினால், 19.2 ஓவரில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்து டூட்டி பேட்ரியாட்ஸ் அணி வெற்றி பெற்றது. அந்த அணியில் ராஜகோபால் சதீஷ் 57 ரன்களுடனும், கனேஷ் மூர்த்தி ஒரு ரன்னுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    காரைக்குடி காளை அணியின் சுவாமிநாதன் 3 விக்கெட்டுக்களையும், யோ மகேஷ், பாஃப்னா, ராஜ்குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். ராஜகோபால் சதீஷ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

    இன்றைய போட்டியில் 18.4 ஓவரில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 165 ரன்களை அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த டூட்டி பேட்ரியாட்ஸ் 19.2 ஓவரில் வெற்றியை வசப்படுத்தியதால் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் நூலிழையில் தொடரை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது. #TNPL2018 #KKvTP
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் டூட்டி பேட்ரியாஸ்க்கு 165 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது காரைக்குடி காளை. #TNPL2018 #KKvTP
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 28-வது மற்றும் கடைசி லீக் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. காரைக்குடி காளைக்கு எதிராக டூட்டி பேட்ரியாட்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி காரைக்குடி காளை அணியின் வி ஆதித்யா, ஸ்ரீகாந்த் அனிருதா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆதித்யா 31 பந்தில் 37 ரன்னும், அனிருதா 23 பந்தில் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.



    அதன்பின் வந்த ஷாஜஹான் 17 பந்தில் 20 ரன்களும், ராஜ்குமார் 10 ரன்களில் வெளியேறினாலும், ராஜாமணி ஸ்ரீனிவாசன் அவுட்டாகாமல் 29 பந்தில் 46 ரன்கள் அடிக்க காரைக்குடி காளை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.

    பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டூட்டி பேட்ரியாட்ஸ் விளையாடி வருகிறது.
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் இன்றைய போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தியது. #TNPL2018 #TPvTW
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 23-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. டூட்டி பேட்ரியாட்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி டூட்டி பேட்ரியாட்ஸ் அணியின் எஸ் தினேஷ், கவுசிக் காந்தி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கவுசிக் காந்தி 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். எஸ் தினேஷ் 18 பந்தில் 30 ரன்கள் சேர்த்தார்.

    நிதிஷ் ராஜகோபால் 26 பந்தில் 41 ரன்களும், எஸ் அபிஷேக் 27 பந்தில் 30 ரன்களும் அடிக்க ரூட்டி பேட்ரியாட்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்தது. திருச்சி வாரியர்ஸ் அணி சார்பில் சோனு யாதவ், குமரன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.



    பின்னர், 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி வாரியர்ஸ் சேசிங் செய்ய தொடங்கியது. அந்த அணியில் பரத் ஷங்கர் மற்றும் மணி பாரதி ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர். கனேஷ் வீசிய 8-வது ஓவரில் மணி பாரதி 26 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்திருந்த பரத் ஷங்கர், 51 ரன்களில் கனேஷ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சுரேஷ் குமார் ரன் அடிக்காமலேயே வந்த வேகத்தில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் பாபா இந்திரஜித்தும், கனபதியும் அதிரடியாக விளையாடினர்.

    இதனால், 19 ஓவர் முடிவிலேயே 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்து ரூபி திருச்சி வாரியர்ஸ் வெற்றி பெற்றது. பாபா இந்திரஜித் 50 ரன்கள், கனபதி 27 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். டூட்டி பேட்ரியாட்ஸ் அணி தரப்பில் கனேஷ் 2 விக்கெட்டுக்களையும், ரங்கராஜன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

    சிறப்பாக விளையாடி ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்ட பாபா இந்திரஜித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #TNPL2018 #TPvTW
    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டூட்டி பேட்ரியாட்சை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    சென்னை:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்தப்போட்டியின் 18-வது ‘லீக்’ ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று (28-ந்தேதி) நடக்கிறது. இதில் கோபிநாத் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- கவுசிக் காந்தி தலைமையிலான டூட்டி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் தோற்று அடுத்த சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது. அந்த அணி திருச்சி வாரியர்ஸ் (31 ரன்), மதுரை பாந்தர்ஸ் (26 ரன்), காரைக்குடி காளை (47 ரன்), கோவை கிங்ஸ் (53 ரன்) ஆகியவற்றிடம் தோற்று இருந்தது.

    இழந்த பெருமையை மீட்கும் வகையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டூட்டி பேட்ரியாட்சை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல் 4 ஆட்டத்திலும் சேசிங்கில் தோற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இன்றைய ஆட்டத்தில் ‘டாஸ்’ வெல்லும் பட்சத்தில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யலாம்.

    முன்னாள் சாம்பியனான டூட்டி பேட்ரியாட்ஸ் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. முதல் 2 ஆட்டத்தில் அந்த அணி காஞ்சி வீரன்ஸ் (48 ரன்), கோவை கிங்ஸ் (11 ரன்) வீழ்த்தியது. 3-வது மற்றும் 4-வது ஆட்டத்தில் முறையே மதுரை பாந்தர்ஸ் (7 விக்கெட்), திண்டுக்கல் டிராகன்ஸ் (4 விக்கெட்) அணிகளிடம் தோற்றது.

    ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் டூட்டி பேட்ரி யாட்ஸ் இருக்கிறது.

    நடப்பு சாம்பியனும், முன்னாள் சாம்பியனும் மோதுவதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-1, ஸ்டோர் ஸ்போர்ட்ஸ் தமிழ் ஆகிய சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல் அணியுடன் டூட்டி பேட்ரியாட்ஸ் மோதுகிறது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    திண்டுக்கல்:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியின் 14-வது ‘லீக்’ ஆட்டம் திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ்- டூட்டி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது.

    அந்த அணி தொடக்க ஆட்டத்தில் திருச்சி வாரியர்சிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதைத் தொடர்ந்து மதுரை பாந்தர்ஸ் (9 விக்கெட்), கோவை கிங்ஸ் (8 விக்கெட்), காஞ்சி வீரன்ஸ் (7 விக்கெட்) ஆகிய அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்தியது.

    இன்றைய ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்சை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. திண்டுக்கல் அணியில் பேட்டிங்கில் ஜெகதீசன் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். தொடக்க வீரரான அவர் 4 ஆட்டங்களில் 183 ரன்கள் குவித்து 2-வது இடத்தில் உள்ளார். இவர் ஷாருக்கானை (208 ரன்) முந்தி முதல் இடத்தை பிடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    முன்னாள் சாம்பியனான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் 2 வெற்றி, 1 தோல்வியுடன் 4 புள்ளி பெற்றுள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் காஞ்சி வீரன்சையும் (48 ரன்) 2-வது ஆட்டத்தில் கோவை கிங்சையும் (11 ரன்) வென்றது. 3-வது ஆட்டத்தில் மதுரை பாந்தர்சிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல்லை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது. தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் கேப்டன் கவுசிக் காந்தி பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளார். அவர் காஞ்சி வீரன்ஸ் அணிக்கு எதிராக சதம் (111 ரன்) அடித்து முத்திரை பதித்து இருக்கிறார்.

    இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    தொடக்க வீரர்களின் அதிரடியால் கோவை கிங்ஸ்க்கு 183 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டூட்டி பேட்ரியாட்ஸ். #TTvLKK #TUTIPatriots
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டூட்டி பேட்ரியாட்ஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி டூட்டி பேட்ரியாட்ஸ் அணியின் கவுசிக் காந்தி, எஸ் தினேஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கவுசிக் காந்தி 25 பந்தில் தலா மூன்று பவுண்டரி, மூன்று சிக்சருடன் 43 ரன்களும், எஸ் தினேஷ் 42 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.



    அடுத்து வந்த சுப்ரமணியன் ஆனந்த் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். 4-வது வீரராக களம் இறங்கிய அக்சேய் ஸ்ரீனிவாசன் அதிரடியாக விளையாடி 21 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 45 ரன்கள் குவித்தார். அக்சேய் ஸ்ரீனிவாசன் அவுட்டாகும்போது டூட்டி பேட்ரியாட்ஸ் 15.4 ஓவரில் 152 ரன்கள் குவித்திருந்தது.



    அதன்பின் டூட்டி பேட்ரியாட்ஸின் ரன்குவிப்பில் சற்று தொய்வு ஏற்பட்டது. கடைசி 26 பந்தில் 30 ரன்கள் மட்டுமே எடுத்ததால், டூட்டி பேட்ரியாட்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. கோவை கிங்ஸ் அணி சார்பில் நடராஜன், அஜித் ராம், பிரசாந்த் ராஜேஷ் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லைகா கோவை கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் இன்றைய முதல் ஆட்டத்தில் 48 ரன் வித்தியாசத்தில டூட்டி பேட்ரியாட்ஸ் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தியது #TNPL2018
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் டூட்டி பேட்ரியாட்ஸ் - விபி காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற டூட்டி பேட்ரியாட்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் எஸ் தினேஷ், கேப்டன் கவுசிக் காந்தி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தினேஷ் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்து சுப்ரமணியன் ஆனந்த் 27 பந்தில் பந்தில் 37 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த ராஜகோபால் சதிஷ் 9 பந்தில் 17 ரன்கள் சேர்த்தார்.

    ஆனால் தொடக்க வீரராக களம் இறங்கிய கேப்டன் கவுசிக் காந்தி தொடக்கம் முதல் முடிவு வரை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 68 பந்தில் 13 பவுண்டரி, 3 சிக்சருடன் 111 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க டூட்டி பேட்ரியாட்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது.



    பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விபி காஞ்சி வீரன்ஸ் அணியினர் களம் இறங்கினர். தொடக்க வீரர் கே விஷால் வைத்யா 33 ரன்கள் சேர்த்தார். மற்றொரு தொடக்க வீரர் சித்தார்த் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

    கேப்டன் பாபா அபரஜித் 29 ரன்களும், வி சுப்ரமணிய சிவா 33 ரன்களும் எடுக்க விபி காஞ்சி வீரன்ஸ் அணியால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் டூட்டி பேட்ரியாட்ஸ் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ×