search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎன்பிஎல் 2018- டூட்டி பேட்ரியாட்ஸ்க்கு 165 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது காரைக்குடி காளை
    X

    டிஎன்பிஎல் 2018- டூட்டி பேட்ரியாட்ஸ்க்கு 165 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது காரைக்குடி காளை

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் டூட்டி பேட்ரியாஸ்க்கு 165 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது காரைக்குடி காளை. #TNPL2018 #KKvTP
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 28-வது மற்றும் கடைசி லீக் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. காரைக்குடி காளைக்கு எதிராக டூட்டி பேட்ரியாட்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி காரைக்குடி காளை அணியின் வி ஆதித்யா, ஸ்ரீகாந்த் அனிருதா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆதித்யா 31 பந்தில் 37 ரன்னும், அனிருதா 23 பந்தில் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.



    அதன்பின் வந்த ஷாஜஹான் 17 பந்தில் 20 ரன்களும், ராஜ்குமார் 10 ரன்களில் வெளியேறினாலும், ராஜாமணி ஸ்ரீனிவாசன் அவுட்டாகாமல் 29 பந்தில் 46 ரன்கள் அடிக்க காரைக்குடி காளை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.

    பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டூட்டி பேட்ரியாட்ஸ் விளையாடி வருகிறது.
    Next Story
    ×