search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் கடை"

    • கடையை அப்புறப்படுத்த அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.
    • அம்மாபேட்டை ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

     அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அடுத்துள்ள முளியனுர் கிராமத்தில் 200-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    இங்கு மதுக்கடை இருப்பதால் தங்கள் பகுதியில் இருக்கும் வாலிபர்கள் வேலைக்கு கூட செல்லாமல் குடித்து விட்டு சீரழிந்து வருகின்றனர். மேலும் இந்தக் கடையில் வாலிபர்கள் அடிக்கடி குடித்துவிட்டு குடிபோதையில் வாகனங்களில் செல்வதால் வாகன விபத்து ஏற்படுகிறது.

    எனவே இந்த மது கடையை அப்புறப்படுத்த வேண்டும் என அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், கடையை அப்புறப்படுத்த அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 70-க்கும் மேற்பட்டோர் இன்று அந்தியூர்-மேட்டூர் மெயின் ரோட்டில் முளியனூர் பிரிவு என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீசார் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மதுக்கடையை அப்புறப்படுத்த அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறினர்.

    இதையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்துகளைந்து சென்றனர். இதனால் அந்தியூர் அம்மாபேட்டை ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • டாஸ்மாக் கடையில் நேற்று இரவு ஒருவர் மது பாட்டிலை வாங்கிச் சென்றார்.
    • குடிமகன்கள் வாக்குவாதம் செய்தனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த வீரகமோடு பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

    இந்த கடையில் நேற்று இரவு ஒருவர் மது பாட்டிலை வாங்கிச் சென்றார். அப்போது அதனை திறந்து பார்த்தபோது அந்த மது பாட்டிலில் பல்லி இறந்து கிடந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அந்த டாஸ்மாக் கடைக்கு சென்று இந்த மது பாட்டிலில் பல்லி உள்ளது. இதை மாற்றித் தரும்படி கேட்டார்.

    இதற்கு டாஸ்மாக் கடை ஊழியர்கள் மூடி திறந்த நிலையில் உள்ளது. இதனை நாங்கள் எப்படி நம்புவது மேலும் மது பாட்டிலை எதற்காக திறந்து எடுத்து வந்தீர்கள். அப்படியே எடுத்துக் கொண்டு வர வேண்டியது தானே என பல்வேறு கேள்விகளை கேட்டனர். அவர்களிடம் குடிமகன்கள் வாக்குவாதம் செய்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த நபர் தனது செல்போனில் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்தார்.

    மேலும் நான் மது போதையில் இருக்கிறேன். தெரியாமல் பல்லி விழுந்த பாட்டிலில் உள்ள மதுவை நான் குடித்திருந்தால் இந்த நேரம் செத்துபோய் இருப்பேன். எனது சாவுக்கு யார் காரணம்? என பல்வேறு கேள்விகளை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

    • சின்னஓவுலாபுரம் (வெள்ளக்கரடு) ஊராட்சி களில் நெடுஞ்சாலை யோரத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன.
    • இந்த மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியும், மாவட்ட நிா்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதிமக்கள் தெரிவித்தனா்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூா் ஒன்றியத்தைச் சோ்ந்த எரசக்கநாயக்கனூா், சின்னஓவுலாபுரம் (வெள்ளக்கரடு) ஊராட்சி களில் நெடுஞ்சாலை யோரத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்தக் கடைக ளில் மது அருந்திவிட்டு வரும் குடிமகன்களால் அந்த வழியாகச் செல்லும் பெண்கள், குழந்தைகள் பல இன்னல்களுக்கு ஆளாகி ன்றனா்.

    இது தவிர தினமும் மது போதையில் வாகனங்களை இயக்குவோரால் விபத்து க்கள் ஏற்படுவதுடன், பல இடங்களில் தகராறிலும் ஈடுபடுகின்றனா்.

    இதனால் அந்தப் பகுதி பொதுமக்களும் தாங்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பதாக தெரிவிக்கி ன்றனா்.

    இந்த மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி யும், மாவட்ட நிா்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவா்கள் தெரிவித்தனா். எனவே மாவட்ட நிா்வாகம் இந்த மதுக்கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தீபத்திருவிழாவை முன்னிட்டு நடவடிக்கை
    • கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடை பெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) முதல் 27-ந் தேதி வரை 3 நாட்கள் திருவண்ணாமலை நகரத்திற்கு அருகாமையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் மூடி வைக்கப்பட உள்ளது.

    அதன்படி காமராஜர் சிலை அருகில் உள்ள மதுபான கடை, வேங்கிக் கால் புறவழிச்சாலை உள்ள மதுபானக்கடை, மணலூர் பேட்டை சாலையில் உள்ள மதுபான கடைகள் மற்றும் திருவண்ணாமலை நகரில் தனியார் ஓட்டல்களில் இயங்கி வரும் மதுபான கூடங்கள், முன்னாள் ராணுவ வீரர்களுக் கான அங்காடி ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

    • மார்க்கெட் அருகே உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும்.
    • காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சுமார் ரூ.9 கோடிக்கு மதுவிற்பனை நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், ராஜாஜி மார்க்கெட் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மதுக்கடை செயல்படுவதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மது பிரியர்கள் இங்கு மதுவாங்கிவிட்டு சாலை யோரம் அமர்ந்து அங்கேயே குடித்து வருகின்றனர். இதனால் அவ்வழியே செல்ல பெண்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். அவர்கள் அந்த பாதையை தவிர்த்து சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    மேலும் போதை நபர்கள் அங்கேயே கும்பலாக நின்று ரகளையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடமாக விளங்கும் ராஜாஜி மார்க்கெட் வரவே பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மார்க்கெட் அருகே உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும். சாலையில் அமர்ந்து மது குடிப்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    தீபாவளி பண்டிகையின் போது காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சுமார் ரூ.9 கோடிக்கு மதுவிற்பனை நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'காட்பாதர்' என்ற பீர் பாட்டில் புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது.
    • வருகிற டிசம்பர் மாதத்துக்குள் இன்னும் 5 வகைகளில் புதிய பீர் பாட்டில்களை அறிமுகம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் தற்போது புதிதாக 2 வகைகளில் பீர் பாட்டில்களை அறிமுகம் செய்துள்ளது. குடிமகன்களின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த பீர் பாட்டில்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

    தற்போது 'தண்டர்போல்ட் ஸ்டிராங்' என்ற புதிய வகை பீர் பாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் நேற்று முன்தினம் இரவு முதல் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த பீர் பாட்டிலின் விலை ரூ.160 ஆகும். மேலும் மற்றொரு ரகமாக 'காட்பாதர்' என்ற பீர் பாட்டிலும் புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது.

    இந்த புதிய பீர் பாட்டில் வகைகளை தீபாவளி விருந்தாக குடிமகன்கள் பார்க்கிறார்கள். வருகிற டிசம்பர் மாதத்துக்குள் இன்னும் 5 வகைகளில் புதிய பீர் பாட்டில்களை அறிமுகம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

    • திருமங்கலம் அருகே டாஸ்மாக் கடை, ஓட்டலில் புகுந்து துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
    • கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில் பகுதியில் பெட்ரோல் நிலையம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதன் அருகே கருப்பையா என்பவருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. நேற்று இரவு டாஸ்மாக் ஊழியர் மாயாண்டி வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். சிறிது நேரத்தில் ஓட்டலும் மூடப்பட்டது.

    இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த விலை யுயர்ந்த மதுபாட்டில்கள் மற்றும் வசூல் பணத்தை திருடி சென்றதாக தெரி கிறது. அங்கு கைவரிசை காட்டிய பின்பு அருகில் இருந்த ஓட்டல் கதவை உடைத்து உள்ளே சென்றது.

    அங்கு நிதானமாக குளிர்சாதன பெட்டியில் இருந்த பானங்களை குடித்த மர்மநபர்கள் பின்னர் கல்லாபெட்டியில் இருந்த ரூ.7 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்றனர். இன்று காலை டாஸ்மாக் கடை-ஓட்டல் கதவு உடைக்கப் பட்டிருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி யடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கொள்ளையர்களின் தடயங்களும் சேகரிக்கப்பட்டது. அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • முடிவு தெரியாமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
    • மதுக்கடையால் பிரச்சினைகள் அதிகம் வர வாய்ப்புகள் உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள விருகல்பட்டியில் அரசு மதுபான கடை உள்ளது. தற்போது இந்த கடையை மூங்கில்தொழுவு அருகே உள்ள வி.வேலூர் பகுதிக்கு மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    இந்நிலையில் வி.வேலூர் பகுதியை சுற்றி உள்ள சுமார் 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று (திங்கட்கிழமை) காலையில் திடீரென ஒன்று திரண்டு இங்கு மதுக்கடை அமைக்க க்கூடாது என்ற கோஷ த்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடுமலை போலீஸ் டி.எ.ஸ்.பி. சுகுமாறன் தலைமையில் 80-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசம்பாவித சம்பவம் எதுவும் நடை பெறாமல் இருக்க பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை.இதனால் சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து போரா ட்டம் நடந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இதற்கு முடிவு தெரியாமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இது குறித்து வி.வேலூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது:- புதிதாக அமைய உள்ள மது க்கடையை சுற்றிலும் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அனைத்து மக்களும் இந்த மதுக்கடை வழியாகத்தான் சென்று வர வேண்டிய இடமாக உள்ளது. இதனால் இங்கு வரும் மதுபிரி யர்களால் எங்களுக்கு பெரும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தற்போது நாங்கள் நிம்மதி யாக வாழ்ந்து வரும் நிலையில், இந்த மது க்கடையால் பிரச்சினைகள் அதிகம் வர வாய்ப்புகள் உள்ளது. எனவே மதுக்கடையை இப்பகுதியில் அமைக்க கூடாது என்று கூறினர். 

    • பெண்கள் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என கூறி டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள தோமலஅள்ளி கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் எதிர்ப்பினால் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் அதே இடத்தில் திறக்க ஏற்பாடுகள் நடப்பதாக தெரிகிறது. இதனையடுத்து அந்த பகுதிசை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என கூறி டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது;-

    டாஸ்மாக் கடையை திறந்தால் வெளியூர் பகுதியில் இருந்து ஏராளமானோர் மது அருந்த வருவார்கள். இதனால் கிராமத்து பெண்கள் மற்றும் மாணவிகள் சென்று வர அச்சுறுத்தல் ஏற்படும். அதிகமான வாகன போக்குவரத்து ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அன்றாடம் தினக்கூலிக்கு செல்லும் ஆண்கள் சம்பள பணத்தை குடித்து தீர்த்து விடுவார்கள்.

    ஊரில் உள்ள வாலிபர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மது பழக்கத்துக்கு உள்ளாகும் வாய்ப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றனர்.

    மேலும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடையை திறந்தால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பேராட்டம் நடத்த போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் அவர்களிடம் பேச்சுவர்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக என உறுதியளித்ததின் பேரில் பெண்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பிரிட்டிஷ் எம்பயர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் இந்த பீர் 650 மில்லி லிட்டர், 325 மில்லி லிட்டர் அளவுகளில் வருகிறது.
    • சிறிய வகை ‘டின்’களிலும் பிரிட்டிஷ் எம்பயர் பீர் கிடைக்கும்.

    சென்னை:

    டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பல்வேறு நிறுவனங்களின் பிராந்தி, விஸ்கி, ஒயின், ரம் மற்றும் பீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே பல கம்பெனிகளின் பீர் தயாரிப்புகள் புழக்கத்தில் உள்ளன.

    தற்போது புதிதாக பீர் மதுபானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன் முதலாக பார்லி வகை தானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் பீர் டாஸ்மாக் கடைகளில் விரைவில் விற்பனைக்கு வருகிறது. பிரிட்டிஷ் எம்பயர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் இந்த பீர் 650 மில்லி லிட்டர், 325 மில்லி லிட்டர் அளவுகளில் வருகிறது.

    சூப்பர் ஸ்ட்ராங் பீர் என்ற புதிய தயாரிப்பின் பீர் விற்பனை பீர் பிரியர்களிடம் அதிக வரவேற்பை பெறும் என்று டாஸ்மாக் நிர்வாகம் கருதுகிறது.

    650 மி.லி முழு பாட்டில் விலை ரூ.200-ம் 325 மி.லி. அரை பாட்டில் விலை ரூ.100-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறிய வகை 'டின்'களிலும் பிரிட்டிஷ் எம்பயர் பீர் கிடைக்கும். இந்த பீர் சில நாட்களில் மதுக் கடைகளில் விற் பனைக்கு கிடைக்கும் என்று டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.

    • சில வருடங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது.
    • மது பிரியர்கள் குடியிருப்பு வீடுகளின் வாசல்படிகள் மற்றும் சாலையில் அமர்ந்து குடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்

    உடுமலை :

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பசுபதி வீதியில் கோயமுத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை மற்றும் உடுமலை நகர கூட்டுறவு வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. அத்துடன் பொதுமக்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்கள் கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள் இயங்கி வருவதுடன் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளது. இதனால் இந்த வீதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது.

    இந்த சூழலில் உடுமலை- தளி பிரதான சாலையை ஒட்டியவாறு இந்த சாலையின் நுழைவுப் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது.அங்கு மது பாட்டில்களை வாங்க வருகின்ற மது பிரியர்கள் குடியிருப்பு வீடுகளின் வாசல்படிகள் மற்றும் சாலையில் அமர்ந்து குடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும் சாலையில் இயற்கை உபாதைகளை கழிப்பதால் கடும் துர்நாற்றமும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    குறிப்பாக அந்த வீதி வழியாக பெண்கள் பகலில் கூட பாதுகாப்புடன் நடந்து செல்ல இயலாத சூழலே உள்ளது. இதனால் அச்சமடையும் பெண்கள் வங்கிகளில் கணக்கு தொடங்கி கடன்கள் பெறுவதற்கு கூட முன்வருவதில்லை.இதன் காரணமாக வங்கி சேவைகள் ஏழை எளிய நடுத்தர பெண்களுக்கு கிடைப்பதில் தடங்கல்கள் ஏற்படுவதுடன் வங்கிப் பணிகளும் பாதிக்கப்பட்டு வருகிறது. அதை உணர்த்தும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏடிஎம்., மையத்தின் கண்ணாடி உடைக்கப்பட்ட நிகழ்வு அரங்கேறியது. போதை ஆசாமிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டு கல்லை எடுத்து ஏடிஎம்., மையத்தின் கண்ணாடியை உடைத்து விட்டனர். அதைத் தொடர்ந்து பசுபதி வீதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. அதன் பின்பும் கூட கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் முன் வரவில்லை. ஏன் சிந்திக்கவும் கூட இல்லை என்றே சொல்லலாம். இதனால் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகின்ற பெண்கள் மற்றும் வங்கியில் பணி புரியும் பெண் பணியாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது.

    அதிகாரிகளின் இந்த செயலானது பொதுமக்கள் நலனுக்கு எதிராக உள்ளதால் அரசு மீது பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. எனவே பெண்கள் நலனை கருத்தில் கொண்டு பசுபதி வீதியில் இயங்கி வருகின்ற டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பது அனைத்து தரப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • பேச்சுவார்த்தை முடிவில் மதுபானகடை அங்கு செயல்படாது எனவும் தற்காலிகமாக மூடப்படும் என தெரிவித்தனர்.
    • மதுபான கடைக்கு மாற்று இடம் பார்த்துக் கொண்டிருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் - செட்டிபாளையம் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வந்தது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் மதுபான கடையில் தினமும் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் மது வாங்க வருவது வழக்கம். இந்த நிலையில் அங்கு மது வாங்க வரும் சிலர் அங்கேயே குடித்து விட்டு அருகிலுள்ள கடைகளுக்கு சென்று படுத்து உறங்குவதும்,ரோட்டிலேயே இயற்கை உபாதைகளை கழிப்பதும் என அந்த இடத்தையே அசிங்கப்படுத்தி வருவதாக கூறி, அந்த மதுபானகடையை அங்கிருந்து அகற்றக்கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என தொடர்ந்து போராடி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 30 ந் தேதி டாஸ்மாக் மதுபான கடையை மூடக்கோரி பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பாய், தலையணையுடன் பொதுமக்கள் குடியேறும் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து நடந்த பேச்சுவார்த்தை முடிவில் மதுபானகடை அங்கு செயல்படாது எனவும் தற்காலிகமாக மூடப்படும் என தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மதுபான கடையை மீண்டும் திறப்பதற்காக பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது டாஸ்மாக் திருப்பூர் மண்டல மேலாளர் சுப்பிரமணியம், பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், துணை தாசில்தார் சுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர். மதுபான கடைக்கு மாற்று இடம் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அதுவரை கடை செயல்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனை கடுமையாக எதிர்த்த பொதுமக்கள் கடை அங்கு மீண்டும் செயல்படக் கூடாது என வலியுறுத்தினர். ஏற்கனவே தாசில்தார் இங்கு கடை செயல்படக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளார் என பொதுமக்கள் கூறினர். மேற்கண்டவாறு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியாக அந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட விடமாட்டோம் என பொதுமக்கள் உறுதியாக தெரிவித்தனர்.

    ×