என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சாலையோரம் அமர்ந்து மது குடிக்கும் போதை கும்பலால் பெண்கள் அச்சம்
- மார்க்கெட் அருகே உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும்.
- காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சுமார் ரூ.9 கோடிக்கு மதுவிற்பனை நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், ராஜாஜி மார்க்கெட் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மதுக்கடை செயல்படுவதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மது பிரியர்கள் இங்கு மதுவாங்கிவிட்டு சாலை யோரம் அமர்ந்து அங்கேயே குடித்து வருகின்றனர். இதனால் அவ்வழியே செல்ல பெண்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். அவர்கள் அந்த பாதையை தவிர்த்து சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும் போதை நபர்கள் அங்கேயே கும்பலாக நின்று ரகளையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடமாக விளங்கும் ராஜாஜி மார்க்கெட் வரவே பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மார்க்கெட் அருகே உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும். சாலையில் அமர்ந்து மது குடிப்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தீபாவளி பண்டிகையின் போது காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சுமார் ரூ.9 கோடிக்கு மதுவிற்பனை நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்