search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜியோ"

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • ஸ்மார்ட்போன் உருவாக்குவதற்காக ஜியோ நிறுவனம் கூகுளுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

    ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45 ஆவது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கி வருவதாக அறிவித்து இருக்கிறது. இதற்காக கூகுள் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருப்பதாகவும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்து உள்ளது. கடந்த ஆண்டு ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலை அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து புதிய 5ஜி ஸ்மார்ட்போனிற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    5ஜி சார்ந்த சேவைகளை உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயனர்களுக்கு ஜியோவின் தனியார் 5ஜி ஸ்டாக் மூலம் வழங்க கூகுள் நிறுவனத்தின் மேம்பட்ட கிளவுட் சேவையை பயன்படுத்த இருக்கிறது. இத்துடன் மெட்டா நிறுவனத்துடன் இணைந்து தலைசிறந்த தொழில்நுட்பத்தை அனைவருக்கும் வழங்க இருப்பதாக ஜியோ அறிவித்துள்ளது.


    ஜியோவின் கிளவுட்-ஸ்கேல் டேட்டா செண்டர்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் தொழில்நுட்பம், 5ஜி எட்ஜ் லொகேஷன், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் இண்டெல் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக ஜியோ தெரிவித்து இருக்கிறது. இதுதவிர எரிக்சன், நோக்கியா, சாம்சங் மற்றும் சிஸ்கோ போன்ற நிறுவனங்களுடன் நல்லுறவு கொண்டு இருப்பதாகவும் அறிவித்து இருக்கிறது.

    இத்துடன் குவால்காம் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருப்பதாக ஜியோ அறிவித்து இருக்கிறது. சர்வதேச அளவில் முன்னணி செமிகண்டக்டர் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான குவால்காம் ஜியோ பிளாட்பார்ம்ஸ்-இல் முதலீடு செய்து இருக்கிறது. ஜியோவுடன் இணைந்து கிளவுட்-நேடிவ், 5ஜி உள்கட்டமைப்பு மற்றும் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது என குவால்காம் தலைமை செயல் அதிகாரி க்ரிஸ்டியானோ அமோன் தெரிவித்தார்.

    • வாட்ஸ்அப் செயலியில் இருந்தபடி ஷாப்பிங் செய்ய ஏதுவாக ஜியோமார்ட் ஆன் வாட்ஸ்அப் சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
    • இந்த சேவையின் மூலம் பயனர்கள் ஜியோமார்ட் பொருட்கள் அனைத்தையும் வாட்ஸ்அப்பில் இருந்தபடி வாங்கிக் கொள்ள முடியும்.

    ஜியோ பிளாட்பார்ம்ஸ் மற்றும் மெட்டா இணைந்து எண்ட்-டு-எண்ட் வாட்ஸ்அப் ஷாப்பிங் அனுபவத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் மூலம் ஜியோமார்ட் பொருட்கள் அனைத்தையும் சாட் மூலம் வாங்கிக் கொள்ளலாம். முதல் முறையாக ஜியோமார்ட் ஆன் வாட்ஸ்அப் மூலம் பயனர்கள் ஜியோமார்ட்-இல் கிடைக்கும் மளிகை பொருட்கள் மற்றும் அனைத்து விதமான பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம்.

    பொருட்கள் வாங்குவதோடு, பணம் செலுத்துவது என அனைத்தையும் வாட்ஸ்அப் சாட் மூலமாகவே செய்து கொள்ளலாம். சமீபத்தில் மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமில் பொருட்களை நேரடியாக சாட் விண்டோவில் இருந்தபடி வாங்கிக் கொள்ளும் வசதியை வழங்கி இருந்தது. மெட்டா மற்றும் ஜியோ பிளாட்பார்ம்ஸ் இடையேயான கூட்டணியின் அங்கமாக இந்த சேவை வழங்கப்பட்டு இருக்கிறது.


    ஜியோமார்ட் ஆன் வாட்ஸ்அப் மூலம் பல லட்சம் வியாபாரங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதி கிடைக்கும். சேவை அறிமுகம் செய்து இருப்பதோடு ஷாப்பிங் அனுபவத்தை எளிமையாக்கி, இதுவரை இல்லாத வகையில் சவுகரியமானதாக மாற்ற ஜியோமார்ட் முடிவு செய்துள்ளது.

    ஜியோமார்ட் ஆன் வாட்ஸ்அப்-பில் ஷாப்பிங் செய்வது எப்படி?

    வாட்ஸ்அப்-இல் இருந்தபடி ஜியோமார்ட்டில் ஷாப்பிங் செய்ய +917977079770 என்ற எண்ணிற்கு "Hi" என்று குறுந்தகவல் அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்த பின் ஜியோமார்ட் பொருட்களை வாட்ஸ்அப்-இல் வாங்க துவங்கலாம். 

    • அனைத்து நகரம், தாலுகா வாரியாக ஜியோ 5ஜி சேவை வழங்குவோம்.
    • மிக உயர்ந்த தரம் மற்றும் மலிவு விலையில் 5ஜி சேவை.

    மும்பை:

    ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45வது ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் பேசிய அதன் தலைவர் முகேஷ் அம்பானி கூறியதாவது:-

    ரிலையன்ஸ் ஜியோ உலகின் அதிவேக 5ஜி சேவை திட்டத்தை தயாரித்துள்ளது. தீபாவளிக்கு, டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய மெட்ரோ நகரங்கள் உட்பட பல முக்கிய நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவோம். அடுத்த ஆண்டு டிசம்பருக்குள், இந்தியாவின் அனைத்து நகரம், தாலுகா வாரியாக ஜியோ 5ஜி சேவையை வழங்குவோம்.

    ஜியோ 5ஜி சேவை அனைவரையும், அனைத்து இடங்களையும் மிக உயர்ந்த தரம் மற்றும் மலிவு விலையில் இணைக்கும். சீனா மற்றும் அமெரிக்காவை விட இந்தியாவை தரவு பொருளாதாரமாக மாற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய ஜியோ அமைப்பின் தலைவர் ஆகாஷ் அம்பானி, இந்தியா முழுவதும் 5ஜி நெட்வொர்க்கை உருவாக்க 2 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று கூறினார்.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிராட்பேண்ட் சேவையை வழங்க ஜியோபைபர் பெயரில் தனி பிரிவை இயக்கி வருகிறது.
    • நாட்டின் முன்னணி பிராட்பேண்ட் சேவை நிறுவனமாகவும் ஜியோபைபர் விளங்குகிறது.

    இந்திய சந்தையில் முன்னணி டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ இருக்கிறது. இந்த நிறுவனம் பைபர் பிராட்பேண்ட் சேவைகளை வழங்க ஜியோபைபர் பெயரில் தனி பிராண்டை உருவாக்கி இருக்கிறது. நாடு முழுக்க பைபர் பிராட்பேண்ட் வழங்குவதில் ஜியோபைபர் அதிவேகமாக செயல்பட்டு வருகிறது. மேலும் ஜியோபைபர் நாட்டின் முன்னணி பைபர் பிராட்பேண்ட் நிறுவனமாக விளங்குகிறது.

    ஜியோபைபர் அதிவேக பிராட்பேண்ட் வழங்குவதோடு ஒடிடி பலன்கள் அடங்கிய சலுகைகள், இலவச ஜியோ செட் டாப் பாக்ஸ் என ஏராளமான சேவைகளையும் கூடுதலாக வழங்கி வருகிறது. எனினும், இவை அனைத்திற்கும் அதிவேக இணைய வசதி அவசியம் ஆகும். சிலருக்கு தங்களின் வீட்டில் அனைத்து இடங்களிலும் வைபை கவரேஜ் சிறப்பாக இருக்காது. இது போன்ற சமயத்தில் நெட்வொர்க் கனெக்டிவிட்டி மோசமாகவே இருக்கும்.


    இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஜியோபைபர் புது சாதனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இது ஒரு வைபை மெஷ் எக்ஸ்டெண்டர் ஆகும். இந்த எக்ஸ்டெண்டர் JCM0112 என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 499 மட்டுமே. இதனை மிக எளிய மாத தவணை முறை வசதியிலும் வாங்க முடியும். மாத தவணை மாதம் ரூ. 86.62 முதல் துவங்குகிறது.

    புதிய மெஷ் எக்ஸ்டெண்டரை ரிலையன்ஸ் ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது சில்லறை விற்பனை மையத்திற்கு சென்று இது பற்றிய விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த எக்ஸ்டெண்டர் அனைத்து விதமான கனெக்டிவிட்டி பிரச்சினைகளை சரி செய்து விடும். இத்துடன் இதனை இன்ஸ்டால் செய்யும் நடைமுறை மிகவும் எளிமையாக்கப்பட்டு இருக்கிறது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு சுதந்திர தின சலுகையை அறிவித்து இருக்கிறது.
    • இந்த சலுகை பலன்கள் கூப்பன்கள் வடிவில் வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக 2999 சுதந்திர தின சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை ரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் பயனர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. ரூ. 2 ஆயிரத்து 999 விலையில் ரிசார்ஜ் செய்யும் போது 100 சதவீதம் கேஷ்பேக் பெற முடியும். கேஷ்பேக் சலுகை ஆகஸ்ட் 9 அல்லது அதற்கு பின் ரூ. 2 ஆயிரத்து 999 விலை ரிசார்ஜ் செய்தால் பெறலாம்.

    கேஷ்பேக் தொகை நெட்மெட்ஸ், ஏஜியோ, இக்சிகோ அல்லது 75 ஜிபி 4ஜி டேட்டா வடிவில் வழங்கப்படுகிறது. இதற்கான ஆஃபர் கூப்பன்கள் பயனர்களின் மைஜியோ செயலியில் ரிசார்ஜ் செய்த 72 மணி நேரத்தில் கிரெடிட் செய்யப்பட்டு விடும். சுதந்திர தினத்தை ஒட்டி இந்த சலுகையை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கிறது. இதில் வழங்கப்படும் வவுச்சர்களை மைஜியோ செயலியின் வவுச்சர் பகுதியில் பெற முடியும்.


    இத்துடன் 25 சதவீத தள்ளுபடி வழங்கும் மூன்று நெட்மெட்ஸ் கூப்பன்கள் வழங்கப்படுகிறது. இந்த கூப்பன்களை ரூ. 1000 அல்லது அதற்கும் அதிக தொகைக்கு செலவிடும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இதை கொண்டு அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம் வரையிலான தள்ளுபடி பெற முடியும். இந்த கூப்பன்கள் நெட்மெட்ஸ் வலைதளம் மற்றும் செயலி என எதில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். நெட்மெட்ஸ் கூப்பன்கள் அக்டோபர் 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும்.

    இதே போன்று இக்சிகோ பயனர்கள் ரூ. 750 மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன்களை பெற முடியும். இந்த கூப்பன்களை ரூ. 4 ஆயிரத்து 500 அல்லது அதற்கும் அதிக தொகை கொண்ட விமான புக்கிங்களின் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கூப்பன் டிசம்பர் 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும். இத்துடன் ரூ. 1000 மதிப்புள்ள ஏஜியோ தள்ளுபடி கூப்பன் வழங்கப்படுகிறது. இந்த கூப்பன் தேர்வு செய்யப்பட்ட பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    மேலும் குறைந்தபட்சம் ரூ. 2 ஆயிரத்து 990 மதிப்பிலான பொருட்களை வாங்கி இருக்க வேண்டும். அதிகபட்சம் ரூ. 1000 வரை தள்ளுபடி பெற முடியும். இந்த கூப்பன்கள் அக்டோபர் 31 ஆம் தேதி வரை செல்லும். 

    • ரெட்மி K50i ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி ப்ளஸ் எல்.சி.டி டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும்.
    • வருகிற ஜூலை 20-ந் தேதி ரெட்மி K50i ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    ரெட்மி நிறுவனம் அதன் K சீரிஸ் ஸ்மார்ட்போனின் புதிய மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி ரெட்மி K50i என்கிற மாடல் ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 20-ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது கடந்த மே மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 11T ப்ரோ மாடலின் ரீ பிராண்டட் வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை ரெட்மி K50i ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி ப்ளஸ் எல்.சி.டி டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்றும் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் டால்பி விஷன் சப்போர்ட் உடன் வரும் என கூறப்படுகிறது. இது ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிட்டி 8100 புராசஸரை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.


    அதுமட்டுமின்றி 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 8 மற்றும் 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் என டிரிபிள் கேமரா செட் அப் உடன் இந்த ஸ்மார்ட் போன் வர உள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இடம்பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 5080 எம்.ஏ.ஹெச் பேட்டரி மற்றும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் இருக்கும் என கூறப்படுகிறது.

    இதன் வெளியீட்டுக்கு இன்னும் ஒருசில தினங்களே உள்ள நிலையில், ரெட்மி K50i ஸ்மார்ட்போனில் 5ஜி சோதனை நடத்தப்படுள்ளது. ஜியோ நிறுவனம் இந்த 5ஜி சோதனையை நடத்தியதாகவும், இதன் முடிவுகள் திருப்திகரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 12 5ஜி பேண்ட்களுடன் கூடிய முதல் ரெட்மி ஸ்மார்ட்போன் இந்த K50i மாடல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×