search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செய்த"

    • சித்தோடு நால்ரோட்டில் செல்போன் கடையில் நூதன முறையில் பணம் மோசடி செய்த வாலிபர்.
    • இதனைத் தொடர்ந்து சண்முகத்தை சித்தோடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சித்தோடு:

    பவானி அருகே உள்ள சித்தோடு நால் ரோட்டில் அரவிந்தன் என்பவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரின் கடைக்கு அடிக்கடி ஒரு வாலிபர் வந்து செல்வார்.

    இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அரவிந்தன் கடைக்கு அந்த வாலிபர் தனது வங்கி கணக்குக்கு ரூ.25 ஆயிரம் மணி டிரான்ஸ்பர் செய்ய சொன்னார்.

    இதனைத் தொடர்ந்து அரவிந்தன் ரூ.25 ஆயிரம் வாலிபரின்வங்கி கணக்கில் மணி டிரான்ஸ்பர் செய்தார். பின்னர் அரவிந்தன் போன் மூலம் அவரை தொடர்பு கொண்டு பணம் கேட்க முயன்றார்.

    ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

    இது குறித்து அரவிந்தன் சித்தோடு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசார் விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் எடப்பாடி, புதுப்பாளையம் மணியன்காரன் வலசு பகுதியைச் சேர்ந்த சண்முகம் (27) என்பதும் இவர் மணி டிரான்ஸ்பர் மூலம் பண மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து சண்முகத்தை சித்தோடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சண்முகம் இது போல் யாராரிமாவது பணம் மோசடியில் ஈடுபட்டாரா? என போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சத்தியமங்கலம் அருகே சமையல் செய்தபோது தீயில் கருகி முதியவர் பலியானார்
    • இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி தாலுகா கூகலூர் அரிஜன காலனி பகுதியை சேர்ந்தவர் மாகாளி (57). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இரண்டு மனைவிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்களைப் பிரிந்து மாகாளி சத்தியமங்கலம் அடுத்த வேலாங்காட்டு தோட்டத்தில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார்.

    இவரை அவரது மகன் சரவணன் அவ்வப்போது சென்று பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று வழக்கம்போல் மாகாளி சமைத்துக் கொண்டிருந்த போது மாகாளி வேட்டியில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்ததில் அவருக்கு உடலில் காயம் ஏற்பட்டது.

    ஆனால் ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு செல்லவில்லை. இந்நிலையில் வீட்டில் இருந்த அவர் உடல்நலம் மோசமாகி இறந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×