search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுமங்கலி பெண்கள்"

    • இன்று காரடையான் நோன்பு விரதம்.
    • பெண்கள் அனுஷ்டிக்கும் விரதமே காரடையான் நோன்பாகும்.

    இன்று காரடையான் நோன்பு விரதம். பூஜை செய்து சரடு கட்டிக் கொள்ள உகந்த நேரம், காலை 10.30 மணிமுதல் 11.30 மணிவரை. இனி இந்த விரதம் குறித்து சுருக்கமாகக் காண்போம்.

    எமனுடன் வாதாடி இறந்த தன் கணவனின் உயிரை மீட்ட சாவித்திரியின் பதி விரதத்தைப் போற்றவும், உயிருடன் இருக்கும் தங்கள் கணவர்கள் சத்தியவான் போல எவ்வித குறைவுமின்றி நீடூழி வாழ்ந்து தங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அருளவேண்டும் என்பதற்காகவும், பெண்கள் அனுஷ்டிக்கும் விரதமே காரடையான் நோன்பாகும்.

    சுமங்கலி பெண்கள் தங்களது மங்கள வாழ்வை நீட்டித்துக் கொள்ளும் மகத்தான விரத நாள்தான் இது. மாசி மாதத்தின் இறுதி நாளும், பங்குனி மாதத்தின் முதல் நாளும் இணையும் நேரத்தில் இந்த விரதம் கொண்டாடப்படுகிறது. இது சாவித்திரி விரதம், சர்வ மங்கள விரதம், கர்வ சாவத், கங்கார் விரதம், ஜித்திய விரதம் என்ற பெயர்களில் வட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.

    எந்த பெயரில் இந்த விரதம் கொண்டாடப்பட்டாலும், நோக்கம் என்னவோ ஒன்றுதான். தன் கணவன், பூரண ஆயுளைப் பெற்று அனைத்து வளங்களுடன் வாழ வேண்டும் என்பதுதான் காரடையான் நோன்பு விரதத்தின் நோக்கமாகும்.

    கார் அரிசியால் செய்த இனிப்பு அடையும், உப்பு அடையும் செய்வது வழக்கம். இந்த நாளில் மஞ்சள் பூசிய நோன்புக் கயிற்றை பெண்கள் கட்டிக் கொள்வார்கள். சிலர் புதிய தாலிச்சரடுடன் நோன்புக்கயிற்றையும் கட்டிக் கொள்வார்கள். `மாசிக்கயிறு பாசி படியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, பங்குனி நாளில் இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்கள், தங்கள் தாலிக்கயிற்றை மாற்றிக் கொள்வார்கள். படைக்கப்பட்ட அடையை எல்லோரும் உண்ட பிறகு, பசுமாட்டுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

     சம்பத்கௌரி விரதம்

    முதலில் பங்குனி மாத பிறப்பு என்பதால், மாத பிறப்பு பூஜையை செய்வார்கள். முன்னோர்களுக்கான மாத தர்ப்பணத்தை செய்வார்கள். ஒவ்வொரு மாதமும் அம்பாளுக்குரிய விரத நாட்களை ''கௌரி விரத நாள்கள்'' என்று சொல்வார்கள்.

    ஒவ்வொரு கௌரி விரதத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதில் பங்குனி மாதம் அதாவது இன்றைய தினம் அனுஷ்டிக்க வேண்டிய கௌரி விரதம், சம்பத் கௌரி விரதம். சகல விதமான செல்வாக்குடன் பெண்கள் வாழ்வதற்கும், குடும்ப கருத்து ஒற்றுமைக்கும் இந்த விரதமானது அனுசரிக்கப்படுகிறது. காரடையான் நோன்பு நாளாகவும் இந்த நாள் அமைவதால், இரண்டு விரதத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். அம்பாளை வழிபடுவதுதானே முக்கியமான நோக்கம்.

    • கேதாரேஸ்வரர் என்றால் சிவன், கவுரி என்னும் பார்வதியுடன் கேதாரேஸ்வரரை பூஜை செய்து நோன்பு அனுஷ்டிப்பதால் இதற்கு கேதார கவுரி விரதம் எனப்பெயர்.
    • கவுதம மகரிஷியால் உபதேசிக்கப்பட்ட இந்த விரதத்தைச் செய்யும் பெண்மணிக்கும் அவரது கணவர், குழந்தைகளுக்கும் ஆயுள் அதிகரிக்கும்.

    கணவன்- மனைவி இடையே அன்பையும் ஒற்றுமையையும் அதிகரிக்க செய்யும் விரதம் இது. கேதாரேஸ்வரர் என்றால் சிவன், கவுரி என்னும் பார்வதியுடன் கேதாரேஸ்வரரை பூஜை செய்து நோன்பு அனுஷ்டிப்பதால் இதற்கு கேதார கவுரி விரதம் எனப்பெயர். புரட்சி மாதம் சுக்ல பட்ச தசமி திதி முதல் ஐப்பசி மாதம் க்ருஷ்ணபட்ச சதுர்தசி அல்லது அமாவாசை வரை 21 நாட்கள் இதை அனுஷ்டிக்க வேண்டும்.

    முடியாதவர்கள் கடைசி நாளான தீபாவளி அமாவாசை அன்றாவது இதை அனுஷ்டிக்கலாம். கவுதம மகரிஷியால் உபதேசிக்கப்பட்ட இந்த விரதத்தைச் செய்யும் பெண்மணிக்கும் அவரது கணவர், குழந்தைகளுக்கும் ஆயுள் அதிகரிக்கும். தீராத நோயும் விலகும்.

    எப்போதும் குடும்பத்தில் மங்களம் நிலவும், சிவனுக்கு செய்த அபசாரங்கள் விலகி நல்ல எண்ணம் ஏற்படும். இந்த விரதத்தை கடை பிடிக்க ஒரு கலசத்தில் கேதாரேஸ்வரரை அழைக்க செய்ய வேண்டும்.

    அத்துடன் 21 இழை, 21 முடியுள்ள மஞ்சள் சரட்டில் அம்மனை ஆவவாகனம் செய்து 16 உபசார பூஜை செய்து அஷ்டோத்தரத்தால் அர்ச்சித்து, 21 பழம், 21 அப்பம், 21 வெல்ல உருண்டை நிவேதனம் செய்து பூஜையை முடிக்க வேண்டும். பிறகு பூஜை செய்த 21 முடிச்சு உள்ள சரட்டை சுமங்கலி பெண் தனது கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.

    பிறகு 21 சுமங்கலி பெண்களுக்கு 21 வெற்றிலை, 21 பாக்கு, 21 மஞ்சள் கிழங்குடன் தாம்பூலம் தந்து வணங்குதல் வேண்டும். அவர்கள் ஆசியைப் பெற வேண்டும். இதனால் சிவ பார்வதி அருள் கிட்டும் என்கிறது கந்த புராணம்.

    • குலசேகர நங்கை அம்மன் கோவிலில் முளைப்பாரிக்கு தேவையான நவதானியங்கள் மற்றும் கும்பம் பூஜைக்கு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது
    • ஆற்றில் பெண்கள் முளைப்பாரியை கரைத்தனர். இதில் திரளான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    கொட்டாரம் அருகே உள்ள குலசேகர புரத்தில் ஸ்ரீ குலசேகர நங்கை அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஸ்ரீ குலசேகர நங்கை பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் நடத்தும் 5-ம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு குலசேகர நங்கை அம்மன் கோவிலில் முளைப்பாரிக்கு தேவையான நவதானியங்கள் மற்றும் கும்பம் பூஜைக்கு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.

    பின்னர் பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. 2-வது நாளான நேற்று காலை ஆடிப்பெருக்கை முன்னிட்டு குலசேகர நங்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர்10 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கு தலும் நடந்தது. மாலை யில் குலசேகரநங்கை அம்ம னுக்கு சிறப்பு வழி பாடும் அதைத்தொடர்ந்து குலசேகர நங்கை அம்மனின் பெண் பக்தர்கள் கும்பம் மற்றும் முளைப்பாரி எடுத்து வீதிகளில் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர்.

    கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக குலசேகரபுரம் லட்சுமிபுரம் சந்திப்பில் உள்ள மயான சுடலை மாடசுவாமி கோவில் அருகே உள்ள புத்தன் ஆற்று கரையை சென்றடைந்தது. அங்கு ஆற்றில் பெண்கள் முளைப்பாரியை கரைத்தனர். இதில் திரளான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை குலசேகரபுரம் ஸ்ரீ குலசேகர நங்கை அம்மன் மகளிர் பக்தர்களான சிவகாமி, வேலம்மாள், இசக்கியம் மாள் உள்பட பலர் செய்து இருந்தனர்.

    ×