search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கவுதம மகரிஷியால் உபதேசிக்கப்பட்ட கேதார கவுரி விரதம்
    X

    கவுதம மகரிஷியால் உபதேசிக்கப்பட்ட கேதார கவுரி விரதம்

    • கேதாரேஸ்வரர் என்றால் சிவன், கவுரி என்னும் பார்வதியுடன் கேதாரேஸ்வரரை பூஜை செய்து நோன்பு அனுஷ்டிப்பதால் இதற்கு கேதார கவுரி விரதம் எனப்பெயர்.
    • கவுதம மகரிஷியால் உபதேசிக்கப்பட்ட இந்த விரதத்தைச் செய்யும் பெண்மணிக்கும் அவரது கணவர், குழந்தைகளுக்கும் ஆயுள் அதிகரிக்கும்.

    கணவன்- மனைவி இடையே அன்பையும் ஒற்றுமையையும் அதிகரிக்க செய்யும் விரதம் இது. கேதாரேஸ்வரர் என்றால் சிவன், கவுரி என்னும் பார்வதியுடன் கேதாரேஸ்வரரை பூஜை செய்து நோன்பு அனுஷ்டிப்பதால் இதற்கு கேதார கவுரி விரதம் எனப்பெயர். புரட்சி மாதம் சுக்ல பட்ச தசமி திதி முதல் ஐப்பசி மாதம் க்ருஷ்ணபட்ச சதுர்தசி அல்லது அமாவாசை வரை 21 நாட்கள் இதை அனுஷ்டிக்க வேண்டும்.

    முடியாதவர்கள் கடைசி நாளான தீபாவளி அமாவாசை அன்றாவது இதை அனுஷ்டிக்கலாம். கவுதம மகரிஷியால் உபதேசிக்கப்பட்ட இந்த விரதத்தைச் செய்யும் பெண்மணிக்கும் அவரது கணவர், குழந்தைகளுக்கும் ஆயுள் அதிகரிக்கும். தீராத நோயும் விலகும்.

    எப்போதும் குடும்பத்தில் மங்களம் நிலவும், சிவனுக்கு செய்த அபசாரங்கள் விலகி நல்ல எண்ணம் ஏற்படும். இந்த விரதத்தை கடை பிடிக்க ஒரு கலசத்தில் கேதாரேஸ்வரரை அழைக்க செய்ய வேண்டும்.

    அத்துடன் 21 இழை, 21 முடியுள்ள மஞ்சள் சரட்டில் அம்மனை ஆவவாகனம் செய்து 16 உபசார பூஜை செய்து அஷ்டோத்தரத்தால் அர்ச்சித்து, 21 பழம், 21 அப்பம், 21 வெல்ல உருண்டை நிவேதனம் செய்து பூஜையை முடிக்க வேண்டும். பிறகு பூஜை செய்த 21 முடிச்சு உள்ள சரட்டை சுமங்கலி பெண் தனது கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.

    பிறகு 21 சுமங்கலி பெண்களுக்கு 21 வெற்றிலை, 21 பாக்கு, 21 மஞ்சள் கிழங்குடன் தாம்பூலம் தந்து வணங்குதல் வேண்டும். அவர்கள் ஆசியைப் பெற வேண்டும். இதனால் சிவ பார்வதி அருள் கிட்டும் என்கிறது கந்த புராணம்.

    Next Story
    ×