search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவன் பார்வதி"

    • மண் பிள்ளையாரை நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து நீரில் கரைக்க வேண்டும்.
    • கம்பங்கதிர், கேழ்வரகுக் கதிர் போன்றவற்றை வைத்தபின் பூஜையை ஆரம்பிக்கலாம்.

    விநாயகர் சதுர்த்தியன்று குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று பிள்ளையாரை வணங்கியபின்,

    நம் வீட்டுப் பூஜைக்குரிய மண் பிள்ளையாரை வலஞ்சுழியாகப் பார்த்து வாங்கி வரவேண்டும்.

    அதற்குமுன் நிவேதனப் பொருட்கள், பூஜைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் அனைத்தையும் தயாராக வைத்துவிட்டு வரவேண்டும்.

    பிள்ளையார் வாங்கி வந்தபின் தண்ணீர், எண்ணெய், சீயக்காய்ப்பொடி, கதம்பப் பொடி, பால்,

    தயிர், பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் வரிசைப்படி நிதானமாக அபிஷேகம் செய்யவேண்டும்.

    அதன்பின் சந்தனம் இட்டு, அதன்மீது குங்குமப் பொட்டிட்டு, இடுப்பில் பிள்ளையார் துண்டுகட்டி, தொப்பையில் காசு வைக்கவேண்டும்.

    பூமாலை, வன்னி இலைமாலை, அறுகம்புல் மாலை, எருக்கம்பூ மாலை ஆகியவற்றுடன் முப்புரிநூலும் அணிவிக்கவேண்டும்.

    பின்னர் பூஜையறையில் நாம் தயாராக வைத்திருந்த கோலமிட்ட மனைப்பலகையில் மெதுவாக

    பிள்ளையாரை அமர்த்தியபின், குன்றிமணியால் பிள்ளையாரின் கண்களைத் திறக்கவேண்டும்.

    பின்னால் குடை வைக்கவேண்டும். இப்போது பூஜைக்கு பிள்ளையார் தயார்.

    இருபுறமும் குத்துவிளக்கை வைத்து ஐந்துமுக தீபம் ஏற்றவேண்டும்.

    நிவேதனப் பொருட்களை தட்டுகளில் பிள்ளையார் முன் வைக்க வேண்டும்.

    கொழுக்கட்டை, சுண்டல், வடை ஆகியவை முக்கியம். அதன்பின் பொரி, கடலை, வெல்லம், அவல் ஆகியவையும் வேண்டும்.

    பிறகு நம் வசதிப்படி போளி, அல்வா, லட்டு போன்றவற்றை வைக்கலாம்.

    வாழைப்பழம், திராட்சை, ஆப்பிள், கொய்யா, விளாம்பழம், பேரிக்காய், நாவல்பழம், சோளக்கதிர்,

    கம்பங்கதிர், கேழ்வரகுக் கதிர் போன்றவற்றை பிள்ளையார்முன் வைத்தபின் பூஜையை ஆரம்பிக்கலாம்.

    சர்க்கரைப் பொங்கலும் வைக்கவேண்டும்.

    எளிமையான பிள்ளையார் பாடல்களைப் பாடலாம். விநாயகர் துதி, விநாயகர் அகவல், நான்மணி மாலை போன்றவற்றைப் படிக்கலாம்.

    முதலில்,

    "சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் பிரசன்னவதனம்

    யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே'

    என்னும் விநாயகர் மந்திரம் கூறிவிட்டுதான் பூஜையை ஆரம்பிக்கவேண்டும்.

    அதன்பின்,

    "ஓம், ஸ்ரீம், ஹ்ரீம், க்லௌம், கம், கணபதயே வரவரத

    சர்வஜனமேய வஸமானய ஸ்வாஹா'

    என்னும் கணபதி மூலமந்திரத்தை 21 முறை, 108 முறை என நம் வசதிப்படி ஜெபிக்கலாம்.

    குழந்தைகளையும் சொல்ல செய்யலாம். பழக்கிவிட்டால் தானாக வந்துவிடும்.

    அதன்பின் தூப, தீபம் செய்தபின் கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

    பூஜை முடிந்தபின் பலகாரங்களை அனைவருக்கும் கொடுத்துவிட்டு, நாமும் சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும்.

    மண் பிள்ளையாரை நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து நீரில் கரைக்க வேண்டும்.

    அதுவரை பிள்ளையாரை பின்னமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    அன்றேயும் செய்யலாம். 3-ஆம் நாள், 5-ஆம் நாள், 7-ஆம் நாள், 9-ஆம் நாள் என ஒற்றைப் படைநாளில் செய்யலாம்.

    • ஒருமுறை நாரதர் ஒரு மாம்பழத்தை சிவபெருமானுக்குக் கொடுத்தார்.
    • அது முதல், ஆவணி சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்ற மரபு தோன்றியது.

    ஒருமுறை நாரதர் ஒரு மாம்பழத்தை சிவபெருமானுக்குக் கொடுத்தார்.

    உடனே சிவபெருமான் அந்த மாம்பழத்தை தம் மகன்களில் யாருக்கு கொடுப்பது என பிரம்மனிடம் யோசனை கேட்டார்.

    உடனே பிரம்மன் முருகப்பெருமானுக்கு அளிக்கலாம் என்று சொல்ல அதனைக் கேட்ட விநாயகர் கோபம் கொண்டார்.

    அந்த நிகழ்ச்சிகளைக் கண்டு சந்திரன் சிரித்தான். இதனால் விநாயகருக்கு மேலும் கோபம் வந்து விட்டது.

    "பெரியோர் முன்னிலையில் என்னை சிரித்து கேலி செய்த உனது ஒளி உலகில் பரவாதிருக்கக் கடவது" என சபித்தார்.

    பிறகு அவர் அதற்கொரு பரிகாரமும் சொன்னார்.

    ஆவணி சதுர்த்தியன்று சந்திரனைப் பாராமல் தன்னை சிறப்பாக பூஜிக்கின்றவர்கள் தம் அருளை பூரணமாகப் பெற்றுக் கொள்ளலாம் எனக்கூறி அருளினார்.

    அது முதல், ஆவணி சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்ற மரபு தோன்றியது.

    • முப்பெரும் தேவியரின் அம்சமான அக்குழந்தைக்கு “சந்தோஷி” என்று பெயரிட்டனர்.
    • சந்தோஷி என்றால் எப்போதும் ஆனந்தத்தைத் தருபவள் என்பது பொருள்.

    கயிலாயத்தில் ஒருநாள் நாரதர் தன் இரண்டு மகன்களை விநாயகரிடம் அழைத்து வந்து

    "இவர்கள் இருவரும் விரதம் அனுஷ்டிக்க ஆசைப்படுகிறார்கள்.

    நீங்கள் தான் இவர்களுக்கு விரதம் அனுஷ்டிப்பதற்காக காப்புக் கட்டுதல் செய்து வைக்க வேண்டும்" என்று கூறினார்.

    அதற்கு விநாயகர் "நானும், நீயும் எப்படி காப்பு கட்டி விட முடியும்? ஒரு சகோதரி தான் கட்டிவிட வேண்டும்" என்று கூறினார்.

    அதைக் கேட்ட நாரதர் "நீங்கள் தான் சகோதரியை அவதாரம் செய்வித்தல் வேண்டும்" என்று வற்புறுத்திக் கூறினார்.

    அந்த வற்புறுத்தலின் காரணமாக விநாயகப் பெருமான் சித்தி, புத்தியைத் துணைகொண்டு ஒரு சகோதரியைத் தோற்றுவித்தார்.

    துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரின் அம்சமான அக்குழந்தைக்கு "சந்தோஷி" என்று பெயரிட்டனர்.

    சந்தோஷி என்றால் எப்போதும் ஆனந்தத்தைத் தருபவள் என்பது பொருள்.

    மேலும் பெண் என்பதால் பெயரின் கடைசியில் மாதா என்று சேர்த்து "சந்ஷோமாதா" என அனைவராலும் போற்றப்பட்டார்.

    • தீபாராதனை செய்யும் போது விநாயகர் சிவலிங்கம் போன்றும் காட்சி தருவதாகச் சொல்கிறார்கள்.
    • இத்தலத்தில் விழுது விடாத ஆலமரம் ஒன்று இருப்பது அதிசயமாகும்.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகில் தீவனூர் என்ற கிராமம் உள்ளது.

    இங்குள்ள பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் அர்ச்சகர் தீபாராதனை செய்யும் போது விநாயகர் சிவலிங்கம் போன்றும் காட்சி தருவதாகச் சொல்கிறார்கள்.

    பக்தர் ஒருவர் ஒரு காலத்தில் மாடுகள் மீது மிளகு மூட்டைகளை வைத்தபடி உளுந்தூர்பேட்டை சந்தைக்கு போகும் போது, இங்கு தங்கி சமையல் செய்து உணவு சாப்பிட்டார்.

    கோயில் பூசாரி, விநாயகர் படையலுக்காக கொஞ்சம் மிளகு தரக் கேட்டார்.

    இவை மிளகல்ல உளுந்து என்றார். சந்தைக்குப் போன அவர் மூட்டையைப் பிரித்த போது உளுந்தாக மாறி இருக்க இங்கு வந்து பிள்ளையாரிடம் மன்னிப்பு கேட்டார்.

    அன்று முதல் பொய்யாமொழி விநாயகர் ஆனார்.

    இத்தலத்தில் விழுது விடாத ஆலமரம் ஒன்று இருப்பது அதிசயமாகும்.

    சுயம்பு மூர்த்தியான இவரை தரிசிக்க, நினைத்தது நடக்கும் என்பது அங்குள்ள பக்தர்களின் கருத்து.

    • ஓம் என்ற பிரணவத்தில் இருந்து வேதங்கள் தோன்றின.
    • அவரே ப்ரணவத்தின் (ஓங்காரத்தின்) வரிவடிவம் ஆவார்.

    ஓம் என்ற பிரணவத்தில் இருந்து வேதங்கள் தோன்றின.

    அப்பிரணவமே எல்லாத் தேவதைகளுக்கும் பிறப்பிடம்.

    உலகத்தின் தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக்கும் பிரணவ மந்திரமே காரணமாகும்.

    பிரணவ சொரூபமாகத் திகழ்பவர் விநாயகர்.

    விநாயகரின் பெருமை எழுத்துக்கும் சொல்லுக்கும் அடங்காதது.

    நினைத்ததை எல்லாம் தரவல்லது.

    ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் அமாவாசை கழித்து நான்காம் நாள் அன்று வரும் சதுர்த்தியை

    விநாயகர் சதுர்த்தி என்று நாம் கொண்டாடி வருகிறோம்.

    விநாயகர் எப்போதும் ஆதிமூலப் பொருள் ஆவார்.

    அவரே ப்ரணவத்தின் (ஓங்காரத்தின்) வரிவடிவம் ஆவார்.

    சிவபெருமானிடத்தில் இருந்து முதன் முதலாகத் (ஆதி மூலமாக) தோன்றிய ஒலியே ஓங்காரமாகும்.

    ஆகையால் யாவரும் அவரை வழிபாடு செய்து இடர் களைந்து இன்புற்று வாழ்கின்றனர்.

    சிவபெருமானை வழிபடுவோரின் துன்பம் களையவே விநாயகரை சிவன் தோற்றுவித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

    • இவனை பிரம்மாவாலும் தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை.
    • கோபத்தில் அவனை விநாயகர் அப்படியே விழுங்கி விட்டார்.

    அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான்.

    தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றித் தகித்து விடுவான்.

    இவனை பிரம்மாவாலும் தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை.

    அவர்கள் சிவ பார்வதியை சந்தித்து முறையிட்டனர்.

    சிவனும் விநாயகரை அழைத்து அந்த அரக்கனை அழித்து வரும்படி கட்டளையிட்டார்.

    விநாயகரும் பூத கணங்களுடன் போருக்கு சென்றார்.

    அங்கு சென்றதும் அனலாசுரன் பூதகணங்களை எரித்துச் சாம்பலாக்கினான்.

    விநாயகர் அனலாசுரனுடன் மோதினார்.

    ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை.

    கோபத்தில் அவனை விநாயகர் அப்படியே விழுங்கி விட்டார்.

    வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடைய செய்தான்.

    விநாயகருக்கு அந்த வெப்பத்தைச் தாங்க முடியவில்லை.

    அவருக்கு குடம் குடமாக கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை.

    இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின் தலை மேல் வைத்தார்.

    அவரது எரிச்சல் அடங்கியது. அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான்.

    அன்று முதல் தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென விநாயகர் கட்டளையிட்டார்.

    இப்படித்தான் விநாயகருக்கு அருகம்புல் சாற்றும் பழக்கம் ஏற்பட்டது.

    • ஒரு யாகத்திற்கு புறப்பட்ட போது ஒரு அசுரன் விநாயகரை தடுத்து நிறுத்தினான்.
    • விநாயகர் தனக்கு வந்த தடையைத் தேங்காயை வீசி எறிந்ததன் மூலம் தகர்த்தார்.

    மகோற்கடர் என்ற முனிவராக அவதாரம் செய்த விநாயகர் காசிப முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தார்.

    ஒரு யாகத்திற்கு புறப்பட்ட போது ஒரு அசுரன் விநாயகரை தடுத்து நிறுத்தினான்.

    உடனே விநாயகர் யாகத்திற்காக கொண்டு சென்ற தேங்காய்களை எடுத்து வீசி அந்த அசுரனைப் பொடிப் பொடியாக்கினார்.

    எந்த செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால் அதை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்லும் வழக்கமுண்டு.

    விநாயகர் தனக்கு வந்த தடையைத் தேங்காயை வீசி எறிந்ததன் மூலம் தகர்த்தார்.

    அதன் மூலம் விக்னங்களை தகர்த்த விக்னேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது.

    இதன் மூலம்தான் சிதறுகாய் உடைக்கும் வழக்கம் உருவானது.

    • குரு உபதேசம் பெற்று படித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
    • வாழ்வில் பொருள் சேர்க்கை பெரியோர் நட்பு செல்வ நிலை உயர்வு கிட்டுவது உறுதி.

    ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம் க்லௌம் கம் ஐம் கர ஈல ஹ்ரீம்

    தத்ஸ விதுர்வரேண்யம் கணபதயே க்லீம் ஹஸ கஹல ஹ்ரீம்

    பர்கோ தேவஸ்ய தீமஹி வரவரத ஸெள: ஸகல ஹ்ரீம்தியோயோக:

    ப்ரசோதயாத் ஸர்வ ஜனம்மே வசமாயை ஸ்வாஹா.

    விருப்பங்களை நிறைவேற்றும் வேத நாயகனே

    திருப்பங்கள் தந்து காக்கும் தேவ குமாரனே

    சக்தியின் ஒளிந்திருக்கும் மந்திரக் கூற்றனே

    பக்தியோடு தொழுதோம் பலன் பலகோடி ஈவாயே!

    வாஞ்ச கல்ப கணபதி தியானம் மூலமந்திரத்தை சிரமப்பட்டு மனதில் ஏற்றிக் கொண்டு முறைப்படி

    ஜபித்து வந்தால் உங்கள் வாழ்வில் பொருள் சேர்க்கை பெரியோர் நட்பு செல்வ நிலை உயர்வு கிட்டுவது உறுதி.

    குரு உபதேசம் பெற்று படித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    • இந்த ஜபம் செய்வதற்கு உகந்த நாள் புரட்டாசி மற்றும் ஐப்பசி
    • மூன்று முறை படித்து வந்தால் லட்சுமியின் அருளும் கிடைக்கும்.

    இதன் விசேஷ பலன் கூறும் விதிமுறையது.

    தினம் ஒரு முறை ஜபித்தால் தெள்ளிய அறிவும் மூன்று முறை படித்து வந்தால் லட்சுமியின் அருளும், ஐந்து முறை படித்து வந்தால் சகல போக பாக்யங்களும் அடைய முடியும்.

    இந்த ஜபம் செய்வதற்கு உகந்த நாள் புரட்டாசி மற்றும் ஐப்பசி மாத சுக்ல பட்ச (வளர்பிறை) மகாநவமி மற்றும் மாத வளர்பிறை சதூர்த்தி.

    தியான சுலோகம்

    த்வாப்யாம் விப்ராஜமானம் த்ரிதகலச

    மகா ஸ்ருங்க லாப்யாம்

    புஜாப்யாம் பீஜாபூராதி பிப்ரத தசபுஜ

    மருணம் நாகபூஜம் த்ரிநேத்ரம்

    ஸந்த்யா ஸிந்தூர வர்ணம் ஸ்தனபரநிமிதம்

    துந்தலம் சந்த்ரசூடம்

    கண்டாதூர்த்வம் கரீந்த்ரம் யுவதிமயம்தோ

    தௌமி வித்யா கணேசம்.

    • வாஞ்சா என்பதற்கு மன விருப்பங்கள் என்றும் பரிவு, பாசம் என்றும் பொருள் உண்டு.
    • மனவிருப்பங்களை நிறைவேற்றும் இவரது உருவமும் சற்று வித்தியாசமான ஒன்று.

    விநாயக பூஜா விதிகளில் நாம் காணுகின்ற அடிப்படை பூஜை முறைகள் எல்லாம்

    காலத்திற்கேற்ப பலன் கிடைப்பதாக பக்தர்கள் சொல்வதால் சிறு தெருக்களில் கூட விநாயகர் சன்னதிகள் சிறிது சிறிதாக உருவாகி உள்ளன.

    அவற்றுள் வாஞ்சா கல்பகணபதி என்பவர் வேதம், ஆகம பூஜா விதிகள் பயின்றவர்களுக்கு மட்டுமே முன்பெல்லாம் தெரிந்த ஒன்றாக இருந்தது.

    ஆனால் இக்காலத்தில் வாஞ்சா கல்பகணபதி வழிபாடு பலருக்கும் தெரிந்த ஒன்றாக மாறியுள்ளது.

    வாஞ்சா என்பதற்கு மன விருப்பங்கள் என்றும் பரிவு, பாசம் என்றும் பொருள் உண்டு.

    கல்ப என்பதற்கு நாம் வணங்கினால் நாம் வாழ்கின்ற காலம் முழுவதும் நம்மைக் காக்கின்ற என்றும் பொருள்.

    மனவிருப்பங்களை நிறைவேற்றும் இவரது உருவமும் சற்று வித்தியாசமான ஒன்று.

    பன்னிரு கைகளில் முறையே தாமரை, பாசம், நீலோத்பலம், நெல், தந்தம், சங்கிலி, அபயம், மாதுளை, தண்டம், கரும்பு, சூலம், சக்கரம்,

    ஆகியவற்றுடன் தங்க ஆபரணங்கள் அணிந்து கொண்டு பெண் உருவைக் காட்டியவராய் ஜடாமகுடம் தரித்தவராய்க் காட்சி தருகிறார்.

    முதல்முதலாக இந்த சக்திவாய்ந்த மூலமந்திரம் திபெத்திய மொழியில் வெளியிடப்பட்டு வந்தது.

    நம் நாட்டில் குமார சம்ஹதை ப்ரோயக பாரிஜாதம் ஆகிய கிரந்தங்களில் விளக்கங்களோடு உள்ளது.

    இம்மந்திரத்தில் நலம் கொடுக்கும் ஐந்து மூர்த்தங்களின் மூலம் சேர்ந்திருக்கிறது.

    மகாகணபதி, மகா திரிபுரசுந்தரி, ஸ்ரீவித்யாகணபதி, அமிர்த ருத்ரேரஸ்வரர்சம்வாதாக்னி ஆகியோருடையதும் இவர்களின் வேத மந்திர பீஜங்களோடு கணபதி மூலம் பஞ்சதசாட்சரி மூலம் காயத்ரி மந்திரங்கள் உபதேவதை மந்திரங்களோடும் உள்ளது.

    இவற்றை குரு உபதேசம் பெற்றுக் கொண்டபின் செய்வதால் உச்சரித்த சில தினங்களுக்குள் பலன் கொடுக்கும் என்பது வேத வித்வான்களின் கருத்து.

    மூல மந்திர ஜபம் 4 பகுதிகளாக (பர்யாயங்களாக ) பிரிக்கப்பட்டிருக்கும், அதை கவனமாக மனவிருப்பங்களுக்கு ஏற்ப படிக்க வேண்டும்.

    • கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்தில் தோன்றுவார்.
    • துவாபர பாகத்தில் கஜனைராக மூஞ்சுறு வாகனத்தில் தோன்றுவார்.

    ஸ்வஸ்திகம் என்பது இந்த உலகத்தின் நான்கு திசைகளிலும் இறைவன் அருளாட்சி செய்வதைக் குறிக்கிறது.

    பரந்த இந்தப் பிரபஞ்சத்தில் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தலையும், நான்கு வேதங்களின் கோட்பாடுகள்படி

    நாம் வாழ்ந்தால் இறைவனது திருவடி நிழல்பட்டு நமது வாழ்க்கைச் சக்கரம் நன்கு சுழலும் என்பதை குறிப்பிடுகிறது.

    அதில் உள்ள ஒவ்வொரு வளைவும் கூறும் தத்துவம் உயர்வானது.

    ஆன்மாவானது நானம் யோகம், சரியை, கிரியைகளைத் தாண்டி பகவானிடம் நெருங்க வேண்டுமானால்

    பஞ்ச பூதங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றைக் கொண்ட இந்த உலக தர்மங்களை

    கடைபிடித்து வாழவேண்டும் என்று விநாயகர் ஸ்வஸ்திகத்தை கையில் வைத்துக் கொண்டு உணர்த்துகிறார்.

    மேலும் திருவிளையாடற் புராணத்தில் நமது சைவப் பெரியார்கள் நமது ஆணவமாகிய யானையை வெல்ல,

    விநாயகர் என்ற யானை முகனை எப்படி வணங்குவது என்று கூறி உள்ளனர்.

    உள்ளமெனும் கூடத்தில் ஊக்கமெனும்

    தறிநிறுவி உறுதியாகத்

    தள்ளரிய என்பென்னும் தொடர்பூட்டி

    இடர்படுத்தித் தறுகண் பாசக்

    கள்ளவினை பசுபோதக் கவனமிடக்

    களித்துண்டு கருணை என்னும்

    வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை

    நினைந்து வருவிணைகள் தீர்ப்போம்.

    யுகங்களில் தோன்றும் கணபதிகள்

    கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்தில் தோன்றுவார்.

    த்ரேதா யுகத்தில் மயூரேஸ்வராக மயில் வாகனத்தில் தோன்றுவார்.

    துவாபர பாகத்தில் கஜனைராக மூஞ்சுறு வாகனத்தில் தோன்றுவார்.

    கலியுகத்தில் பிள்ளையாராக எலி வாகனத்தில் தோன்றுவார்.

    • பக்தியோடு இருந்தாலும், ஒழுக்கத்தை அவன் பின்பற்றவில்லை.
    • வெற்றிக்கு ஒழுக்கம் முக்கியம் என்பதை காட்டும் நாளாக விஜயதசமி அமைந்துள்ளது.

    சிவபக்தனாக ராவணன், தினமும் கோவிலுக்குச் சென்று சிவபார்வதியை வணங்குவது வழக்கம்.

    பக்தியோடு இருந்தாலும், ஒழுக்கத்தை அவன் பின்பற்றவில்லை.

    சீதையை சிறையெடுத்து அசோகவனத்தில் வைத்தான்.

    இதனால், பார்வதிதேவிக்கு ராவணன் மீது சீற்றம் உண்டானது.

    பக்தியை விட ஒழுக்கமே முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்த எண்ணினாள்.

    விஸ்வாமித்திரர் மூலம் சிறுவயதிலேயே ராமன் தேவிமந்திரத்தை அறிந்திருந்தார்.

    அம்மந்திரத்தை ஜெபித்து நவராத்திரி விரதம் மேற்கொண்டார்.

    அவருக்கு துர்க்கையாக காட்சியளித்த பார்வதி, யுத்தத்தில் வெற்றி கிடைக்க அருள்புரிந்தாள்.

    ராவணனை வெற்றி கொண்ட தினத்தையே வடமாநிலங்கள் சிலவற்றில் விஜயதசமியாக மக்கள் கொண்டாடுகின்றனர்.

    வெற்றிக்கு ஒழுக்கம் முக்கியம் என்பதை காட்டும் நாளாக விஜயதசமி அமைந்துள்ளது.

    ×