என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swastik"

    • ஸ்வஸ்திக் வடிவ கிணற்றின் மேற்புறத்தின் ஓரத்தில் சிவலிங்கம் ஒன்று உள்ளது.
    • மேற்கு புற வாசலின் முதல் நிலைக்காலில் கிருஷ்ண பகவான் சிறுவயதில் அசுரர்களை வதம் செய்த காட்சி இடம் பெற்றுள்ளது.

    திருச்சியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, திருவெள்ளறை திருத்தலம். இந்த ஆலயத்தின் நேர்பின்புறமாக ஸ்வஸ்திக் வடிவ கிணறு ஒன்று காணப்படுகிறது. 'ஸ்வஸ்திக்' வடிவம் என்பது, ஆன்மிகக் குறியீடுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த கிணறு ''மார்பிடுகு கிணறு'' என்று அழைக்கப்பட்டதாக அதில் உள்ள கல்வெட்டு குறிப்புகள் சொல்கின்றன. இந்த ஸ்வஸ்திக் கிணறு கி.பி. 8-ம் நூற்றாண்டில், பல்லவ மன்னனான நந்திவர்மன் காலத்தில், ஆலம்பாக்கத்து கம்பன் அரையன் என்பவரால் கட்டப்பட்டது.

    இந்த ஸ்வஸ்திக் வடிவ கிணற்றின் மேற்புறத்தின் ஓரத்தில் சிவலிங்கம் ஒன்று உள்ளது. அதன் எதிரில் பெரியதும், சிறியதுமாக இரண்டு நந்திகள் கால்களை மடக்கி அமர்ந்த நிலையில் காணப்படுகின்றன. அதன் அருகில் பழங்கால தெய்வத் திருமேனிகள் காணப்படுகின்றன. தற்போது இந்த கிணறு, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    கிழக்கு பக்கவாசலின் முதல் நிலை படியில் நரசிம்மர் சிற்பமும், இரண்டாம் படி நிலையில் யானை வாகனத்தோடு அய்யனாரும், பூரணாம்பிகையும், மூன்றாம் படிநிலையில் இரண்டு அன்னப்பறவைகளும் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இதன் தெற்கு புற வாசலின் முதல் நிலைக்காலில் சப்த மாதர்கள் காட்சி தருகின்றனர். இரண்டாம் படிநிலையில் கொற்றவை, சிங்கம் மான் மீது இரண்டு துணை தேவியர் உள்ளனர். மூன்றாம் படிநிலையில் விநாயகரின் உருவம் உள்ளது.

    மேற்கு புற வாசலின் முதல் நிலைக்காலில் கிருஷ்ண பகவான் சிறுவயதில் அசுரர்களை வதம் செய்த காட்சி இடம் பெற்றுள்ளது. இரண்டாம் நிலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மகாவிஷ்ணு, மூன்றாம் நிலையில் இரண்டு மகர சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு வாசலின் முதல் நிலைக்காலில் சிவபெருமான்- பார்வதியும், தேவர்களும் உள்ளனர். இரண்டாம் நிலைக்காலில் தட்சிணாமூர்த்தி, சனகாதி முனிவர்கள் உள்ளனர். மூன்றாம் நிலைப்படியில் இரண்டு மகர தோரண அமைப்பு உள்ளது. நடுவில் யானை நடந்து வரும் சிற்பம் இருக்கிறது. கிணற்றுக்குள் நான்கு பக்கங்களில் இருந்தும் இறங்கி செல்லும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    • கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்தில் தோன்றுவார்.
    • துவாபர பாகத்தில் கஜனைராக மூஞ்சுறு வாகனத்தில் தோன்றுவார்.

    ஸ்வஸ்திகம் என்பது இந்த உலகத்தின் நான்கு திசைகளிலும் இறைவன் அருளாட்சி செய்வதைக் குறிக்கிறது.

    பரந்த இந்தப் பிரபஞ்சத்தில் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தலையும், நான்கு வேதங்களின் கோட்பாடுகள்படி

    நாம் வாழ்ந்தால் இறைவனது திருவடி நிழல்பட்டு நமது வாழ்க்கைச் சக்கரம் நன்கு சுழலும் என்பதை குறிப்பிடுகிறது.

    அதில் உள்ள ஒவ்வொரு வளைவும் கூறும் தத்துவம் உயர்வானது.

    ஆன்மாவானது நானம் யோகம், சரியை, கிரியைகளைத் தாண்டி பகவானிடம் நெருங்க வேண்டுமானால்

    பஞ்ச பூதங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றைக் கொண்ட இந்த உலக தர்மங்களை

    கடைபிடித்து வாழவேண்டும் என்று விநாயகர் ஸ்வஸ்திகத்தை கையில் வைத்துக் கொண்டு உணர்த்துகிறார்.

    மேலும் திருவிளையாடற் புராணத்தில் நமது சைவப் பெரியார்கள் நமது ஆணவமாகிய யானையை வெல்ல,

    விநாயகர் என்ற யானை முகனை எப்படி வணங்குவது என்று கூறி உள்ளனர்.

    உள்ளமெனும் கூடத்தில் ஊக்கமெனும்

    தறிநிறுவி உறுதியாகத்

    தள்ளரிய என்பென்னும் தொடர்பூட்டி

    இடர்படுத்தித் தறுகண் பாசக்

    கள்ளவினை பசுபோதக் கவனமிடக்

    களித்துண்டு கருணை என்னும்

    வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை

    நினைந்து வருவிணைகள் தீர்ப்போம்.

    யுகங்களில் தோன்றும் கணபதிகள்

    கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்தில் தோன்றுவார்.

    த்ரேதா யுகத்தில் மயூரேஸ்வராக மயில் வாகனத்தில் தோன்றுவார்.

    துவாபர பாகத்தில் கஜனைராக மூஞ்சுறு வாகனத்தில் தோன்றுவார்.

    கலியுகத்தில் பிள்ளையாராக எலி வாகனத்தில் தோன்றுவார்.

    • வாஞ்சா என்பதற்கு மன விருப்பங்கள் என்றும் பரிவு, பாசம் என்றும் பொருள் உண்டு.
    • மனவிருப்பங்களை நிறைவேற்றும் இவரது உருவமும் சற்று வித்தியாசமான ஒன்று.

    விநாயக பூஜா விதிகளில் நாம் காணுகின்ற அடிப்படை பூஜை முறைகள் எல்லாம்

    காலத்திற்கேற்ப பலன் கிடைப்பதாக பக்தர்கள் சொல்வதால் சிறு தெருக்களில் கூட விநாயகர் சன்னதிகள் சிறிது சிறிதாக உருவாகி உள்ளன.

    அவற்றுள் வாஞ்சா கல்பகணபதி என்பவர் வேதம், ஆகம பூஜா விதிகள் பயின்றவர்களுக்கு மட்டுமே முன்பெல்லாம் தெரிந்த ஒன்றாக இருந்தது.

    ஆனால் இக்காலத்தில் வாஞ்சா கல்பகணபதி வழிபாடு பலருக்கும் தெரிந்த ஒன்றாக மாறியுள்ளது.

    வாஞ்சா என்பதற்கு மன விருப்பங்கள் என்றும் பரிவு, பாசம் என்றும் பொருள் உண்டு.

    கல்ப என்பதற்கு நாம் வணங்கினால் நாம் வாழ்கின்ற காலம் முழுவதும் நம்மைக் காக்கின்ற என்றும் பொருள்.

    மனவிருப்பங்களை நிறைவேற்றும் இவரது உருவமும் சற்று வித்தியாசமான ஒன்று.

    பன்னிரு கைகளில் முறையே தாமரை, பாசம், நீலோத்பலம், நெல், தந்தம், சங்கிலி, அபயம், மாதுளை, தண்டம், கரும்பு, சூலம், சக்கரம்,

    ஆகியவற்றுடன் தங்க ஆபரணங்கள் அணிந்து கொண்டு பெண் உருவைக் காட்டியவராய் ஜடாமகுடம் தரித்தவராய்க் காட்சி தருகிறார்.

    முதல்முதலாக இந்த சக்திவாய்ந்த மூலமந்திரம் திபெத்திய மொழியில் வெளியிடப்பட்டு வந்தது.

    நம் நாட்டில் குமார சம்ஹதை ப்ரோயக பாரிஜாதம் ஆகிய கிரந்தங்களில் விளக்கங்களோடு உள்ளது.

    இம்மந்திரத்தில் நலம் கொடுக்கும் ஐந்து மூர்த்தங்களின் மூலம் சேர்ந்திருக்கிறது.

    மகாகணபதி, மகா திரிபுரசுந்தரி, ஸ்ரீவித்யாகணபதி, அமிர்த ருத்ரேரஸ்வரர்சம்வாதாக்னி ஆகியோருடையதும் இவர்களின் வேத மந்திர பீஜங்களோடு கணபதி மூலம் பஞ்சதசாட்சரி மூலம் காயத்ரி மந்திரங்கள் உபதேவதை மந்திரங்களோடும் உள்ளது.

    இவற்றை குரு உபதேசம் பெற்றுக் கொண்டபின் செய்வதால் உச்சரித்த சில தினங்களுக்குள் பலன் கொடுக்கும் என்பது வேத வித்வான்களின் கருத்து.

    மூல மந்திர ஜபம் 4 பகுதிகளாக (பர்யாயங்களாக ) பிரிக்கப்பட்டிருக்கும், அதை கவனமாக மனவிருப்பங்களுக்கு ஏற்ப படிக்க வேண்டும்.

    • இந்த ஜபம் செய்வதற்கு உகந்த நாள் புரட்டாசி மற்றும் ஐப்பசி
    • மூன்று முறை படித்து வந்தால் லட்சுமியின் அருளும் கிடைக்கும்.

    இதன் விசேஷ பலன் கூறும் விதிமுறையது.

    தினம் ஒரு முறை ஜபித்தால் தெள்ளிய அறிவும் மூன்று முறை படித்து வந்தால் லட்சுமியின் அருளும், ஐந்து முறை படித்து வந்தால் சகல போக பாக்யங்களும் அடைய முடியும்.

    இந்த ஜபம் செய்வதற்கு உகந்த நாள் புரட்டாசி மற்றும் ஐப்பசி மாத சுக்ல பட்ச (வளர்பிறை) மகாநவமி மற்றும் மாத வளர்பிறை சதூர்த்தி.

    தியான சுலோகம்

    த்வாப்யாம் விப்ராஜமானம் த்ரிதகலச

    மகா ஸ்ருங்க லாப்யாம்

    புஜாப்யாம் பீஜாபூராதி பிப்ரத தசபுஜ

    மருணம் நாகபூஜம் த்ரிநேத்ரம்

    ஸந்த்யா ஸிந்தூர வர்ணம் ஸ்தனபரநிமிதம்

    துந்தலம் சந்த்ரசூடம்

    கண்டாதூர்த்வம் கரீந்த்ரம் யுவதிமயம்தோ

    தௌமி வித்யா கணேசம்.

    • குரு உபதேசம் பெற்று படித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
    • வாழ்வில் பொருள் சேர்க்கை பெரியோர் நட்பு செல்வ நிலை உயர்வு கிட்டுவது உறுதி.

    ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம் க்லௌம் கம் ஐம் கர ஈல ஹ்ரீம்

    தத்ஸ விதுர்வரேண்யம் கணபதயே க்லீம் ஹஸ கஹல ஹ்ரீம்

    பர்கோ தேவஸ்ய தீமஹி வரவரத ஸெள: ஸகல ஹ்ரீம்தியோயோக:

    ப்ரசோதயாத் ஸர்வ ஜனம்மே வசமாயை ஸ்வாஹா.

    விருப்பங்களை நிறைவேற்றும் வேத நாயகனே

    திருப்பங்கள் தந்து காக்கும் தேவ குமாரனே

    சக்தியின் ஒளிந்திருக்கும் மந்திரக் கூற்றனே

    பக்தியோடு தொழுதோம் பலன் பலகோடி ஈவாயே!

    வாஞ்ச கல்ப கணபதி தியானம் மூலமந்திரத்தை சிரமப்பட்டு மனதில் ஏற்றிக் கொண்டு முறைப்படி

    ஜபித்து வந்தால் உங்கள் வாழ்வில் பொருள் சேர்க்கை பெரியோர் நட்பு செல்வ நிலை உயர்வு கிட்டுவது உறுதி.

    குரு உபதேசம் பெற்று படித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    • ஒரு யாகத்திற்கு புறப்பட்ட போது ஒரு அசுரன் விநாயகரை தடுத்து நிறுத்தினான்.
    • விநாயகர் தனக்கு வந்த தடையைத் தேங்காயை வீசி எறிந்ததன் மூலம் தகர்த்தார்.

    மகோற்கடர் என்ற முனிவராக அவதாரம் செய்த விநாயகர் காசிப முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தார்.

    ஒரு யாகத்திற்கு புறப்பட்ட போது ஒரு அசுரன் விநாயகரை தடுத்து நிறுத்தினான்.

    உடனே விநாயகர் யாகத்திற்காக கொண்டு சென்ற தேங்காய்களை எடுத்து வீசி அந்த அசுரனைப் பொடிப் பொடியாக்கினார்.

    எந்த செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால் அதை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்லும் வழக்கமுண்டு.

    விநாயகர் தனக்கு வந்த தடையைத் தேங்காயை வீசி எறிந்ததன் மூலம் தகர்த்தார்.

    அதன் மூலம் விக்னங்களை தகர்த்த விக்னேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது.

    இதன் மூலம்தான் சிதறுகாய் உடைக்கும் வழக்கம் உருவானது.

    • இவனை பிரம்மாவாலும் தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை.
    • கோபத்தில் அவனை விநாயகர் அப்படியே விழுங்கி விட்டார்.

    அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான்.

    தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றித் தகித்து விடுவான்.

    இவனை பிரம்மாவாலும் தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை.

    அவர்கள் சிவ பார்வதியை சந்தித்து முறையிட்டனர்.

    சிவனும் விநாயகரை அழைத்து அந்த அரக்கனை அழித்து வரும்படி கட்டளையிட்டார்.

    விநாயகரும் பூத கணங்களுடன் போருக்கு சென்றார்.

    அங்கு சென்றதும் அனலாசுரன் பூதகணங்களை எரித்துச் சாம்பலாக்கினான்.

    விநாயகர் அனலாசுரனுடன் மோதினார்.

    ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை.

    கோபத்தில் அவனை விநாயகர் அப்படியே விழுங்கி விட்டார்.

    வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடைய செய்தான்.

    விநாயகருக்கு அந்த வெப்பத்தைச் தாங்க முடியவில்லை.

    அவருக்கு குடம் குடமாக கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை.

    இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின் தலை மேல் வைத்தார்.

    அவரது எரிச்சல் அடங்கியது. அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான்.

    அன்று முதல் தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென விநாயகர் கட்டளையிட்டார்.

    இப்படித்தான் விநாயகருக்கு அருகம்புல் சாற்றும் பழக்கம் ஏற்பட்டது.

    • ஓம் என்ற பிரணவத்தில் இருந்து வேதங்கள் தோன்றின.
    • அவரே ப்ரணவத்தின் (ஓங்காரத்தின்) வரிவடிவம் ஆவார்.

    ஓம் என்ற பிரணவத்தில் இருந்து வேதங்கள் தோன்றின.

    அப்பிரணவமே எல்லாத் தேவதைகளுக்கும் பிறப்பிடம்.

    உலகத்தின் தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக்கும் பிரணவ மந்திரமே காரணமாகும்.

    பிரணவ சொரூபமாகத் திகழ்பவர் விநாயகர்.

    விநாயகரின் பெருமை எழுத்துக்கும் சொல்லுக்கும் அடங்காதது.

    நினைத்ததை எல்லாம் தரவல்லது.

    ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் அமாவாசை கழித்து நான்காம் நாள் அன்று வரும் சதுர்த்தியை

    விநாயகர் சதுர்த்தி என்று நாம் கொண்டாடி வருகிறோம்.

    விநாயகர் எப்போதும் ஆதிமூலப் பொருள் ஆவார்.

    அவரே ப்ரணவத்தின் (ஓங்காரத்தின்) வரிவடிவம் ஆவார்.

    சிவபெருமானிடத்தில் இருந்து முதன் முதலாகத் (ஆதி மூலமாக) தோன்றிய ஒலியே ஓங்காரமாகும்.

    ஆகையால் யாவரும் அவரை வழிபாடு செய்து இடர் களைந்து இன்புற்று வாழ்கின்றனர்.

    சிவபெருமானை வழிபடுவோரின் துன்பம் களையவே விநாயகரை சிவன் தோற்றுவித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

    • தீபாராதனை செய்யும் போது விநாயகர் சிவலிங்கம் போன்றும் காட்சி தருவதாகச் சொல்கிறார்கள்.
    • இத்தலத்தில் விழுது விடாத ஆலமரம் ஒன்று இருப்பது அதிசயமாகும்.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகில் தீவனூர் என்ற கிராமம் உள்ளது.

    இங்குள்ள பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் அர்ச்சகர் தீபாராதனை செய்யும் போது விநாயகர் சிவலிங்கம் போன்றும் காட்சி தருவதாகச் சொல்கிறார்கள்.

    பக்தர் ஒருவர் ஒரு காலத்தில் மாடுகள் மீது மிளகு மூட்டைகளை வைத்தபடி உளுந்தூர்பேட்டை சந்தைக்கு போகும் போது, இங்கு தங்கி சமையல் செய்து உணவு சாப்பிட்டார்.

    கோயில் பூசாரி, விநாயகர் படையலுக்காக கொஞ்சம் மிளகு தரக் கேட்டார்.

    இவை மிளகல்ல உளுந்து என்றார். சந்தைக்குப் போன அவர் மூட்டையைப் பிரித்த போது உளுந்தாக மாறி இருக்க இங்கு வந்து பிள்ளையாரிடம் மன்னிப்பு கேட்டார்.

    அன்று முதல் பொய்யாமொழி விநாயகர் ஆனார்.

    இத்தலத்தில் விழுது விடாத ஆலமரம் ஒன்று இருப்பது அதிசயமாகும்.

    சுயம்பு மூர்த்தியான இவரை தரிசிக்க, நினைத்தது நடக்கும் என்பது அங்குள்ள பக்தர்களின் கருத்து.

    • முப்பெரும் தேவியரின் அம்சமான அக்குழந்தைக்கு “சந்தோஷி” என்று பெயரிட்டனர்.
    • சந்தோஷி என்றால் எப்போதும் ஆனந்தத்தைத் தருபவள் என்பது பொருள்.

    கயிலாயத்தில் ஒருநாள் நாரதர் தன் இரண்டு மகன்களை விநாயகரிடம் அழைத்து வந்து

    "இவர்கள் இருவரும் விரதம் அனுஷ்டிக்க ஆசைப்படுகிறார்கள்.

    நீங்கள் தான் இவர்களுக்கு விரதம் அனுஷ்டிப்பதற்காக காப்புக் கட்டுதல் செய்து வைக்க வேண்டும்" என்று கூறினார்.

    அதற்கு விநாயகர் "நானும், நீயும் எப்படி காப்பு கட்டி விட முடியும்? ஒரு சகோதரி தான் கட்டிவிட வேண்டும்" என்று கூறினார்.

    அதைக் கேட்ட நாரதர் "நீங்கள் தான் சகோதரியை அவதாரம் செய்வித்தல் வேண்டும்" என்று வற்புறுத்திக் கூறினார்.

    அந்த வற்புறுத்தலின் காரணமாக விநாயகப் பெருமான் சித்தி, புத்தியைத் துணைகொண்டு ஒரு சகோதரியைத் தோற்றுவித்தார்.

    துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரின் அம்சமான அக்குழந்தைக்கு "சந்தோஷி" என்று பெயரிட்டனர்.

    சந்தோஷி என்றால் எப்போதும் ஆனந்தத்தைத் தருபவள் என்பது பொருள்.

    மேலும் பெண் என்பதால் பெயரின் கடைசியில் மாதா என்று சேர்த்து "சந்ஷோமாதா" என அனைவராலும் போற்றப்பட்டார்.

    ×