search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிற்பங்கள்"

    • ஏகநாதர் என்பது மும்மூர்த்திகளும் சமமானவர்கள் என்றும், எல்லோரும் ஒருவரே என்ற மாபெரும் தத்துவத்தை விளக்கவும் வல்லது.
    • அது மட்டுமின்றி நான்கு கால் தூணில் உள்ள மங்கைகள் எல்லோர் மனதையும் கவருகின்றார்கள்.

    பல அரிய சிற்பங்களும் இத்தலத்தில் காணக் கிடைக்கின்றன.

    அதில் முக்கியமானது மூன்று கால் முனிவர் சிலை.

    சிவலிங்க சன்னிதிக்கு இடப்புறம் அமைந்துள்ள வெளிப்பிரகாரத் தூண்களில் இந்தச் சிற்பம் காணக் கிடைக்கின்றது.

    அது மட்டுமின்றி ஏகநாதர் திருவுருவம் அன்னையின் சன்னிதிக்கு வெளியே உள்ள தூணில் காணக் கிடைக்கிறது.

    ஏகநாதர் என்பது மும்மூர்த்திகளும் சமமானவர்கள் என்றும், எல்லோரும் ஒருவரே என்ற மாபெரும் தத்துவத்தை விளக்கவும் வல்லது.

    அது மட்டுமின்றி நான்கு கால் தூணில் உள்ள மங்கைகள் எல்லோர் மனதையும் கவருகின்றார்கள்.

    அவர்களின் கூந்தல் அலங்காரம் பிரமிக்க வைப்பதாக உள்ளது.

    அதிலும் ஒரு சிறு குழந்தையை ஏந்திக்கொண்டு இருக்கும் பெண் மிக தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளாள்.

    • யானை படமாக இருந்தால் தும்பிக்கை மேல் நோக்கி இருப்பது சிறப்பு.
    • மான்கள் துள்ளி ஓடும் படத்தையும் மாட்டி வைக்கலாம்.

    தன்னம்பிக்கையை அளிக்கும் படங்கள், இயற்கை அழகு மிகுந்த வண்ண ஓவியங்கள் ஆகியவற்றால் சுவர்கள் அலங்கரிக்கப்படும்போது மங்களம் தரும் சுப அதிர்வுகள் மனதில் ஏற்படும். வீட்டில் உள்ளவர்களுக்கும் அதன் காரணமாக மனதில் உற்சாகம் உண்டாவதோடு, வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் அந்த உற்சாகம் பரவும்.

    வீடுகள் சிறிய அளவு கொண்டதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் அவற்றில் செய்யப்பட்டிருக்கும் அலங்காரம் அனைவரையும் கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பது பலருக்கும் விருப்பமாக இருக்கும். அதற்காக விலை உயர்ந்த பொருட்களை கொண்டு வீடுகளை அழகுபடுத்த வேண்டும் என்பதில்லை. கண்கவரும் வண்ணங்களில் அழகிய ஓவியங்களை ஆங்காங்கே மாட்டி வைத்தும் அறையின் சூழலை இனிமையாக மாற்ற இயலும்.

    அவ்வாறு ஓவியங்கள், சிற்பங்கள் அல்லது படங்களை அறைகளில் வைப்பது அல்லது சுவர்களில் மாட்டுவதை பொறுத்து வீடுகளில் நேர்மறை சக்திகள் அல்லது எதிர்மறை சக்திகள் வெளிப்படுகின்றன என்று வாஸ்து நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் வீடுகளில் சிலைகள் அல்லது படங்களை மாட்டும் முன்னர் மனதில் கொள்ளவேண்டிய விஷயங்கள் பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.

     * ஒற்றைக் கொம்பு கொண்ட யூனிகார்ன் குதிரை படம் அல்லது மான்கள் துள்ளி ஓடும் படத்தையும் மாட்டி வைக்கலாம். அவை, பெருமை மற்றும் செல்வத்தை குறிக்கக்கூடியவையாக சொல்லப்படுகின்றன.

     * வீடுகள் அல்லது அறைகளில் கிழக்கு பகுதிகளில் அறிவு மற்றும் சக்தி ஆகியவற்றின் உருவகமாக உள்ள யானைகள் கூட்டமாக இருக்கும் படங்கள் அல்லது இரண்டு கொக்குகள், இரண்டு அன்னங்கள், பறந்து செல்லும் பறவைகள் கொண்ட படங்களையும் மாட்டலாம். அவை ஒற்றுமையை குறிப்பிடுவதாக அமையும்.

    * ஒரு யானை கொண்ட படமாக இருந்தால் அதன் தும்பிக்கை மேல் நோக்கி இருப்பது சிறப்பு.

    * தைரியம் மற்றும் வீரம் ஆகியவற்றை காட்டும் குட்டிகளுடன் கூடிய தாய் சிங்கத்தின் படம், வளத்தை எடுத்துச்சொல்லும் பெரிய பாய்மர கப்பல் ஆகிய படங்களையும் வீடுகளில் பயன்படுத்தலாம்.

     * சமையலறை சுவர்களில் அல்லது சாப்பிடும்போது கண்களில் படும்படி விதவிதமான காய்கறிகள், பழங்கள் போன்றவை அடங்கிய படங்களை மாட்டி வைக்கலாம்.

    * படுக்கையறை சுவர்களுக்கு மென்மையான நீல மலர்கள் கொண்ட படம் மற்றும் மேஜையில் அலாரம் கொண்ட கடிகாரம் ஆகியவை பொருத்தமாக இருக்கும்.

    * போர்க்களத்தில் பயன்படுத்தும் ஆயுதங்கள், போரை நினைவு படுத்தும் சிற்பங்கள் அல்லது புகைப்படங்கள், பீரங்கி பொம்மைகள், பெருக்கல் குறி போன்ற வாள்கள் ஆகியவற்றை வீடுகளில் வைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

    * சிங்கம், புலி போன்ற விலங்குகள் இரையை துரத்துவது அல்லது அவற்றை வாயில் கவ்வி கொண்டிருப்பது போன்ற படங்களும் எதிர்மறை உணர்வுகளை ஏற்படுத்தும் என்ற நிலையில் அவற்றை தவிர்க்க வேண்டும்.

    • பாண்டியர் கால சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
    • சிற்பங்களை பாதுகாப்பது நமது ஒவ் வொருவரின் கடமையாகும்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகேயுள்ள உலக்குடி கிராமத்தில் பாண்டிய நாடு பண்பாட்டு மைய தொல்லி யல் கள ஆய்வாளர்களான ஸ்ரீதர் மற்றும் தாமரைக் கண்ணன் ஆகியோர் கள மேற்பரப்பாய்வில் ஈடுபட்ட னர். அப்போது அங்கு பாண்டியர் கால சிற்பங்கள் இருப்பதை கண்டறிந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறிய தாவது:-

    உலக்குடி கிராமத்தில் விவசாய நிலத்தில் சிவலிங் கம் ஒன்று காணப்படுகிறது. இந்த சிவலிங்கமானது சதுர வடிவில் செதுக்கப்பட்டுள் ளது. இந்த சிவலிங்கத்தை ஊர் பொதுமக்கள் சில காலத்திற்கு முன்பு வரை வழிபட்டு வந்துள்ளனர். இந்த சிவலிங்கத்தின் வடிவமைப்பை வைத்துப் பார்க்கும்போது முற்கால பாண்டியரின் கைவண்ணத் தில் உருவானவையாகவும் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும் கருதலாம்.

    சிவலிங்கத்தின் அருகே ஒரு கொற்றவை சிற்பம் காணப்படுகிறது. இந்த சிற்ப மானது ஒரு முற்று பெறாத சிற்பமாகும். தலைப்பகுதி கரண்ட மகுடமும், காது களில் காதணியும் தெளி வாக இடம்பெற்றுள்ளது. வலது கையானது கத்தியை பிடித்த படியும் இடது கையை கீழே தொங்கவிட்டும் அக்கரத்தில் தெளிவற்ற ஓர் ஆயுதம் இனங்கான முடி யாத நிலையில் உள்ளது.

    மேலும் இந்த சிற்பமானது 3 அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இவற்றின் காலமும் சிவலிங்கத்தின் காலமும் ஒன்றாக கருதலாம்.

    இதேபோல் உலக்குடி கிராமத்தின் பேருந்து நிறுத் தம் அருகே பாண்டியர் காலத்தைச் சேர்ந்த விஷ்ணு சிற்பம் நின்ற கோலத்தில் காணப்பட்டது. 4 அடி உய ரத்தில் 4 கரத்துடனும் வலது மேற்கரத்தில் சக்கரமும் இடது மேற்கரத்தில் சங்கும் இடம் பெற்றுள்ளன. வலது முன் கரத்தில் அபயம் காட்டியும் இடது முன் கரத்தை கடிஹஸ்தமாகவும் வைத்து நின்ற கோலத்தில் சிறப்பாக வடிக்கப்பட்டுள் ளது.

    தலையில் கிரீட மகுடமும் மார்பில் முப்புரிநூலும் இடையில் இடைக்கச்சை அணிந்தபடி சிற்பம் வடிக் கப்பட்டுள்ளது. உலக்குடி கிராமத்தில் இது போன்ற சிற்பங்கள் தொடர்ந்து கிடைத்து வருவதை பார்க் கும் போது முற்காலங்களில் ஒரு சிவன் கோவில் இருந்து அழிந்திருக்கக் கூடும் என் றும் முற்காலங்களின் வர லாற்று சான்றுகள் நிறைந்த ஊராகவும் கருதலாம் என் றும் இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க சிற்பங்களை பாதுகாப்பது நமது ஒவ் வொருவரின் கடமையாகும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மாமல்லபுரம் சிற்பங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை.
    • நவீன தொழில்நுட்ப காலத்தில் சிற்பங்களை அதன் தன்மை மாறாமல் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.

    சென்னையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது மாமல்லபுரம். தமிழ்நாட்டின் சிற்பக்களஞ்சியம் எனப்படும் மாமல்லபுரத்துக்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகின்றனர். இங்கு குகை கோவில்கள், சிற்பங்கள் அமைந்துள்ளன. இவை உலக பிரசித்திபெற்று திகழ்கிறது. பல்லவர் கால சிற்பங்கள் பார்க்க பரவச மூட்டும் வகையில் அமைந்து உள்ளன.

    யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட கிருஷ்ண மண்டபம் என அழைக்கப்படும் பாறை குடை சிற்பம் மாமல்லபுரத்தில் தலசயனப் பெருமாள் கோவிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ளது. இந்த சிற்பம் பெரிய பாறையில் குடைந்து உருவாக்கப்பட்டதாகும்.

    இந்த குடைவரை சிற்ப வளாகத்தில் உள்ளே இருக்கும் பாறையில் கிருஷ்ணர் பசுவின் மடியில் பால்கறப்பது போன்றும், அவரது குறும்புத்தனம், லீலைகள் குறித்து சிற்பங்களாக செதுக்கி வைக்கப்பட்டு உள்ளன.

    சுற்றுலா பயணிகளை கவரும் கிருஷ்ணரின் வெண்ணை பந்து எனப்படும் கருங்கல் பிரமாண்டமாக அமைந்துள்ளது. அர்ஜூனன் தபசு பகுதியில் 2 யானைகள் உள்பட பல சிற்பங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நிலையில் உள்ளன. அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், ஐந்து ரதம், கடற்கரை கோவில் என மாமல்லபுரத்தில் ஒருநாள் முழுவதும் இருந்து பார்த்து ரசிக்கும் இடங்கள் உள்ளன.

    கடற்கரையில் இருக்கும் இந்த சிற்பங்கள் கடல் காற்றினால் சேதம் அடைகின்றன. காற்றின் மூலம் உப்புத்துகள்கள் பரவி சிற்பங்களின் மேல் பட்டு அரிப்பதால் சிற்பங்களின் நுட்பமான வேலைப்பாடுகள் வெளியில் தெரியாமல் பாதிக்கின்றன. உப்பு அரித்த இடங்களில் சிறு சிறு துளைகள் ஏற்பட்டு மழைநீர் மற்றும் அசுத்தங்கள் சேர்ந்து பாதிப்பை அதிகமாக்குகின்றன.

    தூசிகள் சிற்பங்கள் முழுவதும் பரவி சிற்ப வளாக பகுதிகளை பாதிப்படைய செய்கிறது. அதேபோல் காக்கை, குருவி, குரங்கு போன்றவற்றின் எச்சங்கள் மூலமாகவும் ஒருபுறம் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பை தவிர்க்க தொல்பொருள் ஆய்வுத்துறை ஆண்டுக்கு ஒருமுறை ரசாயன கலவை கலந்த தண்ணீர் மூலம் சுத்தம் செய்து உப்பு படிமங்களை அகற்றி வருகிறது. என்றாலும் பாதிப்புகளை முழுமையாக சரிசெய்ய இயலாத நிலைதான் உள்ளது. இன்றைய நவீன தொழில்நுட்ப காலத்தில் சிற்பங்களை அதன் தன்மை மாறாமல் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். இதுபற்றி தொல்லியல் ஆர்வலர்கள் கூறியதாவது:-

    கடல் உப்புகள் மற்றும் மணல் நிறைந்த காற்று ஆகியவை கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள வரலாற்று கட்டிடங்களுக்கு இயற்கை மாசுபாட்டிற்கான நிரந்தர காரணங்களாகும். மாமல்லபுரம் சிற்பங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை.

    நம் முன்னோர் விட்டுச்சென்ற வரலாற்று பொக்கிஷங்களான இவற்றை நம் எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாத்து வைக்க வேண்டியது நமது கடமை. எனவே இன்னும் கூடுதல் அக்கறை எடுத்து சிற்பங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட போது பல்வேறு பழமையான சிற்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
    • கோவிலின் வலதுபுறத்தில் இல்லற வாழ்வியலை காட்சிப்படுத்தும் புடைப்பு சிற்பங்கள் உள்ளது.

    உடுமலை:

    உடுமலை, மடத்துக்குளம் தாலுகா பகுதிகளில் பழங்கால வரலாற்று சின்னங்கள் அமைந்துள்ளன. இவற்றை கண்டறியும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் உடுமலை அருகே சங்கமநாயக்கன்பாளையம் கிராமத்தில் பழமை வாய்ந்த ரங்கப்பன் உடனமர் ரங்கம்மாள் கோவில் உள்ளது. இக்கோவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட போது பல்வேறு பழமையான சிற்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    இது குறித்து தகவல் கிடைத்த உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கோவிலில் ஆய்வு செய்தனர்.

    அவர்கள் கூறியதாவது:-

    சங்கமநாயக்கன்பாளையம் கிராமத்திலுள்ள, ரங்கப்பன் உடனமர் ரங்கம்மாள் கோவிலில் புடைப்பு சிற்பங்களும், கல்வெட்டும் காணப்பட்டது. கற்கோவிலின் முன் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் கோவில் கட்டியவர்கள் பெயரும், அதில் பணியாற்றியவர்கள் பெயரும் இடம் பெற்றுள்ளது.

    கோவிலின் வலதுபுறத்தில் இல்லற வாழ்வியலை காட்சிப்படுத்தும் புடைப்பு சிற்பங்கள் உள்ளது. கடந்த 350 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவில் வரலாற்று சின்னமாக உள்ளது. புதுப்பிக்கும் போது கல்வெட்டு மற்றும் புடைப்பு சிற்பங்களை சேதப்படுத்தாமல் புதுப்பித்துள்ளது சிறப்புக்குரியதாகும்.

    மேலும் கால்நடைகளின் தேவைக்காக கல்தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்பி சேவை செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

    • முழுக்க முழுக்க உள்ளூர் கலைஞர்களை கொண்டு சிமெண்டு கலவை, பிளாஸ்டா பாரீஸ் மூலம் புலி, மான்,பாம்பு, மயில், பறவை சிற்பங்கள் உருவாக்கப்படுகிறது.
    • பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை பார்த்தும், வாங்கியும் செல்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை முருங்கம்பாக்கத்தில் உள்ள கலை மற்றும் கைவினை கிராமத்தில் உள்ளூர் கலைஞர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் அரங்குகள் அமைத்து கைவினை பொருட்கள் உருவாக்கப்படுகிறது.

    இங்கு சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் தனி அரங்கு உள்ளது. இங்கு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகளின் சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    அழிந்து வரும் காடுகள், வனவிலங்குகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும், மீட்கும் முயற்சியாக சிற்பங்கள் உருவாக்கப்பட்டு அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.

    முழுக்க முழுக்க உள்ளூர் கலைஞர்களை கொண்டு சிமெண்டு கலவை, பிளாஸ்டா பாரீஸ் மூலம் புலி, மான், பாம்பு, மயில், பறவை சிற்பங்கள் உருவாக்கப்படுகிறது. இவை புதுவைக்கு வருகிற சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை பார்த்தும், வாங்கியும் செல்கின்றனர். மேலும் தங்கள் வீடுகளிலும், நிறுவனங்களிலும் சிற்பங்கள் அமைக்க தேவையான சிற்பங்களை ஆர்டர் கொடுத்தும் செல்கின்றனர்.

    இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த ஆர்டர்கள் மட்டுமே கிடைத்த நிலையில் தற்போது விலங்கு மற்றும் பறவை சிற்பங்களுக்கு ஆர்டர்கள் குவிந்துள்ளன. இதனால் இரவு பகலுமாக கலைஞர்கள் ஆர்வத்துடன் சிற்பங்களை செய்து வருகின்றனர்.

    மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து மிருகங்களின் சிலைகளையும் அரங்கில் அமைக்க ஏற்பாடும் செய்யப்பட்டு வருகின்றது. இங்கு உருவான விலங்குகளின் சிலைகள் ஜார்க்கண்ட், கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    தற்போது பறவை, விலங்குகள் என 100 சிற்பங்கள் தயாராகி வருகிறது. இவை ஆந்திரா மாநிலத்தின் உள்ள நகர்வனம் பூங்காவில் வைக்கப்பட உள்ளது. இதேபோல் பிற மாநில பூங்காக்களுக்கும் புதுவையில் தயாராகும் சிற்பங்கள் செல்ல உள்ளது.

    முருகப்பாக்கம் கைவினை கிராமத்துக்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த வனவிலங்குகளின் சிலைகள் முன்பு நின்று செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்தும், வாங்கியும் செல்கின்றனர்.

    • புதுக்கோட்டையிலிருந்து லண்டனுக்கு கல் சிற்பங்கள் கொண்டு செல்லப்படுகிறது
    • சிற்ப கலைஞரிடம் ஒப்படைத்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் கிடைக்கும் பாறைகள் கற்சிலைகள் செய்ய ஏதுவாக இருப்பதால், இங்கு அதிகமான இடங்களில் சுவாமி, அம்மன் சிலைகள், கல் சிற்பங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து பல்வேறு மாட்டங்கள், மாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளி நாடுகளுக்கும் சிற்பங்கள் கொண்டு செல்லப்படுவதால், இம்மாவட்டம் சிலை வடிப்பில் முன்னோடியாக விளங்குகிறது.

    இந்நிலையில் லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள பழமையான பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, இக்கோவிலில் அம்மனுக்கு ெசலுத்தப்பட்ட காணிக்கை, பக்தர்களின் நன்கொடை மூலம் கோவிலின் அனைத்து பகுதிகளையும் 7 அடி உயரத்துக்கு கல்லால் அமைக்க திட்டமிட்ட அந்த கோவிலின் நிர்வாகிகள், இக்கோவிலுக்கான கல் சிற்பங்கள் செய்யும் பணியை புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தை சேர்ந்த சிற்ப கலைஞரிடம் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து, கடந்த 5 ஆண்டுகளாக அறந்தாங்கி அருகே உள்ள ராஜேந்திரபுரம் பகுதியில் லண்டன் பத்ரகாளி அம்மன் கோவில் கட்டுமானத்து தேவையான சிற்பங்கள் செய்ய கற்கள் கொண்டுவரப்பட்டு, கல்சிற்பங்கள் செதுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

    தற்போது ஆழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கல்சிற்பங்கள் செதுக்கும் அனைத்து பணிகளும் முடிவடைந்ததை தொடர்ந்து, அனைத்து சிற்பங்களும் தனித்தனியாக 51 மரப்பெட்டிகளுக்குள் வைத்து அடைக்கப்பட்டன. அந்த பெட்டிகள் கிரேன் மூலம் லாரிகளில் ஏற்றப்பட்டு, சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. இவை அங்கிருந்து கப்பல் மூலம் லண்டனுக்கு கொண்டு செல்லப்படடவுடன், கோவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    ×