search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாண்டியர் காலம்"

    • பாண்டியர் கால சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
    • சிற்பங்களை பாதுகாப்பது நமது ஒவ் வொருவரின் கடமையாகும்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகேயுள்ள உலக்குடி கிராமத்தில் பாண்டிய நாடு பண்பாட்டு மைய தொல்லி யல் கள ஆய்வாளர்களான ஸ்ரீதர் மற்றும் தாமரைக் கண்ணன் ஆகியோர் கள மேற்பரப்பாய்வில் ஈடுபட்ட னர். அப்போது அங்கு பாண்டியர் கால சிற்பங்கள் இருப்பதை கண்டறிந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறிய தாவது:-

    உலக்குடி கிராமத்தில் விவசாய நிலத்தில் சிவலிங் கம் ஒன்று காணப்படுகிறது. இந்த சிவலிங்கமானது சதுர வடிவில் செதுக்கப்பட்டுள் ளது. இந்த சிவலிங்கத்தை ஊர் பொதுமக்கள் சில காலத்திற்கு முன்பு வரை வழிபட்டு வந்துள்ளனர். இந்த சிவலிங்கத்தின் வடிவமைப்பை வைத்துப் பார்க்கும்போது முற்கால பாண்டியரின் கைவண்ணத் தில் உருவானவையாகவும் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும் கருதலாம்.

    சிவலிங்கத்தின் அருகே ஒரு கொற்றவை சிற்பம் காணப்படுகிறது. இந்த சிற்ப மானது ஒரு முற்று பெறாத சிற்பமாகும். தலைப்பகுதி கரண்ட மகுடமும், காது களில் காதணியும் தெளி வாக இடம்பெற்றுள்ளது. வலது கையானது கத்தியை பிடித்த படியும் இடது கையை கீழே தொங்கவிட்டும் அக்கரத்தில் தெளிவற்ற ஓர் ஆயுதம் இனங்கான முடி யாத நிலையில் உள்ளது.

    மேலும் இந்த சிற்பமானது 3 அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இவற்றின் காலமும் சிவலிங்கத்தின் காலமும் ஒன்றாக கருதலாம்.

    இதேபோல் உலக்குடி கிராமத்தின் பேருந்து நிறுத் தம் அருகே பாண்டியர் காலத்தைச் சேர்ந்த விஷ்ணு சிற்பம் நின்ற கோலத்தில் காணப்பட்டது. 4 அடி உய ரத்தில் 4 கரத்துடனும் வலது மேற்கரத்தில் சக்கரமும் இடது மேற்கரத்தில் சங்கும் இடம் பெற்றுள்ளன. வலது முன் கரத்தில் அபயம் காட்டியும் இடது முன் கரத்தை கடிஹஸ்தமாகவும் வைத்து நின்ற கோலத்தில் சிறப்பாக வடிக்கப்பட்டுள் ளது.

    தலையில் கிரீட மகுடமும் மார்பில் முப்புரிநூலும் இடையில் இடைக்கச்சை அணிந்தபடி சிற்பம் வடிக் கப்பட்டுள்ளது. உலக்குடி கிராமத்தில் இது போன்ற சிற்பங்கள் தொடர்ந்து கிடைத்து வருவதை பார்க் கும் போது முற்காலங்களில் ஒரு சிவன் கோவில் இருந்து அழிந்திருக்கக் கூடும் என் றும் முற்காலங்களின் வர லாற்று சான்றுகள் நிறைந்த ஊராகவும் கருதலாம் என் றும் இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க சிற்பங்களை பாதுகாப்பது நமது ஒவ் வொருவரின் கடமையாகும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×