search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Color paintings"

    • யானை படமாக இருந்தால் தும்பிக்கை மேல் நோக்கி இருப்பது சிறப்பு.
    • மான்கள் துள்ளி ஓடும் படத்தையும் மாட்டி வைக்கலாம்.

    தன்னம்பிக்கையை அளிக்கும் படங்கள், இயற்கை அழகு மிகுந்த வண்ண ஓவியங்கள் ஆகியவற்றால் சுவர்கள் அலங்கரிக்கப்படும்போது மங்களம் தரும் சுப அதிர்வுகள் மனதில் ஏற்படும். வீட்டில் உள்ளவர்களுக்கும் அதன் காரணமாக மனதில் உற்சாகம் உண்டாவதோடு, வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் அந்த உற்சாகம் பரவும்.

    வீடுகள் சிறிய அளவு கொண்டதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் அவற்றில் செய்யப்பட்டிருக்கும் அலங்காரம் அனைவரையும் கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பது பலருக்கும் விருப்பமாக இருக்கும். அதற்காக விலை உயர்ந்த பொருட்களை கொண்டு வீடுகளை அழகுபடுத்த வேண்டும் என்பதில்லை. கண்கவரும் வண்ணங்களில் அழகிய ஓவியங்களை ஆங்காங்கே மாட்டி வைத்தும் அறையின் சூழலை இனிமையாக மாற்ற இயலும்.

    அவ்வாறு ஓவியங்கள், சிற்பங்கள் அல்லது படங்களை அறைகளில் வைப்பது அல்லது சுவர்களில் மாட்டுவதை பொறுத்து வீடுகளில் நேர்மறை சக்திகள் அல்லது எதிர்மறை சக்திகள் வெளிப்படுகின்றன என்று வாஸ்து நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் வீடுகளில் சிலைகள் அல்லது படங்களை மாட்டும் முன்னர் மனதில் கொள்ளவேண்டிய விஷயங்கள் பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.

     * ஒற்றைக் கொம்பு கொண்ட யூனிகார்ன் குதிரை படம் அல்லது மான்கள் துள்ளி ஓடும் படத்தையும் மாட்டி வைக்கலாம். அவை, பெருமை மற்றும் செல்வத்தை குறிக்கக்கூடியவையாக சொல்லப்படுகின்றன.

     * வீடுகள் அல்லது அறைகளில் கிழக்கு பகுதிகளில் அறிவு மற்றும் சக்தி ஆகியவற்றின் உருவகமாக உள்ள யானைகள் கூட்டமாக இருக்கும் படங்கள் அல்லது இரண்டு கொக்குகள், இரண்டு அன்னங்கள், பறந்து செல்லும் பறவைகள் கொண்ட படங்களையும் மாட்டலாம். அவை ஒற்றுமையை குறிப்பிடுவதாக அமையும்.

    * ஒரு யானை கொண்ட படமாக இருந்தால் அதன் தும்பிக்கை மேல் நோக்கி இருப்பது சிறப்பு.

    * தைரியம் மற்றும் வீரம் ஆகியவற்றை காட்டும் குட்டிகளுடன் கூடிய தாய் சிங்கத்தின் படம், வளத்தை எடுத்துச்சொல்லும் பெரிய பாய்மர கப்பல் ஆகிய படங்களையும் வீடுகளில் பயன்படுத்தலாம்.

     * சமையலறை சுவர்களில் அல்லது சாப்பிடும்போது கண்களில் படும்படி விதவிதமான காய்கறிகள், பழங்கள் போன்றவை அடங்கிய படங்களை மாட்டி வைக்கலாம்.

    * படுக்கையறை சுவர்களுக்கு மென்மையான நீல மலர்கள் கொண்ட படம் மற்றும் மேஜையில் அலாரம் கொண்ட கடிகாரம் ஆகியவை பொருத்தமாக இருக்கும்.

    * போர்க்களத்தில் பயன்படுத்தும் ஆயுதங்கள், போரை நினைவு படுத்தும் சிற்பங்கள் அல்லது புகைப்படங்கள், பீரங்கி பொம்மைகள், பெருக்கல் குறி போன்ற வாள்கள் ஆகியவற்றை வீடுகளில் வைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

    * சிங்கம், புலி போன்ற விலங்குகள் இரையை துரத்துவது அல்லது அவற்றை வாயில் கவ்வி கொண்டிருப்பது போன்ற படங்களும் எதிர்மறை உணர்வுகளை ஏற்படுத்தும் என்ற நிலையில் அவற்றை தவிர்க்க வேண்டும்.

    மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சுரண்டை சிறுமி ஓவியம் வரைவதிலும், பாடங்களை படிப்பதிலும் காட்டும் ஆர்வம் அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோரை வியப்படைய செய்துள்ளது. #SurandaiGirl
    சுரண்டை:

    நமது வாழ்நாளில் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது. வயது அதிகரிக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் பலருக்கு பலவிதமான நோய்கள் எளிதாக தாக்கிவிடுகிறது.

    ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பெரியவர்களுக்கு வரக்கூடிய சில ஆபத்தான நோய்கள் குழந்தைகளுக்கே வந்து விடுகிறது. மேலும் விபத்து உள்ளிட்ட காரணங்களால் தவிர்க்க முடியாத ஆபத்தான அறுவை சிகிச்சைகளை குழந்தைகள் எதிர்கொள்ள வேண்டியதாகிவிடுகிறது.

    அப்படி பாதிக்கப்படும் குழந்தைகளின் பெற்றோர் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஓடி விளையாட வேண்டிய வயதில் இப்படி ஆகிவிட்டதே என வேதனையடைகிறார்கள். குழந்தைகளுக்கும் அது பெரிய அவதியாகத்தான் இருக்கும். தெருவில் ஓடியாடி விளையாடிவிட்டு, நோய் அவதியால் ஆஸ்பத்திரியில் முடங்கி கிடப்பது மிகப்பெரிய கஷ்டம் தான்.

    ஆனால் தலையில் வந்த கட்டியால் அறுவைசிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில்அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி, அதைப்பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டி மகிழ்ச்சியாக பொழுதுபோக்கி வருகிறார்.

    சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜேந்திரன். இவரது மனைவி குருவம்மாள். இவர்களது மகள் கார்த்திகா. 11வயது சிறுமியான இவள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    ஓவியம் வரைவதிலும், வண்ணம் தீட்டுவதிலும் திறமைமிக்கவராக விளங்கிவந்த சிறுமி கார்த்திகா, தலைவலியால் மிகவும் அவதிப்பட்டாள். இதையடுத்து அவளை நெல்லை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களிடம் காண்பித்தனர். அவர்கள் பரிசோதனை செய்ததில், சிறுமியின் தலையில் ஒரு கட்டி இருப்பது தெரியவந்தது.

    அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து கார்த்திகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். சிறுமிக்கு அறுவைசிகிச்சை நடக்கும் நாள் இன்றும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் அவள் கடந்த 20 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

    சிறுமி வரைந்துள்ள ஓவியங்களை படங்களில் காணலாம்.

    ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் பள்ளிக்கு செல்ல முடியவில்லை என்றும், தோழிகளுடன் விளையாட முடியவில்லை என்றும் சிறுமி கார்த்திகாவுக்கு வருத்தம் இருந்துள்ளது. அவள் தான் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுக்கு வெளியே வராண்டாவில் அமர்ந்து தனக்கு பிடித்தமான ஓவியங்களை வரைந்து வருகிறார். மேலும் தனது பாட புத்தகங்களையும் படித்து வருகிறாள்.

    மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி ஓவியம் வரைவதிலும், பாடங்களை படிப்பதிலும் காட்டும் ஆர்வம் அங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரை வியப்படைய செய்துள்ளது.  #SurandaiGirl
    ×