search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு வழிபாடு"

    • நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • கோவில் வளாகத்தில் இருந்த தாசர்களுக்கும் படையலிட்டு வழிபாடு நடத்தினர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக, காரமடை அரங்கநாத சுவாமி கோவில் அமைந்து உள்ளது.

    இங்கு ஆண்டுதோறும் மாசிமகம் தேர்த்திருவிழா மற்றும் புரட்டாசி சனிக்கி ழமை ஆகியவை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி காரமடை பெருமாள் கோவிலில் நடப்பாண்டுக்கான புரட்டாசி 3-வது சனிக்கி ழமை சிறப்பு வழிபாடு இன்று நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டது.

    இதனையொட்டி இன்று காலை முதலே மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். இதன் காரணமாக கோவிலில் கூட்டம் அலைமோதியது.

    கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து அரங்கனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் இருந்த தாசர்களுக்கும் படையலிட்டு வழிபாடு நடத்தினர்.

    காரமடை பெருமாள் கோவிலில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் லோகநாதன் மற்றும் தமிழக மக்கள்நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் செய்து இருந்தனர்.இேதபோல் கோவை பாப்பநாயக்கன் பாளையம் சீனிவாச பெருமாள் கோவில், லட்சுமி நரசிம்மர் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

    சேலம்:

    சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

    கோட்டை பெருமாள்: சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில் இன்று காலை சிறப்பு அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. அதன்பின்னர் அழகிரிநாதர் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள பட்டை கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவில், பெரமனூர் வெங்கடேச பெருமாள் கோவில், ஜாகீர் அம்மாபாளையம் வரபிரசாத ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பூஜைகள் நடந்தது. இதேபோல் ஆனந்தா இறக்கம் அருகே உள்ள லட்சுமி நாராயணசாமி கோவில், செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவில், செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், அயோத்தியாப்பட்டணம் ராமர் கோவில், சின்னத் திருப்பதி வெங்கடேச பெருமாள்கோவில், அழகாபுரம் வெங்கடேசுவரா பாலாஜி டிரஸ்ட் கோவில், உடையாப்பட்டி சென்றாய பெருமாள் கோவில், கடைவீதி வேணுகோபாலசுவாமி கோவில், நாமமலை பெருமாள் கோவில், நெத்திமேடு கரியபெருமாள் கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

    • புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    வேலூர்:

    புரட்டாசி மாதத்தின் 2-ம் சனிக்கிழமையான இன்று பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு திருமஞ்சன அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    வேலூர் அண்ணா சாலையில் உள்ள திருமலை, திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள பெருமாள் கோவில், காட்பாடி சாலையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேச பெருமாள், மெயின் பஜாரில் உள்ள வெங்கடேச பெருமாள், பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில், வேலப்பாடியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டிருந்தன.

    குடியாத்தத்தை அடுத்த மீனூர்மலை வெங்கடேச பெருமாள் கோவிலில் ராஜ அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சி யளித்தார் அதேபோல் பத்மாவதி தாயார் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி யளித்தார் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    குடியாத்தம் பிச்சனூர் தென்திருப்பதி ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ரங்கநாதர், பத்மாவதி சமேத வெங்கடேச பெருமாள் கோவிலிலும் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி மூலவர் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கீழ்அரசம்பட்டு அருகே உள்ள சிங்கிரிகோவில் லட்சுமி நரசிம்மர் கோவிலில் அதிகாலை மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை முதல் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பிரம்மபுரம் சஞ்சீவிராயர் மலையில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

    பெரு மாளுக்கு மலர்களாலும், வெள்ளி கவசத்தாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    • கரிவராஜ பெருமாள் கோவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்த கோவில் புதூரில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கருத்திருமராயப் பெருமாள் எனும் ஸ்ரீ கரிவராஜ பெருமாள் கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.

    மேலும் கோவி லில் திருப்பணிகள் நடை பெற்று வருவதால் விநாயகர் கருத்திருமராயப் பெருமாள் எனும் ஸ்ரீ கரிவரத வரதராஜ பெருமாள். கருடாழ்வார். ஆஞ்சநேயர். கிருஷ்ணர் பாமா ருக்மணி. மற்றும் கோபுரங்கள் அத்தி மரத்தி னால் சிலைகள் அமைத்து பாலாலயம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    புஞ்சை புளியம்பட்டி கரிவராஜ பெருமாள் கோவில் இன்று புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்பு கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து பொதுமக்கள் தாசர்களுக்கு அரிசி பருப்பு, புளி உள்ளி ட்ட பொருட்களை கொடுத்து வழிபட்டனர்.

    • பிரசன்ன வெங்கட்ரமணசாமி கோவிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கி ழமையை முன்னிட்டு பிரசன்ன வெங்கட்ராமன் சாமிக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனை தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்க லத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கி ழமையை முன்னிட்டு பிரசன்ன வெங்கட்ராமன் சாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சா மிர்தம், தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பிரசன்ன வெங்கட்ரமண சாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வெங்கட்ரமண சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு துளசி இலை, தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலிலும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • நேற்று குருவார சிறப்பு வழிபாடு நடை பெற்றது.
    • நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெற்றது

    திருவாரூர் :

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் நவக்கிரகங்களில் குருபகவானுக்கு உரிய கோவிலாகும். இங்கு நேற்று குருவார சிறப்பு வழிபாடு நடை பெற்றது. இதனை முன்னிட்டு கலங்காமற் காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது.

    மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது. உற்சவர் குருபகவானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதை போல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் வியாழக்கிழமையை முன்னிட்டு குருதெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசசனம் செய்தனர்.

    • ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.

    சோழவந்தான்

    சோழவந்தான் ஜெனகநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் முதல் வார சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேத ஜெனக நாராயண பெருமாளுக்கு 21 திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையிலும் சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடந்தது.

    இதேபோல் அரசு பஸ் பணிமனை அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சனீஸ்வர பகவான் கோவிலிலும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.திரவுபதி அம்மன் கோவிலில் உள்ள மகா விஷ்ணுவிற்கு பால், தயிர் உள்பட 12 பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. குருவித்துறை சித்திர ரத வல்லபபெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனி வாரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.

    • தருமபுரி மாவட்ட பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

    புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டின் முக்கிய மாதம் ஆகும்.இந்த மாதத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் சிறப்பு பலன்கள் கிடைப்பதாக நம்பப்படுகிறது.புரட்டாசி முதல் சனிக் கிழமையை யொட்டி காலை முதலே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தருமபுரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்க ளில் வழிபாடு செய்ய வரத்தொடங்கினர்.

    அதன்படி தருமபுரி கோட்டையில் உள்ள வரமகாலட்சுமி பரவாசு தேவர் கோவில், செட்டிக் கரை ஸ்ரீ வெங்கட்ரமணா கோவில், பழைய தர்மபுரி வெங்கட்ரமணா கோவில், மூக்கனுர் ஆதிகேசவப் பெருமாள் கோவில், மணியம்பாடி ஸ்ரீவெங்கட் ரமணா கோவில், அதகப்பாடி பெருமாள் கோவில், எஸ், வி, சாலையில் உள்ள பெருமாள் கோவில், பென்னாகரம், நல்லம்பள்ளி, பாலக்கோடு, கடத்தூர், மொரப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களிலும் பொதுமக்கள் பூஜைப் பொருட்கள் மற்றும் துளசி மாலை உடன் வந்து பூஜை செய்தனர். பெருமாள் கோவில்களில், சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு செய்தனர்.

    சிறப்பு அலங்கா ரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி நடந்தது
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்

    வேலூர்:

    புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேலூர் அண்ணா சாலையில் உள்ள திருமலை, திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள பெருமாள் கோவில், வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில், காட்பாடி சாலையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேச பெருமாள், மெயின் பஜாரில் உள்ள வெங்கடேச பெருமாள், பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில், வேலப்பாடியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டிருந்தன.

    சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் அதிகாலை மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை முதல் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    குடியாத்தத்தை அடுத்த மீனூர்மலை வெங்கடேச பெருமாள் கோவிலில் ராஜ அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார் அதேபோல் பத்மாவதி தாயார் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி யளித்தார் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    குடியாத்தம் பிச்சனூர் தென்திருப்பதி ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ரங்கநாதர், பத்மாவதி சமேத வெங்கடேச பெருமாள் கோவிலிலும் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி மூலவர் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கீழ்அரசம்பட்டு அருகே உள்ள சிங்கிரிகோவில் லட்சுமி நரசிம்மர் கோவிலில் அதிகாலை மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை முதல் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பிரம்மபுரம் சஞ்சீவிராயர் மலையில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பெரு மாளுக்கு மலர்களாலும், வெள்ளி கவசத்தாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    கே.வி.குப்பத்தை அடுத்த மேல்காவனூர் பத்மாவதி தாயார் சமேத திருவேங்கடம் உடையான் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை யொட்டி மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு ராஜஅலங்காரம், ஆராதனை ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • வீரராகவப்பெருமாள் கோவிலில் இன்று(சனிக்கிழமை) அதிகாலை 5 மணி முதல் சிறப்பு பூஜைகள் தொடங்குகிறது.
    • காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரைக்கும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    திருப்பூர்:

    புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாக உள்ளது. இதில் இந்த மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அந்த வகையில் திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் இன்று(சனிக்கிழமை) அதிகாலை 5 மணி முதல் சிறப்பு பூஜைகள் தொடங்குகிறது.

    6 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டிற்கு பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் பெருமாள் கோவிலில் பக்தர்கள் வரிசையாக நின்று தரிசனம் செய்வதற்கு வசதியாக கோவிலின் வெளியேயும், உள்ளேயும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு அதிகாலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

    இதேபோல் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள திருப்பூர் திருப்பதி கோவிலிலும் வழிபாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இங்கு அதிகாலை 5.30 மணிக்கு சுப்ரபாத சேவையுடன் சிறப்பு பூஜைகள் தொடங்கியது. இதையடுத்து தோமாலை சேவை, திருவாராதன ராஜ உபசார பூஜை, பஞ்சாங்க பூஜை, சகஸ்ரநாம அர்ச்சனை, சாற்றுமறை, சகஸ்ரநாம பாராயணம், காலை 9 மணிக்கு உற்சவபெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம், அஷ்டோத்ர அர்ச்சனை, உச்சிகால பூஜை நடைபெற்றது.

    காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரைக்கும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதேபோல் திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களிலும், பிற கோவில்களில் உள்ள பெருமாள் சன்னதிகளிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.

    • பாலமுருகனுக்கு ஆவணிமாத கிருத்திகையை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகனுக்கு ஆவணிமாத கிருத்திகையை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதேபோல் நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் கோவில், கபிலர்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பரமத்தி அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடி உயரம் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர்கோவில்,பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோயிலில் உள்ள சுப்ரமணியர், ராஜா சுவாமி கோவில் உள்ள ராஜா சுவாமி, பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகன், மற்றும் சுள்ளிப்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வான சமேத சுப்பிரமணியர் கோவில், ஆனங்கூர் மாரியம்மன் கோவிலில் உள்ள முருகன் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் உள்ள முருகப்பெருமானுக்கு கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    • தருமபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜூன சாமி கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடை பெற்றது.
    • நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் சிவன் கோவில்களிலும் நேற்று ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    அதன்படி தருமபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜூன சாமி கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடை பெற்றது. இதையொட்டி நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் உபகார பூஜைகளும், தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பின்னர் கோவில் வளாகத்திலேயே சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரி சனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோன்று தருமபுரி நெசவாளர் நகரில் உள்ள மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் நந்தி மற்றும் மகாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆரா தனைகள் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் தருமபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவாணேஸ்வரர் கோவில், அன்னசாகரம் சாலையில் உள்ள சித்தி லிங்கேஸ்வரர் கோவில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரகதாம்பாள் சமேத அருளீஸ்வரர் கோவில், அன்னசாகரம் சோமேஸ்வரர் கோவில், சவுலுப்பட்டி ஆதிலிங் கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் ஆவணி மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு நடை பெற்றது.

    இதேபோன்று மாவட்டத்தின் முக்கிய கோவில்களான தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில், காரி மங்கலம் அருணேஸ்வ ரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும் பிர தோஷத்தை யொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் அடிவாரத்தில் உள்ள அமிர்தேஸ்வரர், அமிர்தாம்பிகை கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதை யொட்டி நந்திக்கு, பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், தேன், இளநீர், எலுமிச்சை, தயிர் உள்ளிட்ட பொருட் களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில் களிலும் ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

    ×