search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
    X

     தருமபுரி கோட்டை மல்லிகார்ஜூன கோவிலில் சாமி ஊர்வலம் வந்தபோது எடுத்த படம்.

    ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

    • தருமபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜூன சாமி கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடை பெற்றது.
    • நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் சிவன் கோவில்களிலும் நேற்று ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    அதன்படி தருமபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜூன சாமி கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடை பெற்றது. இதையொட்டி நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் உபகார பூஜைகளும், தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பின்னர் கோவில் வளாகத்திலேயே சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரி சனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோன்று தருமபுரி நெசவாளர் நகரில் உள்ள மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் நந்தி மற்றும் மகாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆரா தனைகள் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் தருமபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவாணேஸ்வரர் கோவில், அன்னசாகரம் சாலையில் உள்ள சித்தி லிங்கேஸ்வரர் கோவில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரகதாம்பாள் சமேத அருளீஸ்வரர் கோவில், அன்னசாகரம் சோமேஸ்வரர் கோவில், சவுலுப்பட்டி ஆதிலிங் கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் ஆவணி மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு நடை பெற்றது.

    இதேபோன்று மாவட்டத்தின் முக்கிய கோவில்களான தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில், காரி மங்கலம் அருணேஸ்வ ரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும் பிர தோஷத்தை யொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் அடிவாரத்தில் உள்ள அமிர்தேஸ்வரர், அமிர்தாம்பிகை கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதை யொட்டி நந்திக்கு, பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், தேன், இளநீர், எலுமிச்சை, தயிர் உள்ளிட்ட பொருட் களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில் களிலும் ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

    Next Story
    ×