search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
    X

    ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

    • ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.

    சோழவந்தான்

    சோழவந்தான் ஜெனகநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் முதல் வார சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேத ஜெனக நாராயண பெருமாளுக்கு 21 திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையிலும் சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடந்தது.

    இதேபோல் அரசு பஸ் பணிமனை அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சனீஸ்வர பகவான் கோவிலிலும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.திரவுபதி அம்மன் கோவிலில் உள்ள மகா விஷ்ணுவிற்கு பால், தயிர் உள்பட 12 பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. குருவித்துறை சித்திர ரத வல்லபபெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனி வாரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.

    Next Story
    ×