search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிதம்பரம்"

    • சிதம்பரம் நடராஜர் கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்தாது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
    • உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சுவாமி தரிசனம் செய்தார்.

    அவருக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு வருகை தந்த அமைச்சர் ஆதீனத்தின் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து பேசினார்.

    தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சைவத்துடன், தமிழை வளர்க்கும் பணியில் தொன்மையான ஆதீனங்கள் ஈடுபட்டுள்ளன, ஆதீனங்களுக்கு உண்டான சிறப்பை தமிழக அரசு வழங்கும், அவற்றின் பாரம்பரியங்களில் தமிழக அரசும் இந்து அறநிலையத் துறையும், தலையிடாது.

    உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    மற்றபடி சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலைத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை.

    பொதுக்கோயில்களில் ஏதேனும் பிரச்னைகள், முறைகேடுகள் ஏற்பட்டால் அதில் தலையிடும் உரிமை அறநிலையத்துறைக்கு உண்டு. இது தீட்சிதர்கள், நடராஜர் கோயில் நிர்வாகத்துக்கு எதிரான நடவடிக்கை அல்ல.

    சிதம்பரம் ஆலயத்தில் பக்தர்கள் தெரிவித்த புகாரின்படி விருப்பு வெறுப்பு இன்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நியாயத்தின்படியே அறநிலையத்துறை செயல்படும். ஆதீனத்தின் கோயில்கள் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் கணக்குவழக்கு பார்ப்பது வழக்கமான ஒரு நடைமுறைதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது நிவேதா முருகன் எம்.எல்.ஏ, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட அமைப்பாளர் பி. எம் ஸ்ரீதர், மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் ஞானஇமய நாதன், இளையபெருமாள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்கள் அலுவலர்கள் என ஏராளமானவர்கள் உடனிருந்தனர்.

    ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை ஆகஸ்ட் 7 வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி பாட்டியாலா கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #AircelMaxisCase #PChidambaram #KartiChidambaram
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவியில் இருந்த போது ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனத்துக்கு கடந்த 2006-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தலையிட்டதாகவும் இதன்மூலம் அவரும் அவரது நிறுவனமும் பயனடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் கடந்த ஜூன் 5-ஆம் தேதி  அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதே வழக்கில் சி.பி.ஐ முன் ஆஜரான ப.சிதம்பரத்திடம் அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் கேள்விகள் எழுப்பினர். 

    இந்நிலையில் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தன்னை அமலாக்க துறை கைது செய்வதற்கு எதிராக முன் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் கடந்த ஜூன் 5-ந் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி பாட்டியாலா கோர்ட், ஜூலை 10-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டது. 

    இந்நிலையில், இன்று நடந்த மனு மீதான விசாரணைக்காக ப.சிதம்பரம் ஆஜராகியிருந்தார். விசாரணை முடிவில், சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவரையும் ஆகஸ்ட் 7 வரை கைது செய்ய தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 
    ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளதாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். #GST #PChidambaram
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறை என்பதன் அடிப்படையில் கடந்தாண்டு ஜூலை 1-ம் தேதி ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்டது. இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ஜி.எஸ்.டி தினமாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது. ஜிஎஸ்டியால் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளதாகவும், வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்திருந்தார்.

    இதே நிலையில், ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் நாட்டின் வேலை வாய்ப்பு சீர் குலைந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இன்று டெல்லியில் பேசிய முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், “ஜிஎஸ்டியின் வடிவம், கட்டமைப்பு முறை, வரி விதிப்பு மற்றும் அமல்படுத்தப்பட்ட விதம் ஆகியவற்றால் தொழிலதிபர்கள், வணிகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் சாமானியர்களிடையே ஜிஎஸ்டி என்ற வார்த்தை கெட்ட வார்த்தையாக மாறியுள்ளது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், ஜிஎஸ்டி தங்களது வரிச்சுமையை அதிகரித்துள்ளது என சாமானிய மக்களும் உணர்கின்றனர். ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் ஒரு கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை பறித்துள்ளது எனவும் சிதம்பரம் கூறினார். 
    ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். #KartiChidambaram #AircelMaxiscase
    புதுடெல்லி:

    ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் சுமார் 3500 கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு நிதிக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் சில முறைகேடுகள் நடைபெற்றதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது தந்தையை கைது செய்ய டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட் தடை விதித்திருந்தது. இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறையினர் கோர்ட்டில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 

    இந்த வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்திடம் நேற்று சுமார் 6 மணி நேரம் அமலாக்கத்துறையினர் விசாரனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 
    மத்திய அரசின் இணை செயலாளர் பதவிக்கு நேரடியாக வெளியில் இருந்து பணியாளரை தேர்வு செய்ய சமீபத்தில் வெளியிடப்பட்ட விளம்பரம் தீவிர சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என மத்திய முன்னாள் மந்திரி சிதம்பரம் தெரிவித்துள்ளார். #Chidambaram
    புதுடெல்லி :

    அரசுத் துறைகளில் திறமை வாய்ந்தவர்களை அதிகரிக்கும் பொருட்டு லேட்ரல் என்ட்ரி எனும் திட்டப்படி, மத்திய அரசின் 10 துறைகளின் இணை செயலாளர் பதவிக்கு தனியார் நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் பெற்ற நிபுணர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    தனியார் துறைகளில் அனுபவம் பெற்ற நிபுணர்கள், இணை செயலாளர் பதவிக்கு அணுகலாம் என பிரத்யேக விளம்பரத்தையும் மத்திய அரசு நாளிதழ்களில் வெளியிட்டுள்ளது. 

    இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய முன்னாள் நிதி மந்திரி சிதம்பரம் கூறியுள்ளதாவது :-

    இந்த புதிய முறை மற்றும் இதற்காக கொடுக்கப்பட்டுள்ள விளம்பரம் தீவிர சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும், தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்களை துணை செயலாளர்களாக நியமிக்கும் முறை தவறானது. அவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் ஆர்எஸ்எஸ் மற்றும் பா.ஜ.க.விற்கு வேண்டியவர்களாக மட்டுமே இருப்பார்கள். 

    செல்வாக்கை பயன்படுத்தி இந்த பதவிகளுக்கு வருபவர்கள் மக்களுக்காக பணியாற்ற மாட்டர்கள். இது முற்றிலும் நாட்டு நலனுக்கு எதிரானது. மத்திய அரசின் இணை செயலாளர் பதவிக்கு நேரடியாக வெளியில் இருந்து பணியாளரை தேர்வு செய்யும் புதிய முறையை பற்றி விரிவாக மத்திய அரசு விளக்க வேண்டும். 

    இது குறித்து விமர்சனம் செய்ய காங்கிரஸ் கட்சியிடம் அதிகமான கேள்விகள் இருந்தாலும், மத்திய அரசு கொடுக்கும் விளக்கத்தை பொருத்தே எங்கள் முடிவு அமையும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #Chidambaram
    ×