search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை ஓரம்"

    • அங்கு அவருக்கு சொந்தமான கறவை மாடுகள் உள்ளன.
    • உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கல்லூர் மேற்குத் தெருவில் வசித்து வருபவர் ராஜ பெருமாள் (வயது 70). இவர் தனது மனைவியுடன் ஆவட்டி கூட்ரோட்டில் வசித்து வருகிறார். இவர் தினந்தோறும் காலையில் சொந்த ஊரான கல்லூர் செல்வார். அங்கு அவருக்கு சொந்தமான கறவை மாடுகள் உள்ளன. பால் கறந்து விற்பது வழக்கம். அதேபோல் இன்று காலை பால் கறக்க தனது மனைவியுடன் கூட்ரோட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அந்த நேரத்தில் மனைவியை சாலை ஓரம் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கி வருமாறு கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சாலையை கடந்தார்.

    அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி ராஜபெருமாள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜபெருமாள் துடிதுடித்து பரிதாமபாக உயிரிழந்தார். கண் எதிரே லாரி மோதி கணவர் உயிரிழந்ததால் மனைவி கதறி அழுத காட்சி அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார் உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் கிடந்தார்.

    கடலூர்:

    திட்டக்குடி அ அருகே ராமநத்தத்தில் ராமநத்தம்-கண்டமத்தான் செல்லும் சாலையில் தனியார் ஓட்டல் எதிரே சாலையோரம் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் கிடந்தார். இதனை அவ்வழியே சென்றவர்கள் அருகில் உள்ள ராமநத்தம் நி போலீஸ் லையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன நபர் குறித்து அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என முதல் கட்ட விசாரணை செய்தனர். இதில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டைஅருகே உள்ள நூத்தப்பூர் கிராமத்தில் இவரது தங்கை குமாரி வசிப்பதாக தகவல் கிடைத்தது.

    இவர் கட்டம் போட்ட கைலி, வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தார். இறந்து கிடந்த இடத்திற்கு அருகில் பார்சல் உணவு, தண்ணீர் பாட்டில் இருந்தது.

    இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • நெல்லிக்குப்பம் செல்லும் சாலை ஓரமாக 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்த முதியவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் செம்மண்டலத்தில் உள்ள நெல்லிக்குப்பம் செல்லும் சாலை ஓரமாக 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்த முதியவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தாரா? அல்லது வாகனம் மோதி இறந்தாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பா அருசூக லப்பட்டு-தெத்துகாடு சாலை ஓரத்தில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக சங்கராபுரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

    அப்போது இறந்து கிடந்த பெண் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை? மேலும் அவர் நீல நிற ஜாக்கெட், ரோஸ் கலர் புடவை அணிந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தாரா? அல்லது வாகனம் மோதி இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×