search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சபலென்கா"

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச்சுற்று போட்டிகள் நடந்தன.
    • இதில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டிகள் நடந்தன. இதில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை கோகோ காபுடன் மோதினார்.

    முதல் செட்டை கோகோ காப் வென்றார். 2வது செட்டை ஸ்வியாடெக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை

    கோகோ காப் வென்றார்.

    இறுதியில், கோகோ காப் 7-6 (7-2), 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் நம்பர் 2 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, செக் குடியரசின் கரோலினா முசோவாவை எதிர்கொண்டார்.

    முதல் செட்டை சப்லென்கா 7-6 (7-4) என போராடி வென்றார். சுதாரித்துக் கொண்ட முசோவா அடுத்த இரு செட்களை கைப்பற்றினார்.

    கடைசியில் முசோவா 6-7, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் முசோவா அமெரிக்க வீராங்கனை கோகோ காபுடன் மோதவுள்ளார்.

    அரையிறுதிப் போட்டிகளில் உலகின் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 வீராங்கனைகள் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.

    • கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டி நடந்தது.
    • இதில் நம்பர் 2 வீராங்கனையான சபலென்கா அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.

    மாண்ட்ரியல்:

    கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் சாம்சொனோவாவுடன் மோதினார்.

    இதில் சாம்சொனோவா 7-6 (7-2), 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

    முன்னணி வீராங்கனையான சபலென்கா இதில் தோற்றதன் மூலம் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 4-6, 3-6 என்ற நேர்செட்டில் மான்பில்சிடம் (பிரான்ஸ்) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.
    • இகா ஸ்வியாடெக் முன்னாள் நம்பர் ஒன் வீரரான கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    டொராண்டோ:

    கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொராண்டோ, மான்ட்ரியல் நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் விம்பிள்டன் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 6-3, 7-6 (7-3) என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் பென் ஷெல்டனை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் டேனில் மெட்விடேவ் 6-2, 7-5 என்ற செட்டில் இத்தாலியின் அர்னால்டியை விரட்டியடித்தார். இன்னொரு ஆட்டத்தில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 4-6, 3-6 என்ற நேர்செட்டில் மான்பில்சிடம் (பிரான்ஸ்) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்ற ஆட்டங்களில் கேஸ்பர் ரூட் (நார்வே), மெக்டொனால்டு (அமெரிக்கா), ஜானிக் சின்னெர் (இத்தாலி) ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 7-6 (8-6), 6-2 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    2-ம் நிலை வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-3, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் பெட்ரா மார்டிச்சை (குரோஷியா) தோற்கடித்தார். இதே போல் கிவிடோவா (செக்குடியரசு), டேனிலி காலின்ஸ் (அமெரிக்கா), வான்ட்ரோசோவா (செக்குடியரசு), லேலா பெர்னாண்டஸ் (கனடா), கரோலினா முச்சோவா (செக்குடியரசு), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) ஆகியோரும் வெற்றியை ருசித்தனர்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டி லண்டனில் நடந்தது.
    • இதில் தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள ரிபாகினா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, 6ம் இடத்திலுள்ள துனிஷியா வீராங்கனை ஆன்ஸ் ஜபேருடன் மோதினார்.

    பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் ரிபாகினா முதல் செட்டை கைப்பற்றினார். சுதாரித்துக் கொண்ட ஜபேர் 2வது, 3வது செட்களை வென்றார்.

    இதன்மூலம் ஜபேர் 6-7 (5-7(ம் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை மேடிசன் கெய்சுடன் மோதினார்.

    இதில் சபலென்கா 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • அவரை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் குடெர்மெடோவா தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.
    • இன்று கால் இறுதி ஆட்டங்கள் நடக்கிறது.

    ஜெர்மன் ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டி பெர்லின் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனை சபலென்கா (பெலாரஸ்) அதிர்ச்சி அடைந்தார்

    அவரை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் குடெர்மெடோவா தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.

    இன்று கால் இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. அலெக்சாண்ட்ரோவா (ரஷியா)-குடெர்மெடோவா (ரஷியா), கார்சியா (பிரான்ஸ்)-குவிட்டோவா (செக் குடியரசு), சக்காரி (கிரீஸ்)-வோண்ட்ரூசோவா (செக்குடியரசு), எலினா அவனேசியன் (ரஷியா)-டோனா வெக்கிச் (குரேஷியா) ஆகியோர் மோதுகிறார்கள்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிசின் நான்காவது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா வென்றார்.

    பாரீஸ்:

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை ஸ்லோனி ஸ்டீபன்சுடன் மோதினார்.

    இதில் சபலென்கா 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    காலிறுதியில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவை சந்திக்கிறார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிசின் இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா வென்றார்.

    பாரீஸ்:

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    2வது சுற்று ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, சக நாட்டு வீராங்கனை ஷிமனோவிச்சுடன் மோதினார்.

    இதில் சபலென்கா 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.
    • இதில் பெலாரசின் அரினா சபலென்கா வென்று இறுதிக்கு முன்னேறினார்.

    ஸ்பெயின்:

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, கிரேக்க வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதினார்.

    இதில் சபலென்கா 6-4, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்கா-லின்டா நோஸ்கோவா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
    • நோவக் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் டேனில் மெட்விடேவ்வை (ரஷியா) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, தரவரிசையில் 34-வது இடத்தில் உள்ள இரினா கெமிலியா பெகுவை (ருமேனியா) எதிர்கொண்டார்.

    1 மணி 18 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-3, 6-2 என்ற நேர்செட்டில் இரினா கெமிலியா பெகுவை தோற்கடித்து டபிள்யூ.டி.ஏ.சர்வதேச போட்டியில் 19-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரைஇறுதியில் தகுதி சுற்று மூலம் ஏற்றம் கண்ட 18 வயது செக்குடியரசு வீராங்கனை லின்டா நோஸ்கோவா 6-3, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஆன்ஸ் ஜாபியருக்கு (துனிசியா) அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டியை எட்டினார்.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்கா-லின்டா நோஸ்கோவா பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதன் இரட்டையர் பிரிவு இறுதிபோட்டியில் அமெரிக்காவின் ஆசியா முகமத்-டெய்லர் டவுன்சென்ட் ஜோடி 6-2, 7-6 (7-2) என்ற நேர்செட்டில் ஸ்டாம் ஹன்டெர் (ஆஸ்திரேலியா)-கேத்ரினா சினியகோவா (செக்குடியரசு) இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 33-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீரர் செபாஸ்டியன் கோர்டா, தரநிலையில் 37-வது இடத்தில் இருக்கும் யோஷிஹிடோ நிஷிகாவை (ஜப்பான்) சந்தித்தார். விறுவிறுப்பான இந்த மோதலில் செபாஸ்டியன் கோர்டா 7-6 (7-5), 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது யோஷிஹிடோ காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் செபாஸ்டியன் கோர்டா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

    இன்னொரு ஆட்டத்தில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், தற்போது தரவரிசையில் 5-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீரரும், தரநிலையில் 7-வது இடத்தில் உள்ளவருமான டேனில் மெட்விடேவ்வை (ரஷியா) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இந்த ஆட்டம் 1 மணி 30 நிமிடம் நடந்தது. இறுதிப்போட்டியில் ஜோகோவிச், செபாஸ்டியன் கோர்டாவை சந்திக்கிறார்.

    ×