search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் - ஸ்வியாடெக், சபலென்கா அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி
    X

    இகா ஸ்வியாடெக்

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் - ஸ்வியாடெக், சபலென்கா அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச்சுற்று போட்டிகள் நடந்தன.
    • இதில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டிகள் நடந்தன. இதில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை கோகோ காபுடன் மோதினார்.

    முதல் செட்டை கோகோ காப் வென்றார். 2வது செட்டை ஸ்வியாடெக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை

    கோகோ காப் வென்றார்.

    இறுதியில், கோகோ காப் 7-6 (7-2), 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் நம்பர் 2 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, செக் குடியரசின் கரோலினா முசோவாவை எதிர்கொண்டார்.

    முதல் செட்டை சப்லென்கா 7-6 (7-4) என போராடி வென்றார். சுதாரித்துக் கொண்ட முசோவா அடுத்த இரு செட்களை கைப்பற்றினார்.

    கடைசியில் முசோவா 6-7, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் முசோவா அமெரிக்க வீராங்கனை கோகோ காபுடன் மோதவுள்ளார்.

    அரையிறுதிப் போட்டிகளில் உலகின் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 வீராங்கனைகள் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.

    Next Story
    ×