search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சபரிமலை அய்யப்பன் கோவில்"

    • சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் தொடங்கியதும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை தொடங்கி ஜனவரி 20-ந் தேதி வரை நடைபெறும்.
    • அய்யப்பனை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள்.

    சேலம்:

    கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் தொடங்கியதும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை தொடங்கி ஜனவரி 20-ந் தேதி வரை நடைபெறும். அய்யப்பனை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள்.

    இதற்காக கார்த்திகை முதல் தேதியில் அய்யப்பன் பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை செல்பவார். அதன்படி நாளை கார்த்திகை 1-ந் தேதி தொடங்க உள்ளதால் சேலம் சின்ன கடை வீதியில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.

    குறிப்பாக துளசி மணி, அய்யப்பன் டாலர் மற்றும் அய்யப்பன் வேட்டி உள்ளிட்ட விரத பொருட்கள் வாங்குவதற்கும் இருமுடி பொருட்கள் வாங்குவதற்கும் ஏராளமான பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் விரதப் பொருட்களை காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

    இதே போல செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விரதப் பொருட்களை வாங்க பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. பொருட்களை வாங்க பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • புதிய மேல்சாந்திகள் தேர்வு இன்று சன்னிதானத்தில் நடைபெறும்.
    • ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள் அனுமதி.

    திருவனந்தபுரம்:

    ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. புதிய மேல்சாந்திகள் தேர்வு இன்று (புதன்கிழமை) சன்னிதானத்தில் நடைபெறும்.

    ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.

    இன்று முதல் 5 நாட்கள் தினமும் அதிகாலை கோவிலில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இதனையொட்டி சபரிமலைக்கு வரும்

    பக்தர்களின் வசதிக்காக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் சபரிமலைக்கு இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக நிலக்கல் பகுதியில் தற்காலிக முன்பதிவு மையமும் செயல்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ×