search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துளசி மாலை, வேஷ்டி வாங்க குவிந்த அய்யப்ப பக்தர்கள்
    X

    கார்த்திகை மாதம் நாளை தொடங்க உள்ள நிலையில் சபரிமலைக்கு செல்ல மாலை அணிவதற்காக சேலம் சின்ன கடைவீதி பகுதியில் துளசி மாலைகள் வேஷ்டிகளை வாங்கிய அய்யப்ப பக்தர்கள்.

    துளசி மாலை, வேஷ்டி வாங்க குவிந்த அய்யப்ப பக்தர்கள்

    • சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் தொடங்கியதும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை தொடங்கி ஜனவரி 20-ந் தேதி வரை நடைபெறும்.
    • அய்யப்பனை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள்.

    சேலம்:

    கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் தொடங்கியதும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை தொடங்கி ஜனவரி 20-ந் தேதி வரை நடைபெறும். அய்யப்பனை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள்.

    இதற்காக கார்த்திகை முதல் தேதியில் அய்யப்பன் பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை செல்பவார். அதன்படி நாளை கார்த்திகை 1-ந் தேதி தொடங்க உள்ளதால் சேலம் சின்ன கடை வீதியில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.

    குறிப்பாக துளசி மணி, அய்யப்பன் டாலர் மற்றும் அய்யப்பன் வேட்டி உள்ளிட்ட விரத பொருட்கள் வாங்குவதற்கும் இருமுடி பொருட்கள் வாங்குவதற்கும் ஏராளமான பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் விரதப் பொருட்களை காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

    இதே போல செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விரதப் பொருட்களை வாங்க பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. பொருட்களை வாங்க பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×