search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சசிதரூர்"

    • வரைபடம் வெளியானதும், அதனை பாரதிய ஜனதா கட்சியினர் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தனர்.
    • சசிதரூர் இதுபோல சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறையல்ல.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் சசிதரூர் எம்.பி.யும் போட்டியிடுகிறார். இதற்காக அவர் நேற்று ஆதரவாளர்களுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் கட்சி தொண்டர்களுக்கு தேர்தல் அறிக்கையும் வெளியிட்டார்.

    இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டால் கட்சியை சீர்படுத்தவும், வெற்றிக்கோட்டை நோக்கி அழைத்து செல்லவும் என்னென்ன செய்வேன் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

    அதோடு அந்த வாக்குறுதி பட்டியலில் இந்திய வரைபடமும் இடம் பெற்றிருந்தது. அந்த வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகள் மற்றும் லடாக் பகுதிகள் இடம் பெறவில்லை.

    இந்த வரைபடம் வெளியானதும், அதனை பாரதிய ஜனதா கட்சியினர் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தனர். பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா இதுகுறித்து கூறும்போது, இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார். ஆனால் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என விரும்பும் சசிதரூர், இந்தியாவை துண்டாட நினைக்கிறார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இதனை அறிந்த சசிதரூர், தனது தேர்தல் அறிக்கையில் இருந்த தவறான இந்திய வரைபடத்தை உடனே நீக்கிவிட்டார். மேலும் தவறான பதிவு வெளியிட்டதற்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு கொண்டார்.

    தனது பிரச்சார குழுவினர் தெரியாமல் தவறு செய்து விட்டதாகவும், இதற்காக வருந்துவதாகவும் அவர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டார்.

    சசிதரூர் இதுபோல சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பும் இதுபோல அவர் பலமுறை சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

    2019-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டத்தின் போதும் சசிதரூர் வெளியிட்ட இந்திய வரைபடத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இடம் பெறாமல் இருந்தது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    • இந்த தேர்தலில் போட்டியிட சசிதரூர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
    • மல்லிகார்ஜுன கார்கேவும் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட முன்னாள் மத்திய மந்திரியும், அக்கட்சியின் எம்.பி.யுமான சசிதரூர் வேட்புமனுவை இன்று காலை தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து பிற்பகல் அக்கட்சியின் மூத்த தலைவரும், பாராளுமன்ற மாநிலங்களைவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் வேட்புமனுவை தாக்கல் செய்தார். 


    டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரியிடம் வேட்புமனுவை அவர் வழங்கினார். அசோக் கெலாட் உள்பட காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் அப்போது உடன் இருந்தனர். இந்த நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட ஜார்க்கண்ட் மாநில முன்னாள் அமைச்சர் கே.என். திரிபாதியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.


    இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (திரிபாதி பிரிவு) தேசியத் தலைவராக அவர் பணியாற்றி உள்ளார். திரிபாதி போட்டியிடுவதன் மூலம் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மும்முனை போட்டி உறுதியாகி உள்ளது.

    • இது நட்பு ரீதியான போட்டியாக இருக்கும்.
    • கட்சி வலுவாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் 17-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சோனியாகாந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், அக்கட்சியின் கேரளா எம்.பி. சசி தரூரும் போட்டியிடுவார்கள் என முதலில் தகவல் வெளியானது.

    இந்நிலையில் ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியை விட்டு தர அசோக்கெலாட் மறுத்து விட்டதால் அவர் மீது சோனியா கடும் அதிருப்தி அடைந்தார். இதனால் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கெலாட் அறிவித்தார். இதனிடையே திடீர் திருப்பமாக காங்கிரஸ் மூத்த தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு கட்சி தலைமையும் ஆதரவு அளித்துள்ளது. இதையடுத்து இந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், அதை கைவிட்டதுடன், மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ஆதரவு அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட சசிதரூர் இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று அவர் அஞ்சலி செலுத்தினார். இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளதாவது: 21-ம் நூற்றாண்டுக்கு இந்தியாவின் பாலத்தை கட்டியவருக்கு இன்று காலை அஞ்சலி செலுத்துகிறேன். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கூறியதுபோல் இந்தியா ஒரு பழைமையான நாடு. ஆனால் ஒரு இளம் தேசம். இந்தியா வலிமையான சுதந்திரமான தன்னம்பிக்கை மற்றும் உலக நாடுகளின் சேவையில் முன்னிலையில் இருக்க வேண்டும் என்று கனவு காண்கிறேன்.

    ஒரு பந்தயத்தில் நுழையும் போது முடிவு நிச்சயமற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் நீங்கள் நல்ல பலன்களை கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் செல்வீர்கள்.அதேபோல் நான் செல்கிறேன்,  இது நட்பு ரீதியான போட்டியாக இருக்கும். கட்சி வலுவாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதிருப்தி தலைவர்களில் யாரும் (ஜி-23) வேட்பாளர் கிடையாது என்று கூறுவது கட்டுக்கதை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில் மல்லிகார்ஜூன கார்கே மதியத்துக்கு மேல் மனு தாக்கல் செய்வார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதை அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜூன கார்கே-சசி தரூர் இடையே போட்டி உறுதியாகி உள்ளது.

    • திருவனந்தபுரம் பாராளுமன்ற தேர்தலில் மும்முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன்.
    • நான் ஐ.நா.சபை உள்ளிட்ட பெரும் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளேன்.

    திருவனந்தபுரம்:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற 17-ந்தேதி நடக்கிறது.

    இந்த தேர்தலில் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. சசிதரூரும் போட்டியிடுகிறார்.

    இன்று அவர் இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது ஏன் என்பது பற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவது ஜனநாயக போட்டியே கட்சியை பலப்படுத்தும். இதனை கட்சியின் இப்போதைய தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் பலமுறை கூறியுள்ளனர்.

    2-வதாக காங்கிரஸ் கட்சியின் சமீபத்திய தேர்தல் தோல்விகளில் இருந்து கட்சியை பலப்படுத்தவும், சீர்ப்படுத்தவும், தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கவும் இந்த தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்தேன்.

    3-வதாக தலைமை பொறுப்புக்கு போட்டியிட வேண்டும் என்ற முடிவை எடுத்த பின்பு அதில் உறுதியாக இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். எனவே தான் இப்போட்டியில் பங்கேற்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

    திருவனந்தபுரம் பாராளுமன்ற தேர்தலில் மும்முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். நான் ஐ.நா.சபை உள்ளிட்ட பெரும் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வேட்பு மனுவை திக்விஜய் சிங் இன்று வாங்க வந்தார்.
    • திக்விஜய் சிங் தலைவர் தேர்தலில் போட்டியிட மனு வாங்க வந்ததாக தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது.

    காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி ஏற்க மறுத்ததால் அந்த பதவிக்கான தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட்டை நிறுத்த மேலிடம் முடிவு செய்தது. கெலாட்டுக்கு பதிலாக சச்சின் பைலட்டை ராஜஸ்தான் முதல்-மந்திரியாக்கவும் சோனியா முடிவு செய்தார்.

    இதற்கு கெலாட் உடன்படவில்லை. முதல்-மந்திரி பதவியை விட்டு விலக மறுத்தார். அவரது ஆதரவு 90 எம்.எல்.ஏ.க்கள் போட்டி கூட்டம் நடத்தினர். இதனால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக அசோக் கெலாட் மீது சோனியா காந்தி கடும் அதிருப்தி அடைந்தார்.

    அசோக் கெலாட்டுக்கு பதிலாக வேறு ஒருவரை தலைவர் தேர்தலில் நிறுத்த அவர் முடிவு செய்தார். இது தொடர்பாக சோனியா காந்தி மூத்த நிர்வாகிகளுடன் 2 தினங்களாக ஆலோசனை நடத்தினார்.

    மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், மூத்த தலைவருமான திக்விஜய்சிங், மல்லிகார்ஜூன கார்கே, குமாரி செல்ஜா, முகுல் வாஸ்னிக், மீராகுமார் ஆகியோரது பெயர்கள் அடிபட்டன.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் திடீர் திருப்பமாக திக்விஜய் சிங் போட்டியிடுகிறார். இதை அவர் அதிகார பூர்வமாக இன்று தெரிவித்தார்.

    டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வேட்பு மனுவை திக்விஜய் சிங் இன்று வாங்க வந்தார். அப்போது அவர் தலைவர் தேர்தலில் போட்டியிட மனு வாங்க வந்ததாக தெரிவித்தார். நாளை மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் திக் விஜய் சிங் தெரிவித்தார்.

    அதிருப்தி குழு தலைவர்களில் ஒருவரான சசிதரூரும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறார். அவரும் நாளை மனு தாக்கல் செய்கிறார்.

    இதனால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான களத்தில் திக் விஜய் சிங், சசிதரூர் போட்டியிடுகிறார்கள்.

    ×