search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் பூசாரி"

    • மதுராபிரிஜியா ஓட்டி வந்த தண்ணீர் டேங்க் ஏற்றி வந்த டெம்போ பன்னீர்செல்வம் மீது மோதியது
    • சிகிச்சை பலனின்றி பன்னீர் செல்வம் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

    கன்னியாகுமரி :

    தென்தாமரைகுளம் அருகே உள்ள முகிலன்குடியிருப்பை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 70). இவர் அங்குள்ள முத்தாரம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 24-ந்தேதி பன்னீர் செல்வம் மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரியில் இருந்து மணக்குடி சாலையில் முகிலன்குடியிருப்பு முத்தாரம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் கீழமணக்குடி அருகே உள்ள ஒரு தும்பும் மில்லில் வேலை பார்த்து வரும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மதுராபிரிஜியா ஓட்டி வந்த தண்ணீர் டேங்க் ஏற்றி வந்த டெம்போ பன்னீர்செல்வம் மீது மோதியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக பன்னீர் செல்வத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி பன்னீர் செல்வம் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மூத்த மகள் அகிலா தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • மாவட்ட தலைவர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி சமத்துவபுரம் பகுதியில் கோவில் பூசாரிகள் நல சங்க மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. தென் மண்டல தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.

    மாநில ஆலோசனை குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட செயலாளர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ராமமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ராமநாதபுரம் மாவ ட்டத்தில் அதிக அளவில் ஓய்வு பெற்ற பூசாரிகள் இருப்பதால் தமிழக அரசிடம் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளனர். தகுதியான பூசாரிகள் விண்ணப்பத்தை தேர்வு செய்து ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பூசாரிகள் நல வாரியத்திற்கு அலுவல்சாரா உறுப்பினர்களை தமிழக அரசு விரைந்து நியமனம் செய்ய வேண்டும். இந்து சமய அறநிலைத்துறை மூலம் பூசாரிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவே ற்றப்பட்டன.

    பொறுப்பாளர்கள் ராமநாதபுரம் மாவட்டத் துணைத் தலைவர் பொன் முனியசாமி, கடலாடி ஒன்றிய செயலாளர் லோகநாதன், மாவட்ட துணை செயலாளர் அய்யனகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட தலைவர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

    • மாரியப்பன் வீட்டுக்கு ஜோதிமணி சென்றுள்ளார்.
    • முத்துச்சாமி பலத்த காயங்களுடன் உடுமலை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை குறிச்சிக்கோட்டையை சேர்ந்தவர் முத்துசாமி, மின்வாரிய ஊழியர். இவரது மனைவி ஜோதிமணி. முத்துசாமியும் ஆலாம்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள கோவில் பூசாரியாக இருக்கும் மாரியப்பன் ( 38) என்பவரும் நண்பர்கள்.

    இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஜோதிமணிக்கு போன் செய்த மாரியப்பன், அவரது மனைவிக்கும் முத்துசாமிக்கும் இடையில் தவறான உறவு இருப்பதாகவும் அவரை கண்டித்து வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரிப்பதற்காக மாரியப்பன் வீட்டுக்கு ஜோதிமணி சென்றுள்ளார்.அப்போது என் குடும்பத்தை சீரழித்த முத்துச்சாமியை சும்மா விட மாட்டேன் என்று மாரியப்பன் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை உடுமலை திருமூர்த்திமலை ரோட்டில் முத்துச்சாமி மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வேகமாக வந்த கார் முத்துச்சாமி மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட முத்துச்சாமி பலத்த காயங்களுடன் உடுமலை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜோதிமணி அளித்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது தன் மொபட்டின் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்திய மாரியப்பன், நீ உயிரோடு இருப்பதை விட செத்து தொலைவதே மேல் என்று கூறிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து மாரியப்பன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மனைவியுடன் தவறான உறவு இருப்பதாக சந்தேகப்பட்டு குடும்ப நண்பரை பூசாரி காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    கேரளா வந்துள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை கொல்ல போவதாக மிரட்டல் விடுத்த கோவில் பூசாரி கைது செய்யப்பட்டார்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரளாவுக்கு 3 நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று சென்றார். அவரை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வரவேற்றார். கேரளாவில் பல்வேறு அரசு விழாவில் ஜனாதிபதி பேசி வருகிறார்.

    நாளை திருச்சூரில் நடக்கும் விழாவில் உரையாற்ற உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு திருச்சூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய நபர் திருச்சூர் வரும் ஜனாதிபதி கொலை செய்யப்படுவார் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார். உஷாரான உயர் அதிகாரிகள் கொலை மிரட்டல் விடுத்த நபரை தேடினர். குன்னங்குளம் உதவி கமி‌ஷனர் சைபர் செல் போலீசார் உதவியுடன் செல்போன் எண்ணை வைத்து தேடினர்.

    தீவிர தேடுதல் வேட்டையில் மிரட்டல் விடுத்தது திருச்சூர் விரைக்கல்லில் உள்ள பகவதியம்மன் கோவில் பூசாரி ஜெயராமன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் கோவிலுக்கு வந்தபோது, கோவிலுக்குள் அவரை அனுமதிக்கவில்லை என வாட்ஸ்அப்பில் பரவிய புரளியால் அந்த கோவிலின் பூசாரி தாக்கப்பட்டுள்ளார்.
    ஜெய்ப்பூர்:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் ராஜஸ்தானில் சுற்றுப்பயணம் செய்தார். புஷ்கர் என்ற பகுதியில் உள்ள கோவிலுக்கு அவர் தரிசனம் செய்ய வந்தார். ஆனால், அவரது மனைவிக்கு மூட்டுவலி காரணமாக படியேறி செல்வது கடினம் என்பதால், வாசலில் நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு கிளம்பிவிட்டார்.

    ஆனால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை கோவில் பூசாரி உள்ளே அனுமதிக்கவில்லை என அங்குள்ளவர்களுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் பரவியது. இதனை அடுத்து, இந்த வதந்தி காரணமாக அசோக் மேஹ்வால் என்பவர் அந்த கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவது போல வரிசையில் நின்று, பின்னர் பூசாரி அருகில் வந்த போது அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.

    இதில், பூசாரிக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இதனை அடுத்து, தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்க வாய்ப்பு உள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×