search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவியுடன் தவறான உறவு வைத்திருப்பதாக நினைத்து  மின்வாரிய ஊழியரை கொல்ல முயற்சி - கோவில் பூசாரி கைது
    X

    கைதான மாரியப்பன்.

    மனைவியுடன் தவறான உறவு வைத்திருப்பதாக நினைத்து மின்வாரிய ஊழியரை கொல்ல முயற்சி - கோவில் பூசாரி கைது

    • மாரியப்பன் வீட்டுக்கு ஜோதிமணி சென்றுள்ளார்.
    • முத்துச்சாமி பலத்த காயங்களுடன் உடுமலை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை குறிச்சிக்கோட்டையை சேர்ந்தவர் முத்துசாமி, மின்வாரிய ஊழியர். இவரது மனைவி ஜோதிமணி. முத்துசாமியும் ஆலாம்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள கோவில் பூசாரியாக இருக்கும் மாரியப்பன் ( 38) என்பவரும் நண்பர்கள்.

    இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஜோதிமணிக்கு போன் செய்த மாரியப்பன், அவரது மனைவிக்கும் முத்துசாமிக்கும் இடையில் தவறான உறவு இருப்பதாகவும் அவரை கண்டித்து வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரிப்பதற்காக மாரியப்பன் வீட்டுக்கு ஜோதிமணி சென்றுள்ளார்.அப்போது என் குடும்பத்தை சீரழித்த முத்துச்சாமியை சும்மா விட மாட்டேன் என்று மாரியப்பன் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை உடுமலை திருமூர்த்திமலை ரோட்டில் முத்துச்சாமி மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வேகமாக வந்த கார் முத்துச்சாமி மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட முத்துச்சாமி பலத்த காயங்களுடன் உடுமலை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜோதிமணி அளித்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது தன் மொபட்டின் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்திய மாரியப்பன், நீ உயிரோடு இருப்பதை விட செத்து தொலைவதே மேல் என்று கூறிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து மாரியப்பன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மனைவியுடன் தவறான உறவு இருப்பதாக சந்தேகப்பட்டு குடும்ப நண்பரை பூசாரி காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×