search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடைக்காலம்"

    • சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெயில் வாட்டி வதைக்கிறது.
    • கடந்த திங்கட்கிழமையை விட நேற்று சென்னையில் வெப்பம் அதிகரித்தது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தாலும் கூட வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. சில மாவட்டங்களில் இப்போதே 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது.

    சென்னையில் வெயில் தற்போது வறுத்தெடுக்க தொடங்கி உள்ளது. பிற்பகல் 4 மணிக்கு கூட வெயிலின் உஷ்ணம் தாக்கி வருகிறது.

    வெப்ப அலை கொஞ்சம் கொஞ்சமாக வீசி வருகிறது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் ஆக இருந்து வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெயில் வாட்டி வதைக்கிறது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில் ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து வெப்பம் அதிகரித்தது. 15-ந்தேதிக்கு பிறகு சராசரி வெப்பநிலை உயரும் என்று வானிலை ஆய்வாளர்கள் நம்புவதால் வெப்பம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

    கிழக்குப்பகுதியில் இருந்து வரும் ஈரப்பதம் காரணமாக வெப்பம் அதிகரித்து உடலில் வியர்வை அதிகளவில் வெளியேறும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    கீழ்த்திசை காற்று இல்லாததால் வருகிற நாட்கள் வெப்பமாகவும், வறண்டதாகவும் இருக்கும். பருவத்திற்கு இயல்பான வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை திடீரென உயரலாம் என்று கூறியுள்ளனர்.

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறுகையில், `அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை இருக்கும். 15-ந்தேதிக்கு பிறகு வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும். இது பருவத்திற்கு இயல்பானது.

    ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான கோடை காலத்திற்கான அதிகபட்ச வெப்பநிலை சாதாரணமாக இருந்து இயல்பை விட குறைவாக இருக்கும். நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் இந்த மாதத்தில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 34.5 டிகிரி செல்சியஸ் மற்றும் 36.4 டிகிரி செல்சியஸ் ஆகும்' என்றார்.

    கடந்த திங்கட்கிழமையை விட நேற்று சென்னையில் வெப்பம் அதிகரித்தது. ராயலசீமா மற்றும் தெலுங்கானா வரை வறண்ட வானிலை நிலவுகிறது. வடகிழக்கு காற்று நுழைவதால் அடுத்த 4, 5 நாட்கள் வெப்ப நிலை படிப்படியாக உயரும் என்று தலைமை வானிலை ஆய்வாளர் மகேஷ் கூறினார்.

    • ஒடிசா மாநிலம் பரிபாடாவில் அதிகபட்ச வெப்பநிலை 41.6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவு.
    • பள்ளிகளை ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 16 வரை மூடுமாறு நிர்வாகத்திற்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவு.

    இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வெயில் காலம் தொடங்கி வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியால் அம்மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதில் குறிப்பாக, ஒடிசா மாநிலம் பரிபாடாவில் அதிகபட்ச வெப்பநிலை 41.6 டிகிரி செல்சியஸ் ஆகவும், மாநில தலைநகர் புவனேஸ்வரில் அதிகபட்ச வெப்பநிலை 40.7 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், ஒடிசா மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு, அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளை ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 16 வரை மூடுமாறு நிர்வாகத்திற்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் சீரான குடிநீர் விநியோகம் மற்றும் மின்சாரம் சீராக வழங்கிட அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். தீவிரமான வெப்ப அலை நிலையைக் கருத்தில் கொண்டு, அங்கன்வாடிகள் மற்றும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், 12 ஆம் வகுப்பு வரை, நாளை முதல் ஏப்ரல் 16 வரை மூடப்படும் என்று முதல்வர் நவீன் பட்நாயக் அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவித்துள்ளார்.

    • கோடை விடுமுறை 20-ந்தேதி முதல் மே மாதம் 31-ந்தேதி வரை அளிக்கப்படுகிறது.
    • ஜூன் 1-ந்தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு ஏற்கனவே வருகிற 24-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நடத்த கல்வித்துறை திட்டமிட்டது. இப்போது தொடர்ந்து கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    போலீஸ், எல்.டி.சி., யூ.டி.சி. உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் நடைபெற உள்ளது. இதனால் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை முன்கூட்டியே நடத்துவது என்று ஆலோசித்து முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

    அதன்படி 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 11-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடத்தி முடிக்கப்படும்.

    வரும் 20-ந் தேதியுடன் முடிகிறது. கோடை விடுமுறை 20-ந்தேதி முதல் மே மாதம் 31-ந்தேதி வரை அளிக்கப்படுகிறது. ஜூன் 1-ந்தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படும். முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, சானிடைசர் பயன்படுத்துவது போன்றவற்றை மாணவர்கள், ஆசிரியர்கள் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்.

    கல்லூரிகளை பொறுத்தவரையில் இன்னும் ஆலோசனை செய்யவில்லை. சிறுவர்கள் என்பதால் முதலில் அவர்களுக்கு தேர்வு நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. கல்லூரிகளுக்கு மருத்துவத்துறை ஒப்புதல் கேட்டு அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

    • நாங்கள் பரம்பரை பரம்பரையாக பனை ஓலை விசிறி தயாரித்து வருகிறோம்.
    • கோடைக் காலம் ஆரம்பம் என்பதால் பனை ஓலை விசிறி தயாரிக்கும் பணியில் குடும்பத்தோடு ஈடுபட்டுள்ளோம்.

    சென்னை:

    வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வீட்டில் ஏர்கூலர், ஏ.சி. என எந்திரங்கள் வந்தாலும் இன்னும் பனை ஓலை விசிறியை மக்கள் மறக்காமல் உள்ளனர். பனை ஓலை விசிறியை வீசும்போது அதில் இருந்து ஜில்லென்று வரும் காற்று உடல் நலத்துக்கு ஏற்றது. பல இடங்களில் பனை ஓலை விசிறிகள் தயாரிக்கப்பட்டாலும் திருத்தணி பகுதியில் தயாராகும் பனை ஓலை விசிறிக்கு மவுசு அதிகம் தான். மிகவும் நேர்த்தியாக வண்ண, வண்ண கலரில் தயாரிக்கப்படும் திருத்தணி பனை ஓலை விசிறியை ஏராளமானோர் கேட்டு வாங்கி செல்கிறார்கள்.

    திருத்தணியை அடுத்த கே.ஜி. கண்டிகை அருகே உள்ள சிறுகுமி கிராமத்தில் உள்ள குடும்பத்தினர் அனைவரும் பனை ஓலை விசிறி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தயாரிக்கும் பனை ஓலை விசிறிகள் அதிக அளவில் சென்னைக்கு விற்பனைக்கு வருகிறது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் விற்பனை செய்ய மொத்த வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.

    சிறுகுமி கிராமத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம், குடும்பமாக பனை ஓலை விசிறி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பனை ஓலை தயாரிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு விசிறி ரூ.15 முதல் ரூ.30 வரை விற்பனை செய்கின்றனர்.

    இது குறித்து விசிறி தயாரிக்கும் 70 வயதான ருக்குமானந்தன் கூறியதாவது:

    நாங்கள் பரம்பரை பரம்பரையாக பனை ஓலை விசிறி தயாரித்து வருகிறோம். தற்போது இளைய தலைமுறைகள் படித்து பட்டம் பெற்று வேலைக்கு சென்று விட்டனர். இதனால் இந்த தொழிலில் குறைவானவர்களே இன்னும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வசந்தி :

    எங்களுக்கு இந்த தொழிலைவிட்டால் வேறு எதுவும் தெரியாது. ஒரு நாளைக்கு 40 முதல் 50 விசிறிகள் வரை செய்கின்றோம். குறைந்த வருமானம் தான் கிடைக்கிறது. எனினும் நாங்கள் தொடர்ந்து செய்து வந்த தொழிலை விட மனது வரவில்லை.

    சோமநாதன்:

    தற்போது கோடைக் காலம் ஆரம்பம் என்பதால் பனை ஓலை விசிறி தயாரிக்கும் பணியில் குடும்பத்தோடு ஈடுபட்டுள்ளோம். வெயிலின் தாக்கம் அதிகரித்தால் பனை ஓலை விசிறி வியாபாரம் சூடுபிடிக்கும்.தற்போது அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்களும் பனை ஓலை விசிறிகளை அதிக அளவில் வாங்கி உபயோகிக்கின்றனர்.கோடை காலம் தொடங்க உள்ளதால் பனை ஓலை அதிக அளவில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம். குடும்பத்தில் உள்ள சிறுவர்களும் இதற்கு உதவி செய்து பனை ஓலை விசிறி தயாரிப்பார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தென்பொதிகை சாரலில் அமைந்துள்ள இந்த குற்றால மலையில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் உள்ளன.
    • கடந்த ஆண்டு வானிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது பெய்த மழையால் வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டியது.

    தென்காசி:

    தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் தென்காசி மாவட்டம் குற்றாலமும் ஒன்றாகும். குற்றாலம் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களை தன்னுள் அடக்கி கொண்ட பகுதியாக உள்ளது.

    இங்கு குளித்து மகிழ இயற்கையாக அமைந்த அருவிகளான மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, செண்பகாதேவி அருவி, சிற்றருவி, புலியருவி, தேனருவி என்ற பல்வேறு அருவிகள் உள்ளன. இங்கு குளிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது வரலாறு.

    தென்பொதிகை சாரலில் அமைந்துள்ள இந்த குற்றால மலையில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் உள்ளன. இந்த மூலிகைச் செடிகள் மீது பட்டு விழும் மழைத்துளிகள் அருவியாக ஓடி வருவதால் அந்த நீரில் அனைத்து மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களும் கலந்துள்ளன. இதில் நாம் குளிக்கும்போது உடலுக்கு பெருமளவிலான நன்மைகள் கிடைக்கும் என்று பல்வேறு தரப்பினரும் கூறுவது உண்டு.

    இங்கு தென்மேற்கு பருவமழையின்போது ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் நிலவும். அந்த நேரங்களில் அண்டை மாவட்டங்கள் மட்டுமல்லாது அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். குடும்பம் குடும்பமாக வந்து தங்கியிருந்து அருவிகளில் குளிப்பார்கள்.

    தொடர்ந்து வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் தண்ணீர் கொட்டும். ஒருசில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத தொடக்கத்திலே அருவிகளில் நீர் கொட்ட தொடங்கிவிடும்.

    கடந்த ஆண்டு வானிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது பெய்த மழையால் வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டியது. இதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மேலும் குற்றாலம் நீரை நம்பி இருந்த பாசன குளங்கள் ஏராளமானவை நிரம்பின. இதனால் விவசாயம் ஓரளவு செழித்தது.

    இந்நிலையில் சமீபகாலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துவிட்டது. அங்கு பாறைகள் மட்டுமே பாட்டு படிக்கின்றன. புலியருவி முற்றிலுமாக வறண்டுவிட்டது.

    மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் லேசாக தண்ணீர் விழுகிறது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் வெறிச்சோடி கிடக்கும் அருவி மற்றும் அருவிக்கரைகளை ஒருவித ஏமாற்றத்துடன் பார்த்து செல்கின்றனர்.

    கடும் வெயிலால் பள்ளி மாணவ மாணவிகள் பாதிக்கப்படுவதால் காலையில் 6.30 மணிக்கு பள்ளிகளை திறக்க ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.
    நாடு முழுவதும் வழக்கத்திற்கு முன்பாகவே கோடைக்காலம் தொடங்கிவிட்டது. இதனால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ மாணவிகள் வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    தற்போது இறுதித் தேர்வு நடைபெற்ற வருவதால் பெரும்பாலான வகுப்புகள் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடத்தப்படுகின்றன. இதனால் மாணவ மாணவிகள் உச்சி வெயிலில் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

    இதனால் வரும் 2-ந்தேதியில் இருந்து காலை 6.30 மணிக்கு பள்ளிகளில் பாடங்களை தொடங்க வேண்டும் என்று ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.
    ×