search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govt orders"

    • ஒடிசா மாநிலம் பரிபாடாவில் அதிகபட்ச வெப்பநிலை 41.6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவு.
    • பள்ளிகளை ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 16 வரை மூடுமாறு நிர்வாகத்திற்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவு.

    இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வெயில் காலம் தொடங்கி வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியால் அம்மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதில் குறிப்பாக, ஒடிசா மாநிலம் பரிபாடாவில் அதிகபட்ச வெப்பநிலை 41.6 டிகிரி செல்சியஸ் ஆகவும், மாநில தலைநகர் புவனேஸ்வரில் அதிகபட்ச வெப்பநிலை 40.7 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், ஒடிசா மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு, அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளை ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 16 வரை மூடுமாறு நிர்வாகத்திற்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் சீரான குடிநீர் விநியோகம் மற்றும் மின்சாரம் சீராக வழங்கிட அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். தீவிரமான வெப்ப அலை நிலையைக் கருத்தில் கொண்டு, அங்கன்வாடிகள் மற்றும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், 12 ஆம் வகுப்பு வரை, நாளை முதல் ஏப்ரல் 16 வரை மூடப்படும் என்று முதல்வர் நவீன் பட்நாயக் அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவித்துள்ளார்.

    ×