search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைவரிசை காட்டிய"

    • தலைமறைவாக இருந்த மூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
    • பின்னர் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி ஆனந்தம் பாளையத்தை சேர்ந்தவர் கோபால் (58). இவர் அதே பகுதியில் பால் சொசைட்டி செயலாளராக உள்ளார். இவரது மகன் மோகன சுந்தரம் எலக்ட்ரீசியன் படித்து முடித்துள்ளார்.

    இந்நிலையில் கோபாலு க்கு பவானி சிங்கம் பேட்டை பகுதியை சேர்ந்த மூர்த்தி (45) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இவர் பூனாச்சி துணை மின் நிலையத்தில் வயர்மேனாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் மூர்த்தி தனக்கு மின் வாரியத்தில் தலைமை அதிகாரிகள் பழக்கம் உள்ளது என கோபாலிடம் கூறியுள்ளார். பணம் கொடுத்தால் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    இதை உண்மை என்று நம்பிய கோபால் தனது மகன் மோகனசுந்தரத்துக்கு தொழில்நுட்ப உதவியாளர் பணிக்காக கோபாலிடம் முதற்கட்டமாக ரூ.7 லட்சம் வழங்கியுள்ளார்.

    பின்னர் மேலும் ரூ.3 லட்சம் வழங்கியுள்ளார். வேலை உறுதியாகி விட்டதாக கூறி மேலும் ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு தபாலில் பணி நியமன ஆணையை அனுப்பியுள்ளார்.

    இந்த பணி நியமன ஆணையுடன் மோகன சுந்தரம் மின்வாரிய அலுவல கத்தில் பணியில் சேர சென்றபோது அவை போலி என தெரிய வந்தது.

    அதிர்ச்சியடைந்த தந்தையும், மகனும் மூர்த்தியை தொடர்பு கொண்டபோது அவர் முறையாக பதிலளி க்காமல் தலைமறை வாகி விட்டார்.

    இதேப்போல் அந்தியூர் பிரம்மதேசத்தை சேர்ந்த விஜயகுமார், வெற்றிவேல் ஆகியோரிடமும் மின்வாரி யத்தில் வேலை வாங்கி தருவதாக தலா ரூ.4 லட்சம் மூர்த்தி பெற்றுக் கொண்டு ஏமாற்றியது தெரியவந்தது.

    இது குறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

    இதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் அந்தியூர், பவானி உட்பட பல்வேறு பகுதியை சேர்ந்த 24 பேரிடம் ரூ.1 கோடியே 25 லட்சம் பெற்றுக்கொண்டு போலி நியமன ஆணைகளை வழங்கி மூர்த்தி ஏமாற்றியது தெரியவந்தது.

    2 ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த மூர்த்தி யை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்ப ட்டார்.

    இந்த மோசடியில் மூர்த்திக்கு மூளையாக மற்றொருவர் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. அவர் தற்போது தலை மறைவாக உள்ளார்.

    அவரை பிடி க்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர் பிடிப்ப ட்டால் இந்த மோசடியில் மேலும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தெரியவரும்.

    கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை

    கன்னியாகுமரி, மார்ச்.2-

    கன்னியாகுமரி நடுத்தெருவை சேர்ந்தவர் லால் சந்த் (வயது 55).

    இவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் சன்னதி தெருவில் பாலாஜி பேன்சி ஸ்டோர் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். இங்கு மேலா ளராக பக்சாராம் (50) பணி யாற்றி வருகிறார்.

    இவர் நேற்று முன் தினம் இரவு 9 மணிக்கு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது கடையின் உள் பக்க அறையின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் கடையின் மேற் கூரை ஆஸ்பெஸ்டாஸ் சீட்டும் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அவர், கடையில்உள்ள கல்லா பெட்டியை திறந்து பார்த்தார். அப்போதுஅதில் வைத்திருந்தரூ.14ஆயிரத்து 500திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது.

    இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு அவர் தகவல் கொடுத்தார். அதன்பேரில் துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில் போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று விசா ரணைநடத்தினார்கள்.

    கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்த னர். கடந்த 4 மாதங் களுக்கு முன்பு இதே கடையில் மேற் கூரையை உடைத்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளை அடிக்க ப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    அதில் துப்பு துலங்கு வதற்கு முன்பு இப்போது 2-வது முறையாக கொள்ளை நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி அதில் சந்தேகப்படும் படியான உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

    • செல்போன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் லேப்டாப் திருடப்பட்டது.
    • விஜயகுமார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு-மேட்டூர் ரோட்டில் உள்ள ஒரு செல்போன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் லேப்டாப் திருடப்பட்டது. இது பற்றி தெரிய வந்ததும் , ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் விரைந்து வந்தனர்.

    மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடையில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து இருந்தனர். அப்போது கடையின் முன்பக்க கண்ணாடி உடைந்து ரத்த கரை படிந்து இருந்தது. அதையும் கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர்.

    இதனையடுத்து கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது அதிகாலை 5 மணி அளவில் மர்மநபர் ஒருவர் கையில் அழுக்கு சாக்குடன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே செல்வதும், அவர் கடையில் இருந்த விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் லேப்டாப்பை சாக்கு மூட்டையில் போட்டு தப்பி செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.

    இந்நிலையில் செல்போன்களை திருடிய திருடன் அந்த கடையில் உபயோகப்படுத்தும் செல்போனையும் கையில் எடுத்து சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த செல்போன் எண்ணை வைத்து கண்காணித்தனர். அப்போது அந்த நபர் இருக்கும் இடம் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்தனர்.

    போலீசார் விசாரணையில் அந்த நபர் கன்னியாகுமரி மாவட்டம் சாந்தாபுரம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (42) என தெரிய வந்தது.

    அவர் ஈரோட்டில் சில நாட்களாகவே தங்கி தெருவோரம் படுத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். அழுக்கு சட்டை, அழுக்கு வேட்டி அணிந்திருக்கும் அவர் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.

    சம்பவத்தன்றும் செல்போன் கடை முன்பு இரவு முழுவதும் படுத்து தூங்கினார். பின்னர் அதிகாலை செல்போன் கடையை உடைத்து கைவரிசை காட்டி உள்ளார்.

    மேலும் விஜயகுமார் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவை சென்றுள்ளார். அங்கேயும் செல்போன் கடையின் பூட்டை உடைத்து 40-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன்களை திருடி சென்றது தெரிய வந்தது.

    திருடிய செல்போன்களை வெளி சந்தையில் விற்று அதன் மூலம் பணம் சேர்த்துள்ளார். தற்போது சி.சி.டி.வி. கேமிரா மூலம் சிக்கி உள்ளார்.

    இதனையடுத்து விஜயகுமார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். கொள்ளை நடந்த 4 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×