search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளையர்களை பிடிக்க"

    கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை

    கன்னியாகுமரி, மார்ச்.2-

    கன்னியாகுமரி நடுத்தெருவை சேர்ந்தவர் லால் சந்த் (வயது 55).

    இவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் சன்னதி தெருவில் பாலாஜி பேன்சி ஸ்டோர் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். இங்கு மேலா ளராக பக்சாராம் (50) பணி யாற்றி வருகிறார்.

    இவர் நேற்று முன் தினம் இரவு 9 மணிக்கு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது கடையின் உள் பக்க அறையின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் கடையின் மேற் கூரை ஆஸ்பெஸ்டாஸ் சீட்டும் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அவர், கடையில்உள்ள கல்லா பெட்டியை திறந்து பார்த்தார். அப்போதுஅதில் வைத்திருந்தரூ.14ஆயிரத்து 500திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது.

    இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு அவர் தகவல் கொடுத்தார். அதன்பேரில் துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில் போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று விசா ரணைநடத்தினார்கள்.

    கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்த னர். கடந்த 4 மாதங் களுக்கு முன்பு இதே கடையில் மேற் கூரையை உடைத்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளை அடிக்க ப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    அதில் துப்பு துலங்கு வதற்கு முன்பு இப்போது 2-வது முறையாக கொள்ளை நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி அதில் சந்தேகப்படும் படியான உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

    • விசாரணையில் கொள்ளையர்கள் சுவரில் துளை போட்டு உள்ளே நுழைந்து லாக்கரை திறக்க முயன்ற போது அலாரம் ஒலித்ததால் தப்பி சென்றது தெரிய வந்தது.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

    பெருந்துறை:

    பெருந்துறை நால் ரோடு பகுதியில் உள்ள ஒரு பிரபல நகைகடையின் சுவரில் துளை போட்டு மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து உள்ளனர்.

    அப்போது அவர்கள் லாக்கரை திறக்க முயன்ற போது அலாரம் ஒலித்தது. இதனால் மர்ம நபர்கள் அங்கு இருந்து தப்பி ஓடினர்.இதனால் பல லட்சம்மதிப்புள்ள தங்கம், வெள்ளி தப்பியது.

    இதுப்பற்றி தெரிய வந்ததும் கடையின் முன் பகுதியில் பாதுகாப்புக்கு இருந்த காவலாளி மற்றும் அருகில் உள்ள கடைகளில் இருந்த காவலாளிகள் திரண்டு வந்து பார்த்தனர். அப்போது நகை கடையின் சுவரில் துளை போடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    பின்னர் இது குறித்து அவர்கள் கடையின் உரிமையாளர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    முதல்கட்ட விசாரணையில் கொள்ளையர்கள் சுவரில் துளை போட்டு உள்ளே நுழைந்து லாக்கரை திறக்க முயன்ற போது அலாரம் ஒலித்ததால் தப்பி சென்றது தெரிய வந்தது.

    இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கும்பலை பிடிக்க பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன், மலையம்பாளையம் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் ஆகியோர் தலைைமயில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் இந்த சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அருகில் உள்ள திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கும் தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர்.

    ×