search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளழகர்"

    • திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) மாலை தொடங்குகிறது.
    • இந்த விழா 4-ந் தேதி நிறைவு பெறுகிறது.

    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் வைகாசி மாதம் வசந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) மாலை தொடங்குகிறது. தொடர்ந்து தினமும் திருவிழா நிகழ்வு நடைபெறும், இதில் கள்ளழகர் பெருமாள், தேவியர்களுடன் சகல பரிவாரங்களுடன் புறப்பாடு நடைபெறும்.

    தொடர்ந்து விழா 4-ந் தேதி நிறைவு பெறுகிறது.. இந்த விழாவில் கள்ளழகர் பெருமாள், ஸ்ரீதேவி பூமிதேவியருடன் பல்லக்கில் புறப்பாடாகி அங்குள்ள ஆடி வீதிகள், வழியாக, பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் வழியாக சென்று வசந்த மண்டபத்தில் எழுந்தருள்வார்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • கோவிலுக்கு திரும்பிய பின்பும் கள்ளழகரை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர்.
    • நேற்று மதியம் 11 மணியளவில் கள்ளழகர் இருப்பிடம் சென்றார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து 3-ந்தேதி பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். மறுநாள் புதூரில் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கள்ளழகரை வரவேற்றனர். தொடர்ந்து தல்லாகுளம் பெருமாள் கோவிலில் எழுந்தருளிய கள்ளழ கருக்கு திருமஞ்சனம் நடந்தது.

    கடந்த 5-ந்தேதி உலக பிரசித்தி பெற்ற வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை 6 மணியளவில் தங்க குதிரை வாகனத்தில் வைகை யாற்றில் இறங்கிய கள்ளழகரை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. 7-ந் தேதி இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார கோலத்தில் பெருமாள் காட்சியளித்தார். மறுநாள் (8-ந்தேதி) அதிகாலை தமுக்கம் கருப்பண்ணசாமி கோவில் முன்பு வையாழியாக உருமாறி கள்ளழகர் தங்க பல்லக்கில் அழகர் மலைக்கு புறப்பட்டார். நேற்று மதியம் 11 மணியளவில் கள்ளழகர் இருப்பிடம் சென்றார்.

    3-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை கள்ளழகரை பல லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று மதியம் கோவிலுக்கு திரும்பிய கள்ளழகர் அங்குள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி னார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் கோவிலின் மூலஸ்தானத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து பக்தர்கள் மூலவர் சுந்தரராஜ பெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவி, கள்ளழ கரையும் ஒருசேர தரிசனம் செய்தனர்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு சித்திரை திருவிழாவின்போது கள்ளழகர் கோவிலை விட்டு புறப்பாடான நேரத்தில் மூலவரான சுந்தரராஜ பெருமாளுக்கு தைலக் காப்பு சாத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக பக்தர்கள் அவரை தரிசிக்க முடியவில்லை. அப்போது திருவிழாவில் பங்கேற்று இருப்பிடம் வந்த கள்ளழகர் மூலஸ்தானத்திற்கு கொண்டு செல்லப்படாமல் சன்னதி முன்புள்ள மண்டபத்தில் எழுந்தருளி னார். மூலவரை வணங்க முடியாத காரணத்தால் பக்தர்கள் கள்ளழகரை சேவித்து சென்றனர். ஆனால் இந்த ஆண்டு மூலவருக்கு தைலக்காப்பு சாத்தப்படாததால் நேரடியாக கள்ளழகரை கோவில் மூலஸ்தானத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கோவிலுக்கு திரும்பிய கள்ளழகரை தரிசிக்க பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி வெளிமாவட்டங்கிளில் இருந்து அழகர்கோ விலுக்கு வரும் பக்தர்கள் பதினெட்டாம்படி கருப்பணசாமியை கும்பிட்டு விட்டு கோவில் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் கள்ளழகர் மற்றும் சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியரை தரிசனம் செய்கின்றனர்.

    • கோவிலுக்கு திரும்பிய கள்ளழகர் மூலஸ்தானத்தில் எழுந்தருளினார்.
    • தைலக்காப்பு சாத்தப்படாததால் நேரடியாக கள்ளழகரை கோவில் மூலஸ்தானத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    மதுரை

    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து 3-ந்தேதி பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். மறுநாள் புதூரில் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கள்ளழகரை வரவேற்றனர். தொடர்ந்து தல்லாகுளம் பெருமாள் கோவிலில் எழுந்தருளிய கள்ளழ கருக்கு திருமஞ்சனம் நடந்தது.

    கடந்த 5-ந்தேதி உலக பிரசித்தி பெற்ற வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை 6 மணியளவில் தங்க குதிரை வாகனத்தில் வைகை யாற்றில் இறங்கிய கள்ளழகரை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. 7-ந் தேதி இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார கோலத்தில் பெருமாள் காட்சியளித்தார். மறுநாள் (8-ந்தேதி) அதிகாலை தமுக்கம் கருப்பண்ணசாமி கோவில் முன்பு வையாழியாக உருமாறி கள்ளழகர் தங்க பல்லக்கில் அழகர் மலைக்கு புறப்பட்டார். நேற்று மதியம் 11 மணியளவில் கள்ளழகர் இருப்பிடம் சென்றார்.

    3-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை கள்ளழகரை பல லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று மதியம் கோவிலுக்கு திரும்பிய கள்ளழகர் அங்குள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி னார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் கோவிலின் மூலஸ்தானத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து பக்தர்கள் மூலவர் சுந்தரராஜ பெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவி, கள்ளழ கரையும் ஒருசேர தரிசனம் செய்தனர்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு சித்திரை திருவிழாவின்போது கள்ளழகர் கோவிலை விட்டு புறப்பாடான நேரத்தில் மூலவரான சுந்தரராஜ பெருமாளுக்கு தைலக் காப்பு சாத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக பக்தர்கள் அவரை தரிசிக்க முடியவில்லை. அப்போது திருவிழாவில் பங்கேற்று இருப்பிடம் வந்த கள்ளழகர் மூலஸ்தானத்திற்கு கொண்டு செல்லப்படாமல் சன்னதி முன்புள்ள மண்டபத்தில் எழுந்தருளி னார். மூலவரை வணங்க முடியாத காரணத்தால் பக்தர்கள் கள்ளழகரை சேவித்து சென்றனர். ஆனால் இந்த ஆண்டு மூலவருக்கு தைலக்காப்பு சாத்தப்படாததால் நேரடியாக கள்ளழகரை கோவில் மூலஸ்தானத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    • 5-ந்தேதி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடந்தது.
    • நாளை அழகருக்கு உற்சவ சாந்தி நடைபெறுகிறது.

    மதுரை கள்ளழகர் கோவிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் பிரசித்தி பெற்றது சித்திரை திருவிழா வாகும். இந்த திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து 3-ந்தேதி சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடமிட்டு மதுரைக்கு புறப்பட்டார். சுமார் 450க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி 4-ந்தேதி மதுரை வந்து சேர்ந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் திரளாக நின்று கள்ளழகரை தரிசித்தனர்.

    மதுரை வந்த கள்ளழகருக்கு மூன்று மாவடி, தல்லாகுளம் பகுதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் எதிர்சேவை நடந்தது. இதைத்தொடர்ந்து 5-ந்தேதி அதிகாலையில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கள்ளழகரை தரிசித்தனர். தொடர்ந்து தீர்த்தவாரியும் நடந்தது. கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும், உற்சாக நடனமாடியும் பக்தர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

    6-ந்தேதி காலை தேனூர் மண்டகப்படியில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், அதைத்தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் தசாவதார நிகழ்வும் நடைபெற்றது.

    மறுநாள் (7-ந்தேதி) கள்ளழகர் மோகினி அவதார கோலத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அன்று இரவு 11 மணியளவில் மன்னர் சேதுபதி மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு ராஜ அலங்காரத்தில் அனந்தராயர் பல்லக்கில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை அங்கிருந்து பூப்பல்லக்கில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவரை தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோவிலில் விடைபெற்று அழகர்மலைக்கு கள்ளழகர் புறப்பட்டார். அப்போது பக்தர்கள் மலர்களை தூவி உற்சாகத்துடன் அவரை வழியனுப்பி வைத்தனர்.

    மலைக்கு புறப்பட்ட கள்ளழகர் புதூர், மூன்று மாவடி, சுந்தரராஜன்பட்டி வழியாக நேற்று இரவு அப்பன் திருப்பதி சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை 11.10 மணியளவில் அழகர் இருப்பிடம் சென்றடைந்தார். அழகர் மலைகோட்டை வாசலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று திருஷ்டி பூசணிக்காய்களை உடைத்தும், ஆரத்தி எடுத்தும் அழகரை வரவேற்றனர்.

    இதையடுத்து நாளை (10-ந்தேதி) அழகருக்கு உற்சவ சாந்தி நடைபெறுகிறது. அத்துடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

    • மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1-ந் தேதி தொடங்கியது.
    • நாளை, அழகர்கோவிலில் உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1-ந் தேதி தொடங்கியது. 3-ந் தேதி தங்கப்பல்லக்கில் அழகர், மதுரைக்கு புறப்பட்டார். 450-க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளியபடி மதுரை வந்த கள்ளழகரை மூன்றுமாவடி, தல்லாகுளத்தில் பக்தர்கள் எதிர்சேவை அளித்து வரவேற்றனர்.கடந்த 5-ந் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும், மறுநாள் தேனூர் மண்டகப்படியில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், ராமராயர் மண்டகப்படியில் தசாவதார நிகழ்வும் நடைபெற்றன.

    நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    நேற்று அதிகாலை 3 மணி அளவில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் இருந்து பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்துடன் எழுந்தருளிய கள்ளழகரை, கோவிந்தா கோவிந்தா... எனும் கோஷம் முழங்கிட பல்லாயிரகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    அதை தொடர்ந்து கருப்பணசுவாமி கோவில் சன்னதியில் விடைபெற்று, அழகர் மலைக்கு கள்ளழகர் புறப்பட்டார். அப்போது பக்தர்கள் மலர் தூவியும், கண்ணீர் மல்க, மனமுருகி வணங்கி அவரை வழியனுப்பி வைத்தனர்.

    பின்னர் கள்ளழகர் புதூர், மூன்று மாவடி, சுந்தரராஜன்பட்டி, அப்பன்திருப்பதி, கள்ளந்திரி, வழியாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.32 மணிக்கு மேல் அழகர் மலைக்கு சென்றடைகிறார். அதனை தொடர்ந்து நாளை, அழகர்கோவிலில் உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    • பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • கள்ளழகருக்கு சக்கரை தீபம் ஏற்றி வழிபட்டனர்.

    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் அமைந்துள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கடந்த 1-ந்தேதி சித்திரை திருவிழா தொடங்கியது. அன்று முதல் 2 நாட்கள் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சியளித்தார்.

    அதனைத்தொடர்ந்து 3-ந்தேதி மாலை பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து அங்குள்ள பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி சன்னதி முன்பு உத்தரவு பெற்று கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார்.

    கள்ளந்திரி, அப்பன் திருப்பதி என வழி நெடுகிலும் உள்ள மண்டகப் படிகளில் எழுந்தருளினார். அப்போது திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மறுநாள்(4-ந்தேதி) மதுரை மூன்று மாவடிக்கு கள்ளழகர் வருகை தந்தார். அப்போது பக்தர்கள் அவரை எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு சென்றடைந்தார்.

    மறுநாள் (5-ந்தேதி) அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் புறப்பட்ட கள்ளழகர் அதிகாலை 6 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    அதனைத்தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அன்று இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு இரவு விடிய விடிய திருவிழா நடந்தது.

    மறுநாள் (6-ந்தேதி) வைகையாற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் சேஷ வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். பின்னர் அங்கு திருமஞ்சனமாகி தங்க கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடந்தது. கள்ளழகர் முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராமர் அவதாரம், கிருஷ்ணர் அவதாரம், மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார். நேற்று (7-ந்தேதி) மோகினி அலங்காரத்தில் பல்வேறு மண்டகப்படி களில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிய ளித்தார்.

    இன்று (8-ந்தேதி) அதிகாலை 2.30 மணிக்கு அனந்தராயர் பூப்பல்லக்கில் கள்ளழகர் தமுக்கத்தில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் வையாழியாக உருமாறிய கள்ளழகர் அழகர் மலைக்கு புறப்படும் வைபவம் நடந்தது.

    தல்லாகுளம், அவுட்போஸ்ட் ஆகிய பகுதி களில் உள்ள ஒவ்வொரு மண்டகப்படிகளிலும் எழுந்தருளிய கள்ளழகர் காலை 6 மணிக்கு அவுட் போஸ்ட் மாரியம்மன் கோவிலிலும், 7 மணிக்கு அம்பலக்காரர் மண்டபத்திலும் எழுந்தருளினார்.

    இதையொட்டி ரேஸ்கோர்ஸ், புதூர், தாமரைதொட்டி, ரிசர்வ்லைன், டி.ஆர்.ஓ. காலனி ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது கள்ளழகருக்கு சக்கரை தீபம் ஏற்றி வழிபட்டனர். திரளான பக்தர்கள் "கோவிந்தா...கோவிந்தா..." கோஷமிட்டு கள்ளழகரை வழியனுப்பி வைத்தனர்.

    அதனைத்தொடர்ந்து கள்ளழகர் இரவு 7 மணியளவில் மூன்று மாவடி, கடச்சனேந்தல் வழியாக அப்பன் திருப்பதிக்கு இரவு சென்றடைகிறார். அங்கு இன்று இரவு விடிய, விடிய திருவிழா நடைபெறுகிறது.

    கடந்த 3-ந்தேதி கோவிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் மதுரை சித்திரை திருவிழாவை முடித்துக் கொண்டு நாளை காலை 11 மணியளவில் தனது இருப்பிடம் சேருகிறார்.

    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமராயர் மண்டபத்தில் கூடி இருந்தனர்.
    • இன்று கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருள்கிறார்.

    சைவ- வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக மதுரை சித்திரை திருவிழா நடந்து வருகிறது. முதலில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தொடங்கிய சித்திரை திருவிழாவில் கடந்த 2-ந் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், மறுநாள் தேரோட்டமும் நடந்தது.

    அழகர்கோவில் சித்திரை பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் 5-ந் தேதி நடந்தது. தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

    நேற்று முன்தினம் காலை வீரராகவ பெருமாள் கோவிலில் இருந்து கருட வாகனத்தில் புறப்பாடாகி மதுரை வண்டியூரில் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அனுமன் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு பக்தர்களின் அங்கப்பிரதட்சணம் நடந்தது. பின்னர் மேள, தாளம் முழங்க மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள ராமராயர் மண்டபத்துக்கு கிளம்பினார்.

    அங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு மேல் தசாவதார நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் முத்தங்கி சேவையும் அதை தொடர்ந்து மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் நடந்தது.

    இறுதியாக நேற்று காலை மோகினி அவதாரத்தில் அழகர் காட்சி தந்தார். விடிய, விடிய தசாவதாரம் நிகழ்ச்சி அங்கு நடந்தது. இதனை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமராயர் மண்டபத்தில் கூடி இருந்தனர்.

    நேற்று மதியம் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் ஆனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளினார். அதை தொடர்ந்து கோரிப்பாளையம் வழியாக இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமானார்.

    இன்று (திங்கட்கிழமை) அதிகாலையில் கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருள்கிறார். அதே திருக்கோலத்துடன் கருப்பணசாமி கோவில் சன்னதியில் இருந்து இன்று அழகர்மலைக்கு புறப்படுகிறார்.

    • நள்ளிரவு முதல் விடிய விடிய நடந்த தசாவதார நிகழ்ச்சியில் கள்ளழகர் மோகினி அவதாரத்தில் காட்சி அளித்தார்.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்தனர்.

    மதுரை

    மதுரை அழகர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக அழகர் கோவிலில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கடந்த 3-ந்தேதி கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்பட்டார். அப்போது அவர் வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்த ருளினார்.

    மதுரை மூன்றுமாவடியில் 4-ந்தேதி எதிர்சேவை நடந்தது. இதனைத் தொடர்ந்து அன்றைய தினம் இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலுக்கு வந்தார். அங்கு அவருக்கு 5-ம் தேதி அதிகாலை ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டது.

    அதன் பிறகு தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் உத்தரவு பெற்று, ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி அதிகாலை 5.52 மணிக்கு ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் இறங்கினார்.

    அப்போது லட்சக்க ணக்கான பக்தர்கள் வைகை ஆற்றுப்பகுதியில் திரண்டு வந்து அழகரை தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து வைகை ஆற்றில் இருந்து கள்ளழகர் புறப்பட்டு ராமராயர் மண்டபம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு அழகர் வேடமிட்ட பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீர்த்தவாரி அபிஷேகம் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர், வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் தங்கினார். அதன் பிறகு நேற்று காலை சேஷ வாகனத்தில் வைகை ஆற்றின் நடுவில் உள்ள தேனூர் மண்ட பத்திற்கு புறப்பட்டார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பின்தொடர்ந்து வந்து தரிசனம் செய்தனர்.

    தேனூர் மண்டபத்தில் மதியம் 12.30 மணிக்கு எழுந்தருளிய கள்ளழகர், மாலை 3 மணிக்கு மேல் திருமஞ்சனம் முடிந்து கருட வாகனத்தில் எழுந்த ருளினார். இதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் தேனூர் மண்டபம் முன்பு, மண்டூக முனிவருக்கு சாப விமோ சனம் அளிக்கும் நிகழ்வு நடந்தது.

    அப்போது தவளை வடிவில் இருந்த சுதபஸ் முனிவரை, நாரை கொத்தி தின்று விடாமல் கள்ளழகர் காப்பாற்றி சாபவிமோசனம் அளித்தார். இதற்காக அங்கு உண்மையான நாரை பறக்க விடப்பட்டது. அப்போது தேனூர், வண்டியூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கள்ளழகரை தரிசனம் செய்தனர்.

    அதன் பிறகு கள்ளழகர் தேனூர் மண்டபத்தில் இருந்து வண்டியூர் ஆஞ்ச நேயர் கோயிலுக்கு சென்றார். அப்போது நல்ல மழை பெய்தது. இருந்த போதிலும் கள்ளழகர் அடுத்தடுத்த மண்டகப்படிகளுக்கு சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களும் மழையில் நனைந்துகொண்டே தரிசனம் செய்தனர்.

    ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து கள்ளழகர் இரவு 9 மணியளவில் ராமராயர் மண்டபம் சென்றடைந்தார். அங்கு நேற்று இரவு 10.30 மணி முதல் இன்று காலை வரை விடிய விடிய தசாவதாரம் நிகழ்ச்சி நடந்தது. கூர்ம, கிருஷ்ண, மச்ச, மோகினி, முத்தங்கி, ராமர், வாமண அவதா ரங்களில் கள்ளழகர் எழுந்த ருளினார்.

    இதனை ஆயிரக்க ணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் மோகினி அவதாரத்தில் கள்ளழகர் உலா வந்தார். கள்ளழகர் இன்று மதியம் 2 மணி அளவில் புறப்பாடாகி, ஆழ்வார்புரம் செல்கிறார். அங்கு உள்ள சடாரி மண்டபத்தில் எழுந்து அருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். அதன் பிறகு தல்லாகுளம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் தங்குகிறார்.

    நாளை அதிகாலை 2 மணியளவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி, கருப்பணசாமி கோயில் முன்பு வையாழியாக உருமாறி அழகர் மலைக்கு புறப்படும் நிகழ்வு நடக்கிறது. இதனைத் தொடர்ந்து 9-ந்தேதி அழகர் கோயிலை சென்றடைகிறார். அங்கு மறுநாள் (10-ந்தேதி) உற்சவ சாத்துப்படிகளுடன் சித்திரை திருவிழா முடிவடைகிறது.

    • பரமக்குடியில் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய கள்ளழகர் இறங்கினார்.
    • டிரஸ்டிகள் நாகநாதன், கோவிந்தன், முரளிதரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா ெதாடங்கியது. தினமும் யாக சாலை பூஜைகள் நடந்து பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. பெருமாள் மற்றும் கருப்பணசாமிக்கு கும்ப திருமஞ்சனம் நடந்தது. நள்ளிரவு பெருமாள் கோடாரி கொண்டையிட்டு, நெல் மணி தோரணங்கள் கட்டி ஈட்டி, கத்தி, வளரி, வாள் ஏந்தி கள்ளழகர் கோலத்தில் பல்லக்கில் எழுந்தருளினார். அப்போது பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார். இதனால் மக்கள் செல்வ செழிப்புடன் வாழ்வதுடன், விவசாயம் செழித்து நல்ல வளர்ச்சி காண்பார்கள், அர்ச்சகர் சத்யா பட்டாச்சாரியார் தெரிவித்தார்.

    தொடர்ந்து பல்வேறு மண்டகப் படிகளில் சேவை சாதித்து தல்லாகுளம் மண்டபத்தை அடைந்தார். திருவிழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான மேனேஜிங் டிரஸ்டி நாகநாதன், பொருளாளர் பாலமுருகன், டிரஸ்டிகள் நாகநாதன், கோவிந்தன், முரளிதரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • நாளை காலை 6 மணிக்கு மோகன அவதார கோலத்தில் கள்ளழகர் வீதி உலா வருகிறார்
    • 8-ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.
    • 9-ந்தேதி காலை கள்ளழகர் இருப்பிடம் போய் சேருகிறார்.

    மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நேற்று காலை நடந்தது. இதற்காக கடந்த 3-ந்தேதி அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் வேடம் பூண்டு பெருமாள் தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.

    கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் உள்ளிட்ட இடங்களை கடந்து நேற்று முன்தினம் (4-ந்தேதி) மூன்று மாவடிக்கு வந்தார். அங்கு கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர் சேவை நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றனர்.

    பின்பு தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வந்தார். அங்கு நள்ளிரவு 12 மணியளவில் திருமஞ்சனமாகி தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து நேற்று அதிகாலை தல்லாகுளம் கருப்பணசாமி கோவில் அருகில் ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளினார்.

    அங்கிருந்து அதிகாலை 3 மணி அளவில் தங்க குதிரையில் அமர்ந்தபடி வைகை ஆற்றுக்கு வந்தார். பின்னர் அதிகாலை 5.52 மணியளவில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். இதனை காண 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர்.

    சுமார் ஒரு மணி நேரம் அங்கு அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன் பின்னர் மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது கள்ளழகர் வேடமணிந்த பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்வித்தனர்.

    இரவு 9 மணி அளவில் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்தனர்.

    வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகருக்கு இன்று காலை திருமஞ்சனம் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஏகாந்த சேவை, பக்தி உலாத்துதல் நடந்தன.

    அதனைத் தொடர்ந்து கள்ளழகர் சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது திரளான பக்தர்கள் சர்க்கரை தீபம் எடுத்து வழிபட்டனர். பின்பு அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் தேனூர் மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

    பின்னர் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்வு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். மாலை 3.30 மணியளவில் அனுமன் கோவிலில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். அப்போது பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்து வழிபாடு நடத்துகின்றனர்.

    இரவில் கள்ளழகர் மீண்டும் ராமராயர் மண்டகப்படிக்கு வருகிறார். அங்கு இரவு 11 மணி முதல் நாளை(7-ந்தேதி) காலை வரை விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது.

    மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவ தாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகன அவதாரம் ஆகிய திருக்கோலங்களில் அழகர் காட்சி அளிக்கிறார்.

    நாளை காலை 6 மணிக்கு மோகன அவதார கோலத்தில் கள்ளழகர் வீதி உலா வருகிறார். பகல் 12 மணிக்கு ராமராயர் மண்ட பத்தில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார்.

    நாளை இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி 8-ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். அதே அதே கோலத்தில் கருப்பண சாமி கோவில் சன்னதியில் இருந்து அழகர் மலைக்கு புறப்படுகிறார்.

    மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக 9-ந்தேதி காலை இருப்பிடம் போய் சேருகிறார்.

    • காலப்போக்கில் ஆயிரம் பொன்சப்பரத்தில் எழுந்தருள்வது நின்று போனது.
    • நூறு ஆண்டுகளுக்கு பிறகு கள்ளழகர் சப்பரத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் சைவத்தையும், வைணவத்தையும் இணைக்கும் விழாக்களாக மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் தேனூரில்தான் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடந்துள்ளது. அதனை மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியாக மாற்றியுள்ளார்.

    அப்போது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தேரோட்டம் நடப்பது போல், பெருமாளுக்கும் தேர் செய்ய எண்ணினார். அதற்கு பல ஆண்டுகளாகும் என்பதால் 3 மாதத்திற்குள் சப்பரத் தேர் செய்ய எண்ணினார் மன்னர்.

    இதற்காக மர ஸ்தபதியையும் அழைத்து சப்பரத்தேர் செய்ய உத்தர விட்டுள்ளார். அதன்படி மர ஸ்தபதியும் மன்னர் மனம் மகிழுமாறும், பிரமிப்பாகவும் சிறிய சப்பரத்தேர் செய்து முடித்துள்ளார். அந்த ஆண்டே சுந்தரராஜ பெருமாள் சப்பரத்தேரில் எழுந்தருளிய பின் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளியுள்ளார்.

    குறித்த காலத்திற்குள் செய்து முடித்த மர ஸ்தபதியை பாராட்டி ஆயிரம் பொற்காசுகள் மன்னர் வழங்கி பாராட்டியுள்ளார். அன்றிலிருந்து சப்பரத்தேர் ஆயிரம் பொன் சப்பரம் என அழைக்கப்பட்டது. அதேபெயரால் தற்போதும் அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் ஆயிரம் பொன்சப்பரத்தில் எழுந்தருள்வது நின்று போனது.

    இதற்குரிய சப்பரத்தேர் பராமரிப்பின்றி தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் முன்புள்ள மண்டகப் படியில் ஆயிரம் பொன் சப்பரத் தேர் இருந்தது.

    தற்போது அந்த சப்பர தேர் சீரமைக்கப்பட்டது.அதில் கள்ளழகர் எழுந்தருள ஏற்பாடு செய்யப்பட்டது. நூறு ஆண்டுகளுக்கு பிறகு கள்ளழகர் சப்பரத் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    • அழகர் மலை உச்சியில் என்றும் தண்ணீர் வற்றாத நூபுர கங்கை உள்ளது.
    • சுதபஸ் முனிவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார்.

    மதுரையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை காண வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறு வரும் போது மீனாட்சி திருக்கல்யாணம் முடிந்து விட்டதால் வைகை ஆற்றின் வடகரையில் இறங்கி விட்டு செல்கிறார். அப்போது தான் சாபம் கொடுத்த மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுத்து வண்டியூர் புறப்பட்டு செல்கிறார்.

    மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிப்பது குறித்து பட்டர் ஒருவர் கூறியதாவது:-

    அழகர் மலை உச்சியில் என்றும் தண்ணீர் வற்றாத நூபுர கங்கை உள்ளது. அங்கு ஒருநாள் சுதபஸ் என்ற முனிவர், தண்ணீரில் மூழ்கி நீராடியபடி மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார். அப்போது துர்வாச முனிவர் தனது சீடர்களுடன் நூபுரகங்கைக்கு வந்தார். அவரை சுதபஸ் முனிவர் கவனிக்கவில்லை. குளித்து முடித்து பூஜைகளை செய்த பின் நேரம் கடந்து வந்து துர்வாச முனிவரை வரவேற்றார். அதனால் துர்வாச முனிவர் கோபமடைந்து சுதபஸ் முனிவரை பார்த்து மண்டூகம் (தவளை) ஆகும்படி சாபம் கொடுத்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சுதபஸ் முனிவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார். உடனே துர்வாச முனிவர், சித்திரை மாதம் பவுர்ணமி தினத்துக்கு மறுநாள் வரும் கிருஷ்ண பட்ஷ பிரதமை திதியில் சுந்தரராஜப்பெருமாள் கள்ளழகராக வந்து சாபவிமோசனம் அளிப்பார் என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டார். சாபத்தினால் தவளையாக மாறிய சுதபஸ் முனிவர், சுந்தரராஜப்பெருமாளை நினைத்து தவமிருந்தார். தவத்தினால் மனம் இறங்கிய சுந்தரராஜப்பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரை வந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் வழங்கியதாக வரலாறு கூறுகிறது என்று தெரிவித்தார்.

    ×