search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூலஸ்தானம்"

    • கோவிலுக்கு திரும்பிய கள்ளழகர் மூலஸ்தானத்தில் எழுந்தருளினார்.
    • தைலக்காப்பு சாத்தப்படாததால் நேரடியாக கள்ளழகரை கோவில் மூலஸ்தானத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    மதுரை

    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து 3-ந்தேதி பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். மறுநாள் புதூரில் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கள்ளழகரை வரவேற்றனர். தொடர்ந்து தல்லாகுளம் பெருமாள் கோவிலில் எழுந்தருளிய கள்ளழ கருக்கு திருமஞ்சனம் நடந்தது.

    கடந்த 5-ந்தேதி உலக பிரசித்தி பெற்ற வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை 6 மணியளவில் தங்க குதிரை வாகனத்தில் வைகை யாற்றில் இறங்கிய கள்ளழகரை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. 7-ந் தேதி இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார கோலத்தில் பெருமாள் காட்சியளித்தார். மறுநாள் (8-ந்தேதி) அதிகாலை தமுக்கம் கருப்பண்ணசாமி கோவில் முன்பு வையாழியாக உருமாறி கள்ளழகர் தங்க பல்லக்கில் அழகர் மலைக்கு புறப்பட்டார். நேற்று மதியம் 11 மணியளவில் கள்ளழகர் இருப்பிடம் சென்றார்.

    3-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை கள்ளழகரை பல லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று மதியம் கோவிலுக்கு திரும்பிய கள்ளழகர் அங்குள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி னார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் கோவிலின் மூலஸ்தானத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து பக்தர்கள் மூலவர் சுந்தரராஜ பெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவி, கள்ளழ கரையும் ஒருசேர தரிசனம் செய்தனர்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு சித்திரை திருவிழாவின்போது கள்ளழகர் கோவிலை விட்டு புறப்பாடான நேரத்தில் மூலவரான சுந்தரராஜ பெருமாளுக்கு தைலக் காப்பு சாத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக பக்தர்கள் அவரை தரிசிக்க முடியவில்லை. அப்போது திருவிழாவில் பங்கேற்று இருப்பிடம் வந்த கள்ளழகர் மூலஸ்தானத்திற்கு கொண்டு செல்லப்படாமல் சன்னதி முன்புள்ள மண்டபத்தில் எழுந்தருளி னார். மூலவரை வணங்க முடியாத காரணத்தால் பக்தர்கள் கள்ளழகரை சேவித்து சென்றனர். ஆனால் இந்த ஆண்டு மூலவருக்கு தைலக்காப்பு சாத்தப்படாததால் நேரடியாக கள்ளழகரை கோவில் மூலஸ்தானத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    ×