search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடல் சீற்றம்"

    • வானிலை ஆய்வு மையம் கடலில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டு துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி கடல் சீற்றமாக காணப்பட்டது.

    மேலும், வானிலை ஆய்வு மையமும் கடலில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் இன்று 2-து நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    ஒரு சில மீனவர்கள் கரையோரம் பைபர் படகு மூலம் மீன்பிடிக்க சென்ற நிலையில் காற்று அதிகமாக வீசியதால் உடனடியாக கரை திரும்பினர்.

    மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளது.

    இதனால் கடற்கரை பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    • காலை பெய்ய தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது
    • கடலில் ராட்சத அலைகள் எழும்பின. 15 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பியது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி வந்தது. வெப்பத்தின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர்.

    இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவிலில் காலை பெய்ய தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசியது. தக்கலை, குழித்துறை, அஞ்சுகிராமம், சுசீந்திரம், தடிக்காரன்கோணம், கீரிப்பாறை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் பரவலாக சாரல் மழை பெய்தது.

    ஏற்கனவே விவசாயிகள் மழையை எதிர்நோக்கி உள்ள நிலையில் தற்பொழுது மழை பெய்திருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பருவமழை கை கொடுக்குமா? என்ற நிலையில் விவசாயிகள் உள்ளனர். பாசன குளங்கள் வறண்டு காணப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டமும் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. பேச்சிப்பாறை அணையிலும் குறைவான அளவில் தண்ணீர் உள்ளது.

    எனவே பருவமழை கை கொடுத்தால் மட்டுமே கன்னி பூ சாகுபடி பணியை முழுமையாக செய்து முடிக்க முடியும் என்ற நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

    அரபிக்கடல் பகுதியில் இன்று காலை முதலே சூறைக்காற்று வீசியதால் கடல் சீற்றமாக காணப்பட்டது. கன்னியாகுமரி கோவளம் குளச்சல் பகுதிகளில் கடலில் ராட்சத அலைகள் எழும்பின. 15 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பியது.

    கடற்கரையையொட்டி உள்ள தூண்டில் வளைவுகள் மீது ராட்சத அலைகள் மோதியது. மார்த்தாண்டம் துறை வள்ளவிளை, தூத்தூர், இறையுமன் துறை பகுதியிலும் கடல் சீற்றமாக காணப்பட்டது. ஒரு சில மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    • நேற்று முதல் குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது.
    • குளச்சல், கொட்டில்பாடு சுற்றுவட்டார பகுதிகளில் கடல் சீற்றத்தால் கடல் அரிப்பும் ஏற்பட்டுள்ளது.

    குளச்சல்:

    குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கம்.

    ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பு வரை விழும். அதனால் பாதுகாப்பு கருதி விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பின.

    இதனால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது. தற்போது கடந்த 1-ந்தேதி முதல் 61 நாட்களுக்கு மேற்கு கடற்கரை பகுதியில் மீன் பிடிக்க விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை. குளச்சல் பகுதி விசைப்படகுகள் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. விசைப்படகினர் விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் வள்ளங்கள், கட்டுமரங்கள் வழக்கம்போல் மீன்பிடித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முதல் குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கடல் சீற்றமாக இருந்து வருகிறது. ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பு வரை விழுந்து செல்கிறது.

    இதனால் அங்கு கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. குளச்சல், கொட்டில்பாடு சுற்றுவட்டார பகுதிகளில் கடல் சீற்றத்தால் கடல் அரிப்பும் ஏற்பட்டுள்ளது. இன்று 2-வது நாளாக குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசுகிறது.

    இதனால் பெரும்பான்மையான கட்டுமரங்கள், வள்ளங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஒரு சில கட்டுமரங்களே மீன் பிடிக்க சென்றன. அவற்றுள் குறைவான நெத்திலி மீன்களே கிடைத்தன. மணற்பரப்பில் நிறுத்தப்பட்ட பைபர் வள்ளங்கள், கட்டுமரங்கள் பாதுகாப்பாக மேடான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கடலில் காற்று காரணமாக கட்டுமரங்கள் மீன் பிடிக்க செல்லாததால் குளச்சலில் இன்று மீன் வரத்து குறைந்தது.

    • குளச்சல் கடல் பகுதியில் கடல் திடீர் சீற்றமாக இருந்து வருகிறது.
    • விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் தொழில் பாதிப்பில்லாமல் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றன.

    குளச்சல்:

    குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கம். ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழும். இதனால் பாதுகாப்பு கருதி விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பின. இதனால் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது.

    தற்போது கடந்த 1-ந்தேதி முதல் மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஆனால் பைபர் வள்ளங்கள், கட்டு மரங்கள் வழக்கம்போல் மீன் பிடித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை குளச்சல் கடல் பகுதியில் கடல் திடீர் சீற்றமாக இருந்து வருகிறது. ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழுந்து செல்கிறது.

    இந்த அலை வெள்ளத்தால் துறைமுக பழைய பாலத்தின் தூண் பகுதியில் ஏற்பட்ட கடலரிப்பு பகுதியில் மணல் குவிந்து உள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட கடலரிப்பு பகுதியில் மணல் திட்டு உருவாகி உள்ளது. குளச்சல், கொட்டில்பாடு சுற்று வட்டார பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் மணல்பரப்பில் நிறுத்தப்பட்ட பைபர் வள்ளங்களை மீனவர்கள் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் தொழில் பாதிப்பில்லாமல் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றன.

    • பாதுகாப்பு கருதி விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாது
    • மணற்பரப்பில் விழுந்து செல்லும் அலை வெள்ளம் மணற்பரப்பை அடித்து செல்கிறது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படும். ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பு வரை விழும். அதனால் பாதுகாப்பு கருதி விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பின. இதனால் மீன் பிடித்தொழில் பாதிக்கப்பட்டது.

    தற்போது காற்று சற்று தணிந்த நிலையில் மீண்டும் விசைப்படகுகள் மீன் பிடிக்க சென்றன. வழக்கம்போல் குறைந்த அளவே பைப்பர் வள்ளங்கள் மீன் பிடித்து வருகின்றன. இந்நிலையில் இன்று காலை குளச்சல் கடல் பகுதியில் கடல் திடீர் சீற்றமாக இருந்து வருகிறது. ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பு வரை விழுந்து செல்கிறது. மணற்பரப்பில் விழுந்து செல்லும் அலை வெள்ளம் மணற்பரப்பை அடித்து செல்கிறது. இதனால் அங்கு கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.

    குளச்சல், கொட்டில்பாடு சுற்றுவட்டார பகுதிகளில் கடல் சீற்றத்தால் கடல் அரிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் மணற்பரப்பில் நிறுத்தப்பட்ட பைபர் வள்ளங்கள் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றன. அவற்றுள் குறைந்தளவு மீன்களே கிடைத்தன. கிடைத்த மீன்களை மீனவர்கள் ஏலக்கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர்.

    • மோக்கா புயல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையைக் கடக்கும் என அறியப்பட்டுள்ளது.
    • புயல் எச்சரிக்கை விதமாக 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

    கடலூர்:

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மோக்கா புயல் அதி தீவிர புயலாக மாறியது. போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 610 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள இந்த புயல் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையைக் கடக்கும் என அறியப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் கரையை கடக்கும் போது 180 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கடலூர் துறைமுகத்தில் தூர புயல் எச்சரிக்கை விதமாக 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. மேலும் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் மூலம் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    இதனை தொடர்ந்து கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சுப உப்பலவாடி உள்ளிட்ட பல்வேறு மீனவர் கிராமங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகின்றது. தற்போது மீன்பிடி தடைக்காலம் உள்ளதால் பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. ஆனால் ஒரு சில மீனவர்கள் பைபர் படகு மற்றும் கட்டுமரத்தில் அரசு நிபந்தனைக்குட்பட்டு மீன்பிடித்து வந்தனர். தற்போது வழக்கத்தை விட கடல் சீற்றம் மற்றும் கடல் பகுதியில் அதிகளவில் காற்று வீசப்பட்டு வருவதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும் கடலோர பகுதிகளில் எந்த வித அசம்பாவதமும் ஏற்படாத வண்ணம் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் விதமாக பயணிகள் கடலில் ஆபத்தை உணராமல் குளித்தனர்.
    • காலையில் கடல் சீற்றம் சற்று குறைந்து, மிதமான காற்று வீசுவதால் பாய்மர படகு போட்டி காலையில் இருந்து நடந்து வருகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் பகுதிகளில் நேற்று மாலையில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்தனர். அதையும் மீறி கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் விதமாக பயணிகள் கடலில் ஆபத்தை உணராமல் குளித்தனர்.

    இந்த நிலையில் கோவளம் கடற்கரையில் நடந்து வரும் பாய்மர படகு போட்டியும், அப்பகுதி கடல் சீற்றம் காரணமாக நேற்று நிறுத்தப்பட்டது. அதையும் மீறி சில வீரர்கள் பயிற்சிக்காக கடலுக்குள் செல்ல முயற்சி செய்தனர். அதில் கடல் அலையில் சிக்கி ஒரு படகின் விலை உயர்ந்த பாய்மரம் கிழிந்தது. கடலோர காவல்படை வீரர்கள் அவர்களை கரைக்கு அழைத்து வந்தனர்.

    இன்று காலையில் கடல் சீற்றம் சற்று குறைந்து, மிதமான காற்று வீசுவதால் பாய்மர படகு போட்டி காலையில் இருந்து நடந்து வருகிறது. புயல் எச்சரிக்கை இருப்பதால் போட்டி நடைபெறும் இடத்தில் கூடுதலாக கடலோர காவல்படை நீச்சல் வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • குளச்சல் கடலுக்குள் கட்டப்பட்டுள்ள பாலத்தின் அருகில் மணல் மேடுகளாக காணப்படும்.
    • பைபர் வள்ளங்களை கடலுக்குள் கொண்டு செல்ல மீனவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது

    குளச்சல்:

    குளச்சல் சுற்று வட்டார கடல் பகுதியில் கடல் சீற்றம் காணப்படுவதால் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகமான பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. ஒவ்வொரு வருடமும் ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் காற்று வீசுவதோடு கடல் சீற்றமாகவும் காணப்படும்.

    தற்போது மே மாதமே கடல் சீற்றமாக காணப்படுகிறது. கடந்த 2 நாட்களாக கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இன்று 3-வது நாளாகவும் கடல் சீற்றமாக இருந்தது. மேலும் அலைகளின் உக்கிரமும் அதிகமாக காணப்பட்டது. இதனால் இன்றும் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கட்டுமரங்களும் குறைந்த அளவே கடலுக்கு சென்றன.

    குளச்சல் கடலுக்குள் கட்டப்பட்டுள்ள பாலத்தின் அருகில் மணல் மேடுகளாக காணப்படும். தற்போது கடல் சீற்றமாக காணப்படுவதால் மேடான பகுதியில் உள்ள மேடுகளை கடல் அலை மணல்களை இழுத்து செல்லப்படுகிறது. தற்போது அந்த பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் பைபர் வள்ளங்களை கடலுக்குள் கொண்டு செல்ல மீனவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகமான பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க செல்லாததால் மீன்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

    குளச்சல் கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதை காணலாம்.

    • வள்ளங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை
    • அதிகமான பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க செல்லாததால் மீன்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    குளச்சல் சுற்று வட்டார கடல் பகுதியில் கடல் சீற்றம் காணப்படுவதால் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகமான பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. ஒவ்வொரு வருடமும் ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் காற்று வீசுவதோடு கடல் சீற்றமாகவும் காணப்படும்.

    தற்போது மே மாதமே கடல் சீற்றமாக காணப்படு கிறது. கடந்த 2 நாட்களாக கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இன்று 3-வது நாளாகவும் கடல் சீற்றமாக இருந்தது. மேலும் அலைகளின் உக்கிரமும் அதிகமாக காணப்பட்டது. இதனால் இன்றும் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கட்டுமரங்களும் குறைந்த அளவே கடலுக்கு சென்றன.

    குளச்சல் கடலுக்குள் கட்டப்பட்டுள்ள பாலத்தின் அருகில் மணல் மேடுகளாக காணப்படும். தற்போது கடல் சீற்றமாக காணப்படு வதால் மேடான பகுதியில் உள்ள மேடுகளை கடல் அலை மணல்களை இழுத்து செல்லப்படுகிறது. தற்போது அந்த பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் பைபர் வள்ளங்களை கடலுக்குள் கொண்டு செல்ல மீனவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகமான பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க செல்லாததால் மீன்பிடிப்பு பாதிக்கப்பட்டது

    • கேரள கடல் பகுதியில் காணப்பட்ட சீற்றம் காரணமாக குமரி மேற்கு கடல் பகுதியிலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
    • கன்னியாகுமரி கடல் பகுதியிலும் இன்று கடல் சீற்றம் காணப்பட்டது.

    குளச்சல்:

    கேரளாவின் அரபிக்கடல் பகுதியில் கடந்த 2 நாட்களாக கடலில் சூறைக்காற்றும், அலைகளின் கொந்தளிப்பும் அதிகமாக காணப்பட்டது.

    இதுதொடர்பாக கேரள கடல் பகுதியில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அங்குள்ள அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். மேலும் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும் கூறியிருந்தனர்.

    கேரள கடல் பகுதியில் காணப்பட்ட சீற்றம் காரணமாக குமரி மேற்கு கடல் பகுதியிலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

    இதனால் குளச்சல், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற படகுகள் கரை திரும்பி வருகின்றன. குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மட்டும் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைபடகுகள் உள்ளன.

    இதில் கரை திரும்பிய படகுகள் அனைத்தும் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதுபோல கட்டுமரங்கள், வள்ளங்களும் கடலுக்கு செல்லவில்லை.

    இன்று 2-வது நாளாகவும் குளச்சலில் கடலுக்குள் பயங்கர சூறைக்காற்று வீசியது. அலைகளும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதன் காரணமாக 2-வது நாளாக இன்றும் விசை படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    குறைந்த அளவிலேயே கட்டுமரங்களும், வள்ளங்களும் மீன்பிடிக்க சென்றன. அவையும் அவசரமாக கரை திரும்பியது.

    விசைபடகுகள் மற்றும் கட்டுமரங்கள், வள்ளங்கள் அவசரமாக கரை திரும்பியதால் குறைந்த அளவே மீன்கள் பிடிப்பட்டன. குறிப்பாக சூறை, புல்லன் இறால் போன்ற மீன்களையே மீனவர்கள் பிடித்து வந்தனர்.

    அவற்றை வியாபாரிகள் போட்டிபோட்டு வாங்கி சென்றனர். போதிய மீன்வரத்து இல்லாததால் மீனவர்களும், வியாபாரிகளும் கவலை அடைந்தனர்.

    கன்னியாகுமரி கடல் பகுதியிலும் இன்று கடல் சீற்றம் காணப்பட்டது. இதனால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் முடிந்து கடந்த 6-ந் தேதிதான் திறக்கப்பட்டது. இப்போது கடல் சீற்றம் காரணமாக அங்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகள் மற்றும் பைபர் வள்ளங்களை மீன்பிடி துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.
    • கரை திரும்பிய விசைப் படகுகளில் இருந்து மீன்கள் அதிகம் கிடைக்கவில்லை.

    குளச்சல்:

    குளச்சல் கடல் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பலத்த காற்று வீசுவதோடு கடல் சீற்றமும் காணப்பட்டு வந்தது.

    தற்போது கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடுகள் காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் குமரிக்கடல் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த காற்று வீசி வந்த நிலையில் இன்று கடல் சீற்றத்துடனும் காணப்படுகிறது

    இதனால் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் பைபர் படகு மற்றும் விசைப்படகு. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகள் மற்றும் பைபர் வள்ளங்களை மீன்பிடி துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

    இன்று கரை திரும்பிய விசைப் படகுகளில் இருந்து மீன்கள் அதிகம் கிடைக்கவில்லை. மேலும் வள்ளங்கள் மூலமும் அதிகமான மீன்கள் கிடைக்க வில்லை என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

    • கடலூர் தாழங்குடா முதல் தேவனாம்பட்டினம் வரை கடற்கரை ஓரமாக பாதுகாப்பு கருதி நடப்பட்டிருந்த சவுக்கு மரங்கள் கடல் அலை சீற்றம் காரணமாக அடித்து சென்றது,.
    • தொடர்ந்து வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்படுவதால் சீல்வர் பீச்சிற்கு வரும் பொதுமக்களை கடலோரம் அனுமதிக்கவில்லை

    கடலூர்:

    சில மாதங்களாக தொடர்ச்சியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் அடிக்கடி கடல் சீற்றம், திடீர் மழை போன்றவை நிகழ்கிறது. இதனால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அடிக்கடி அறிவிப்பு வெளியாகிறது. கடல் அலை முன்னோக்கி அதிக அளவில் வந்து செல்வதால் மீனவர்கள் பாதுகாப்பான இடங்களில் படகுகளை நிறுத்தி செல்கின்றனர்

    மேலும், கடலூர் தாழங்குடா முதல் தேவனாம்பட்டினம் வரை கடற்கரை ஓரமாக பாதுகாப்பு கருதி நடப்பட்டிருந்த சவுக்கு மரங்கள் கடல் அலை சீற்றம் காரணமாக அடித்து செல்கிறது.இந்நிலையில் கடலில் அலைகள் வழக்கத்தை விட சீற்றம் அதிகமாக இன்று காலை முதல் காணப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக தற்போது கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்படுவதால் சீல்வர் பீச்சிற்கு வரும் பொதுமக்களை கடலோரம் அனுமதிக்கவில்லை. மேலும், போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்ட காரணத்தினால் பரபரப்பாக காணப்பட்டது.

    ×