என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம்: 5 ஆயிரம் மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை
- வானிலை ஆய்வு மையம் கடலில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
- மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டு துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி கடல் சீற்றமாக காணப்பட்டது.
மேலும், வானிலை ஆய்வு மையமும் கடலில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் இன்று 2-து நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
ஒரு சில மீனவர்கள் கரையோரம் பைபர் படகு மூலம் மீன்பிடிக்க சென்ற நிலையில் காற்று அதிகமாக வீசியதால் உடனடியாக கரை திரும்பினர்.
மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளது.
இதனால் கடற்கரை பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
Next Story






