search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடல் சீற்றம்"

    • குளச்சல் கடற்கரையில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் விதமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
    • பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள பல்வேறு கடல் பகுதிகளிலும் நேற்று மாலை திடீரென கடல் அலைகள் சீற்றமாக காணப்பட்டன. சுனாமி காலத்தில் ஏற்பட்டது போன்று அலையின் வேகம் இருந்தது. இதனால் கடலோரப் பகுதிகளில் ஒருவித பரபரப்பு ஏற்பட்டது.

    கொல்லங்கோடு இறையு மன்துறை பகுதியில் கடலில் எழுந்த ராட்சத அலைகள், தடுப்புச் சுவரை தாண்டியதால் கரையோரம் இருந்த வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது. இதனால் வீடுகளில் இருந்த மக்கள் அச்சத்தில் சாலைக்கு வந்தனர். கடல் நீர், கரையோரம் இருந்த கல்லறை தோட்டங்கள் கடல் நீரால் சூழப்பட்டன. குளச்சல் கடற்கரையில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் விதமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அங்கு ராட்சத அலைகள் எழும்பியதை பார்த்த அவர்கள், அங்கிருந்து அவரச அவசரமாக பாதுகாப்பான இடங்களை தேடிச் சென்றனர். அவர்கள் அமர்ந்திருந்த மணல்பரப்பு வரை கடல் நீர் வந்து சென்றது. சிலர் அதில் கால் நனைத்து மகிழ்ந்தனர்.

    கன்னியாகுமரியிலும் கடல் சீற்றமாகவே காணப்பட்டது. இதனை தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், கன்னியாகுமரி போலீசாரும் விரைந்து செயல்பட்டு சுற்றுலா பயணிகளை கடற்கரை பகுதியில் இருந்து வெளியேற்றினர். இந்த நிலையில் இன்று 2-வது நாளாகவும் குமரி மாவட்ட கடற்பகுதியில் ராட்சத அலைகள் எழும்பின. இதனால் கடலோரப் பகுதிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கன்னியாகுமரியில் இந்திய பெருங்கடல், அரபிக் கடல், வங்கக்கடல் ஆகிய 3 கடல்களும் ஆர்ப்பரித்துக் கொண்டே இருந்தன. சுமார் 10அடி முதல் 15 அடி உய ரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின. நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை நோக்கி ஆக்ரோஷமாக வந்து பாறைகளில் முட்டி மோதி சிதறிய காட்சி பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது.

    கடல் சீற்றம் காரணமாக நேற்று மதியம் நிறுத்தப்பட்ட விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கான படகு போக்குவரத்து இன்று காலையும் ரத்து செய்யப்பட்டே இருந்தது. காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இது தொடர்பாக படகு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், கடல் சீற்றம் தணிந்த பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து இயக்கப்படும் என்றனர்.

    குளச்சல் கடலில் எழுந்த ராட்சத அலைகள், மணற் பரப்பில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 10 பைபர் வள்ளங்களை இழுத்து சென்றதால் அவை சேதமடைந்தன. ஒரு சில கட்டுமரங்களையும் காணவில்லை என மீனவர்கள் கூறினர்.

    • மீனவர்களின் வலைகள் உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்களும் பலத்த சேதம் அடைந்தன.
    • சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ராமேசுவரம்:

    மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது தனுஷ்கோடி மற்றும் அரிச்சல் முனை. தீவுப்பகுதியான ராமேசுவரத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனைக்கு சென்று இயற்கை அழகையும், வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் கண்டுகளிப்பது வழக்கம். இதனால் நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில், நேற்று மாலையில் திடீரென மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பயங்கர சூறைக் காற்று வீசத்தொடங்கியது. இதனால் கடல் சீற்றம் ஏற்பட்டு தனுஷ்கோடி மீனவர் குடியிருப்பு பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. மேலும் சீறி வந்த அலையால் தனுஷ் கோடி மற்றும் அரிச்சனை முனை வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சேதம் ஏற்பட தொடங்கியது. சுமார் 5 அடி உயரத்திற்கு எழுந்த ராட்சத அலைகளால் எங்கு பார்த்தாலும் கடலாகவே காட்சி அளித்தது.

    பல இடங்களில் மணல் பரப்பே தெரியாத அளவுக்கு அந்த பகுதிகளை கடல் நீர் சூழ்ந்திருந்தது. குறிப்பாக தனுஷ்கோடி பகுதியில் தங்கி தொழில் செய்து வரும் மீன் விற்பனையாளர்கள், குளிர்பான கடைகள் வைத்திருப்பவர்களின் உடமைகளை அனைத்தும் கடல் நீரில் அடித்து செல்லப்பட்டன. மேலும் மீனவர்களின் வலைகள் உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்களும் பலத்த சேதம் அடைந்தன.


    இதனைதொடர்ந்து, அங்கு வழக்கமாக கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் அந்த பகுதியில் இருந்த சுற்றுலா பயணிகளை உடனடியாக வெளியேற எச்சரித்தனர். இதனால் பீதியடைந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உடனே அவர்கள் வந்த வாகனத்துடன் வெளியேறினர்.

    நேற்று இரவு சுமார் 9 மணியளவில் மீண்டும் பயங்கர சூறாவளியுடன் காற்று வீசியதால் அப்போதும் கடல் நீர் நிலப்பரப்புகளை மூடியது. மணல் திட்டுகள் அனைத்தும் காணாமல் போனது. மேலும் அங்கு போடப்பட்டிருந்த தார்ச்சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு கற்கள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. தற்காப்புக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அனைத்தும் காற்றில் வேகத்தில் பறந்தன. அந்த பகுதியையும் கடல் நீர் குளம்போல் மாற்றியது.

    மேலும் இன்றும் கடல் சீற்றம் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தனுஷ்கோடிக்கு சுற்றுலா வாகனங்கள் செல்ல வருவாய்த்துறையினர் தடை விதிக்கப்பட்டுள்ளது. நடராஜபுரம் பகுதியில் காவல்துறையினர் தடுப்பு வேலி அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம் பகுதிகளுக்கு செல்ல ஆர்வத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    • தனுஷ்கோடியில் ஏற்கனவே புயலால் அழிந்த கட்டிடங்கள் இருந்த பகுதி வரை, கடல் நீர் புகுந்தது.
    • அச்சம் அடைந்த மீனவ மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் குவிந்து மறியலில் ஈடுபட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் அருகே உள்ளது புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கடல் பகுதி. இயற்கையாகவே தனுஷ்கோடி பகுதி கடல் சீற்றம் மற்றும் நீரோட்டம் உள்ள பகுதியாகும். வழக்கத்திற்கு மாறாக நேற்று பகலில் இருந்து கடல் சீற்றமாகவே இருந்தது.

    மாலை 4 மணிக்கு பிறகும் கடல் சீற்றத்துடனும், கடல் நீர் பொங்கியபடி கடற்கரை மணல் பரப்பை நோக்கியும், சாலை வரையிலும் வந்தது. மாலை 5 மணிக்கு பிறகு எம்.ஆர்.சத்திரம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து அரிச்சல் முனை வரையிலும் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு கடற்கரை பகுதி முழுமையாக கடல் நீரால் சூழ்ந்தது.

    அதுபோல் கம்பிப்பாடு பகுதியில் இருந்து அரிச்சல்முனைக்கு இடைப்பட்ட தென்கடல் பகுதியில் பயங்கர கடல் சீற்றம் இருந்ததுடன் கடல் நீரானது தடுப்புச் சுவரில் மோதி சாலை வரையிலும் வந்தது.

    இதனை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். செல்போனிலும் வீடியோ படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    அதுபோல் தனுஷ்கோடியில் ஏற்கனவே புயலால் அழிந்த கட்டிடங்கள் இருந்த பகுதி வரை, கடல் நீர் புகுந்தது. இதன் காரணமாக, கடலுக்குள் இருந்த ஏராளமான நண்டுகள் கரைப்பகுதிக்கு வந்து முகாமிட்டன. இங்கு கடல் சீற்றமாக இருப்பதால், தடுப்புச்சுவரும், சாலையும் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது என மீனவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

    இது குறித்து தனுஷ்கோடி பகுதியைச் சேர்ந்த மீனவர் உமைய செல்வம் கூறுகையில், தற்போது கடல் சீற்றத்தால் கடல் நீர் கரையை தாண்டி வந்துள்ளது. கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை கடல் நீரில் இழுத்துச் சென்றது. அவற்றை கடும் முயற்சி எடுத்து மீட்டு தடுப்புச் சுவர் பகுதிக்கு கொண்டு வந்து வைத்து உள்ளோம் என்றார்.

    அதுபோல் தனுஷ்கோடி பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் கடல் சீற்றத்தால் சாலை முழுவதும் தடுப்புச் சுவரின் கற்கள் பெயர்ந்தும் கடலில் உள்ள பாசி மற்றும் தாழை செடிகளும் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. வழக்கமாக கடல் சீற்றம் இருக்கும்போது பலத்த சூறாவளி காற்று வீசும். ஆனால் நேற்று ராமேசுவரம் தனுஷ்கோடி பகுதியில் காற்று வீசாத நிலையில் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் குமரி மாவட்டம் நேற்று கொல்லங்கோடு இரையுமன்துறை பகுதியில் கடல்சீற்றம் ஏற்பட்டது. கடலில் ராட்சத அலைகள் எழும்பி அலை தடுப்புச்சுவரை கடந்து கரையோரம் இருந்த வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது.

    இதனால் அச்சம் அடைந்த மீனவ மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் குவிந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் மற்றும் அதிகாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே கடலில் சீற்றம் சற்று தணிந்தது. இதையடுத்து அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். ஆனால், மீனவர்கள் இரவிலும் சாலைகளில் கூடி நின்றனர்.

    கன்னியாகுமரியிலும் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. எனவே சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். 

    • புயல் கரையை கடந்ததை தொடர்ந்து மீன்வளத்துறை தடையை விலக்கி கொண்டனர்.
    • புயல் காரணமாக கடலில் நீரோட்டம் மாறி தங்கள் வலையில் அதிக மீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் சென்றுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 27-ம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத் துறையினர் தடை விதித்தனர்.

    இதனால் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், செருதூர், வேதாரணியம், கோடியக்கரை, ஆற்காடு துறை உள்ளிட்ட 25 மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்களது 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளையும் 5000 மேற்பட்ட நாட்டுப் படகுகளையும் துறைமுகங்களில் 8 நாட்களாக பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.

    மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீனவர்கள் மட்டுமல்லாமல் மீன்பிடித் தொழிலைச் சார்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருமானம் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கட்டது.

    இந்நிலையில் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து மீன்வளத்துறை தடையை விலக்கி கொண்டனர். இதனால் மகிழ்ச்சியடைந்த மீனவர்கள் இன்று அதிகாலை முதல் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

    முன்னதாக மீன்வளத்துறையினர் தடையை நீக்குவார்கள் என்ற நம்பிக்கையில் நேற்று காலையில் இருந்து சில மீனவர்கள் கடலுக்குச் செல்ல தேவையான டீசல், ஐஸ் கட்டிகள் தண்ணீர், உணவு பொருட்களை சேகரித்து வந்த நிலையில் நேற்று இரவு கடலுக்குச் செல்ல விதித்த தடையை நீக்கியதால் இன்று அதிகாலை முதல் குறைந்த அளவிலான விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். புயல் காரணமாக கடலில் நீரோட்டம் மாறி தங்கள் வலையில் அதிக மீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் சென்றுள்ளனர்.

    • ஐயப்ப பக்தர்களும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தனர்.
    • கடல் சீற்றமும் தணிந்த பிறகு தான் படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் தொடங்கிய 3-வது நாளான இன்று கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும், வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலிதுறை கடற்கரை பகுதியில் சூரியன் உதயமாகும் காட்சியை காண இன்று அதிகாலை 5 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினார்கள். ஆனால் மழை மேக மூட்டம் காரணமாக வானம் மப்பும் மந்தாரமாக காட்சி அளித்தது. இடையிடையே விட்டுவிட்டு மழை பெய்துகொண்டே இருந்தது. தொடர்ந்து மழை மேகம் சூழ்ந்து சூரிய வெளிச்சம் வெளியே தெரியாமல் இருந்தது. இதனால் கன்னியாகுமரி கடற்கரைக்கு சூரிய உதயம் காண வந்த சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    அதேபோல கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக ஏற்பட்ட ராட்சத அலைகளால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அதையும் மீறி கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கடலில் புனித நீராட சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்த போதும் சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தனர். கொட்டும் மழையிலும் சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

    மழை பெய்து கொண்டிருந்தபோதும் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும் கன்னியாகுமரியில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களை சுற்றி பார்வையிட்டனர். இதனால் காந்திநினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், மியூசியம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரியில் இன்று காலையில் திடீர் என்று மழை பெய்தது. இதனால் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. மழை நின்று, கடல் சீற்றமும் தணிந்த பிறகு தான் படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் மழையின் காரணமாக கடல் சீற்றமாக காணப்பட்டது.

    இங்கு சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக் கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. 

    • நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் குமரி மாவட்ட மீன் சந்தைகளுக்கு இன்று மீன்வரத்து இல்லை.
    • கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் தங்களின் வருவாய் பாதித்திருப்பதாக நாட்டுப்படகு மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடல் பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் மீனவர்கள் கடும் சிரமத்துடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வந்தனர்.

    இந்த நிலையில் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் மழைக்கு மத்தியில் பலத்த காற்றும் வீசியது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பி மிகவும் ஆக்ரோஷமாக அடித்து வருகிறது.

    கடல் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கடல் சீற்றத்துடன் காணப்படுவதாலும் குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி குமரி மாவட்டத்தில் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், புதுகிராமம், மணக்குடி, கீழமணக்குடி, சிலுவை நகர் உள்ளிட்ட 10 கடற்கரை கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் தங்களுக்கு சொந்தமான நாட்டுப் படகுகள், வள்ளம், கட்டு மரங்களை கடற்கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். விசைப்படகு மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருக்கின்றனர்.

    நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் குமரி மாவட்ட மீன் சந்தைகளுக்கு இன்று மீன்வரத்து இல்லை. இதனால் கன்னியாகுமரி, வாவத்துறை, கோவளம், சின்ன முட்டம் மீன் சந்தைகள் மீனவர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

    கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் தங்களின் வருவாய் பாதித்திருப்பதாக நாட்டுப்படகு மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

    குளச்சலில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 1000-த்திற்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டுமரங்கள் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன் பிடித்து வருகிறார்கள். சில நாட்களாக குளச்சல் பகுதியில் மழை காணப்படுகிறது.

    கடலுக்குள் பலத்த காற்று அடிக்கும் காரணத்தால் சில சமயங்களில் பைபர் வள்ளங்கள், கட்டுமரங்கள் அதிகமாக மீன் பிடிக்க செல்லாமல் இருக்கும். தற்போது இரு தினங்களாக குளச்சல் கடல் பகுதியில் கடலுக்குள் காற்றழுத்தம் காணப்படுவதால், காற்றின் காரணமாகவும் அதிகமான பைபர் வளங்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    சில விசைப்படகுகள் இன்று கரை திரும்பின. அந்த விசைப்படகுகளில் குறைந்த அளவே கணவாய் மீன்கள் கிடைத்தன. அதை வியாபாரிகள் ஏலம் விட்டு எடுத்தனர். பைபர் வள்ளங்களில் அதிகமான மீன்கள் இன்று வரவில்லை. இதனால் இன்று மீன்கள் வரத்து குறைந்தது.

    • இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப்பட்டது.
    • 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் இன்று காலை ஒரு புறம் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது.

    இன்னொரு புறம் கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் கன்னியாகுமரிகடல்நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவுமண்டபம் மற்றும்திருவள்ளுவர்சிலை அமைந்துஉள்ளவங்ககடல் பகுதிநீர்மட்டம்தாழ்ந்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் நிறுத்தி வைத்திருந்த சுற்றுலா படகுகள் தரைதட்டி நின்றன.

    அதேவேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரிகடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப் படவில்லை.

    இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கிடையில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.

    கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். மேலும் கன்னியாகுமரி, சின்ன முட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்றகடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது.

    இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல்15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின. இதனால் மீன்பிடித் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டன. வட்ட கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.

    • விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து 2 மணிநேரம் நிறுத்தம்
    • வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவ ள்ளுவர் சிலை அமைந் துள்ள வங்ககடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப் பட்டது. அதே வேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப்பட்டது.

    இதனால் கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்கு வரத்து தொடங்கப் பட வில்லை. இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில்சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.இதற்கிடையில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கி யது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகி ல்சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர். மேலும் கன்னியாகுமரி, சின்ன முட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப் பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • சுற்றுலா பயணிகள் ஓட்டம்-பரபரப்பு
    • கடந்த 5 நாட்களாக கடல் கொந்தளிப்பாகவே காணப்படுகிறது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி கடற்கரை, வட்டக்கோட்ைட, சொத்த விளை கடற்கரை, குளச்சல் கடற்கரை, லெமூர் கடற்கரை போன்றவற்றிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

    விடுமுறை நாட்களில் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். அதன்படி இன்று அனைத்து கடற்கரைகளிலும் ஏராளமானோர் குடும்பத்து டன் வந்திருந்தனர்.

    வழக்கமாக ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் குமரி மாவட்டத் தில் கடல் சீற்றமாக இருக்கும். கடந்த 5 நாட்களாக கடல் கொந்தளிப்பாகவே காணப்படுகிறது. இதனால் கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    அடிக்கடி கடல் நீர் உள் வாங்குவதும், கடல் நீர்மட்டம் தாழ்வு அடைவ தும் நிகழ்ந்து வருகிறது. இன்று பகலும் கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் எழும்பின.

    ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் கடற்கரை யில் இன்று ஏராளமானோர் சுற்றுலா வந்திருந்தனர். அப்போது கடல் சீற்றம் காரணமாக தண்ணீர் கடற் கரைக்கு வந்தது. ராட்சத அலைகள் வேகமாக காணப் பட்டதால் அந்த பகுதியில் உள்ள கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    இதனை கண்ட சுற்றுலா பயணிகள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.

    கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்துள்ள விவேகா னந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.

    இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்கு வரத்து தொடங்கப்பட வில்லை.

    இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். காலை 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கி யது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.

    கன்னியாகுமரி, சின்ன முட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. எனவே இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. இத னால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • நிரந்தர அலை தடுப்பு சுவர் அமைக்க வேண்டுகோள்
    • பாதுகாப்பு கருதி வீட்டை விட்டு வெளியேறிய மக்கள் உறவினர் வீடுகளில் தஞ்சம்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படும்.

    இந்த ஆண்டும் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம், உள் வாங்குதல் போன்ற மாற்றங்கள் ஏற்பட்டு வரு கின்றன. நேற்று முதல் குளச்சல் அருகே கொட்டில் பாட்டில் கடல் சீற்றமாக உள்ளது. ராட்சத அலைகள் எழுந்து அலை தடுப்பு சுவரை தாண்டி விழுகிறது.

    கடந்த ஆண்டு பழைய ஆலயத்தின் அருகில் ஏற்பட்ட அலை தடுப்பு சுவர் கற்கள் சரிந்து விழுந்த பகுதியில் சுமார் 25 அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்ததில் மேற்கு சாலையில் துண்டிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது ஏற்பட்ட கடல ரிப்பில் பழைய ஆலயம் அருகில் கிழக்கு பகுதியில் மேலும் ஒரு சாலை துண்டிக் பப்பட்டுள்ளது. ஊருக்குள் கடல் நீர் புகும் அபாயமும் ஏற்பட்டது.

    இதனால் கிழக்கு பகுதியில் உள்ள சுமார் 10 வீட்டினர், வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் வீட்டில் தஞ்சமடைந்து உள்ளனர்.

    கொட்டில்பாடு கிழக்கு பகுதியில் உள்ள வீடுகளை பாதுகாக்க நிரந்தர அலை தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    • 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
    • சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை ஏராளமான மீனவர் கிராமங்கள் உள்ளது. இங்கு ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும்.

    அப்போது கடற்கரை ஒட்டியுள்ள வீடுகளில் கடல் நீர் புகுந்து விடுவது வழக்கமாக உள்ளது. இதை தடுக்க பல்வேறு இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருந்து கடல் சீற்றம் அதிகமாக இருந்து வருகிறது. இன்று காலையிலும் கடல்சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    சின்ன முட்டம், குளச்சல் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் விசைப்படகுகள் அந்த பகுதியில் நங்கூரம் பாய்த்து நிறுத்தப்பட்டிருந்தது. ஒரு சில வள்ளங்களில் மட்டும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

    கடல் அலைகள் 15 அடி முதல் 20 அடி வரை உயரத்திற்கு எழும்பியது. ராட்சத அலைகள் கடற்கரையொட்டி உள்ள தூண்டில் வளைவுகள் மீது வேகமாக மோதி சென்றன. குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் கடல் சீற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கொல்லங்கோடு தூத்தூர் இரையுமன் துறை வள்ளவிளை சின்னத்துறை போன்ற கடற்கரை கிராமங்களில் கடல்சீற்றம் அதிகமாகவே காணப்படுகிறது. இன்று காலையிலும் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. ராட்சத அலைகள் கடற்கரையையொட்டி உள்ள தூண்டில் வளைவுகளில் வேகமாக மோதியது. தூண்டில் வளைவு இல்லாத பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி-கேரளாவை இணைக்கும் தூத்தூர்-பொழியூர் சாலை துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ராட்சத அலைகள் அந்த சாலைகளை இழுத்துச்சென்றதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையோரத்தில் அடுக்கப்பட்டு இருந்த கற்களையும் அலைகள் கடலுக்குள் இழுத்துச்சென்றது.

    இந்த சாலையை குமரி மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள மீனவர்கள் அதிக அளவு பயன்படுத்தி வருகிறார்கள். இங்கிருந்து அவர்கள் கேரளாவுக்கு மீன்பிடிக்க செல்வதற்கு இந்த சாலை மிகவும் வசதியாக உள்ளது.

    மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் இதை பயன்படுத்தி வந்தனர். இந்த சாலை தற்போது துண்டிக்கக்கூடிய சூழலில் உள்ளது. பள்ளி வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பல கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இந்த சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்தது.
    • ராமேசுவரம் துறைமுகம், மண்டபம், பாம்பன் இறங்குபிடி தளங்களில் படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ராமேசுவரம்:

    தமிழகத்தையொட்டி உள்ள வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    அதன்படி நேற்று முதல் ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட கடலின் சீற்றம் அதிகமாக உள்ளது. மணிக்கு 55 கி.மீ. முதல் 65 கி.மீ.வரை காற்று வீசி வருகிறது.

    தனுஷ்கோடி, பாக்ஜல சந்தி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்தது.

    இதன் காரணமாக ராமேசுவரம், மண்டபம், பாம்பன் ஆகிய பகுதிகளில் இருந்து 1500 விசைப்படகுகள், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுபடகுகள் கடலுக்கு செல்லவில்லை. ராமேசுவரம் துறைமுகம், மண்டபம், பாம்பன் இறங்குபிடி தளங்களில் படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    2-வது நாளாக இன்றும் கடலின் சீற்றம் அதிகமாக உள்ளது. எனவே 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான தனுஷ்கோடிக்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். நேற்று முதல் இந்த பகுதியில் வழக்கத்தை விட கடல் கொந்தளிப்பு அதிகமாக உள்ளது. மேலும் சூறாவளியால் புழுதி காற்றும் வீசி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அக்காள்மடம், முகுந்த ராயர் சத்திரம், அரிச்சல் முனை உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்று வீசி வருகிறது. பல இடங்களில் சாலைகளில் மணல்கள் மூடியுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டது.

    பாம்பனில் கடல் சீற்றமாக இருந்தது. அங்குள்ள தூக்கு ரெயில் பாலம் அருகே திடீரென கடல் பல அடி தூரம் உள்வாங்கியது. இதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைபர், நாட்டுபடகுகள் கடற்கரை மணலில் தரைதட்டி நின்றன.

    ×