search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எச்சரிக்கை கூண்டு"

    • மோக்கா புயல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையைக் கடக்கும் என அறியப்பட்டுள்ளது.
    • புயல் எச்சரிக்கை விதமாக 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

    கடலூர்:

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மோக்கா புயல் அதி தீவிர புயலாக மாறியது. போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 610 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள இந்த புயல் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையைக் கடக்கும் என அறியப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் கரையை கடக்கும் போது 180 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கடலூர் துறைமுகத்தில் தூர புயல் எச்சரிக்கை விதமாக 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. மேலும் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் மூலம் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    இதனை தொடர்ந்து கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சுப உப்பலவாடி உள்ளிட்ட பல்வேறு மீனவர் கிராமங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகின்றது. தற்போது மீன்பிடி தடைக்காலம் உள்ளதால் பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. ஆனால் ஒரு சில மீனவர்கள் பைபர் படகு மற்றும் கட்டுமரத்தில் அரசு நிபந்தனைக்குட்பட்டு மீன்பிடித்து வந்தனர். தற்போது வழக்கத்தை விட கடல் சீற்றம் மற்றும் கடல் பகுதியில் அதிகளவில் காற்று வீசப்பட்டு வருவதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும் கடலோர பகுதிகளில் எந்த வித அசம்பாவதமும் ஏற்படாத வண்ணம் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×