search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடனுதவிகள்"

    • கலெக்டர் சரயு வழங்கினார்
    • செல்லகுமார் எம்.பி., மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பர்கூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு வார விழாவில் 1737 பேருக்கு ரூ.14 கோடியே 97 லட்சம் மதிப்பிலான கடன உதவிகளை கலெக்டர் சரயு வழங்கினார்.

    பர்கூர் ஊராட்சி ஒன்றி யம், ஒரப்பத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நேற்று தொடங்கி யது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். செல்லகுமார் எம்.பி., மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னி லை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஏகாம்பரம் வரவேற்றார். நிகழ்ச்சியில் 1,737 பயனா ளிகளுக்கு ரூ.14 கோடியே 97 லட்சத்து 85 ஆயிரத்து 910 மதிப்பிலான கடன் உதவிகளையும், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் மற்றும் பா ராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    தொடர்ந்து, கலெக்டர் சிறப்பாக செயல்பட்ட 17 கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்களும், அதிகஅளவில் ஊட்டி டீ விற்பனை செய்த 3 கூட்டு றவு விற்பனையாளர்க ளுக்கு பாராட்டு கேடயங்க ளும், அதிக அளவில் அரசு உப்பு விற்பனை செய்த 3 கூட்டுறவு விற்பனையாளர்களுக்கு பாராட்டு கேடயங்களும், அதிக அளவில் கட்டுப்பாடற்ற பொருட்கள் விற்பனை செய்த 3 விற்பனையாளர்களுக்கு பாராட்டு கேடயங்களும், கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற 27 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், கலா ஷேத்ரா பரதநாட்டிய குழு வினர் மற்றும் மங்கள இசை குழுவினர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    முடிவில் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதி வாளர் செல்வம் நன்றி கூறினார்.இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கால்நடை பராம ரிப்புத்துறை இணை இயக்கு நர் ராஜேந்திரன், வேளாண் மைத்துறை இணை இயக்குநர் பச்சையப்பன், கிருஷ்ண கிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பொது மேலாளர் சுந்தரவடிவேல், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரஜினி செல்வம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கலையரசி, துணைப்பதிவா ளர்கள் குமார், சுந்தரம், செல்வம், தாசில்தார் மகேஸ் வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் முகமது பையாஸ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவிகளை மத்திய நிதி மந்தரி வழங்கினார்.
    • பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி விருதுநகரில் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மருத்துவ கல்லூரி கலையரங்கில் மாநில வங்கியாளர் கூட்டமைப்பின் சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள் வதற்காக விருதுநகர் வந்த நிர்மலா சீதாராமனை கலெக்டர் ஜெயசீலன், பா.ஜனதா கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் ஆகியோர் வரவேற்றனர்.

    இதில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு 1,297 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.1 கோடியே 71 லட்சம் கடனு தவி வழங்கி பேசியதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி உதவிக்காக காத்திருக்கும் கடைக்கோடி ஏழைக்கும் உதவி சென்ற டைய வேண்டும் என திட்ட மிட்டார். ஏழை, எளிய மக்கள் உதவி பெறுவது அவர் கள் உரிமை என்ற அடிப்ப டையில் உதவி கிடைப்பதன் மூலம் அவர்கள் சுய சார்பு பெறும் தன்மை ஏற்படும் என்பதே பிரதமரின் திட்டமாகும்.

    அந்த வகையில் அவர் ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று அறி வித்தார். கடந்த 2020-ம் ஆண்டு சாலையோர வியா பாரிகளுக்காக திட்டம் தொடங்கப்பட்டு அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்கப்படு கிறது. அதை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தி முடித்தால் ரூ. 20 ஆயிரமும், அதன் பின்னர் ரூ.50, ஆயிரமும் வழங்கப்படுகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் முதல் தவணையாக 7,772 சாலையோர வியாபாரி களுக்கு ரூ.10 ஆயிரமும், 2-வது தவணையாக 1,642 பேருக்கு ரூ.20 ஆயிரமும், 3-வது தவணை யாக 246 பேரும் ரூ.50 ஆயிரமும் பெற்றுள்ளனர்.

    இத்திட்டத்தின் மூலம் அனைவரும் பயன்பெற அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் ஏழை,எளிய மக்களுக்கு மத்திய அரசு கடனுதவி வழங்குகிறது.

    தனிநபர் கடன் கொடுப்பதை அரசு தடுக்க முடியாது. அதற்காகத்தான் அரசே கடனுதவி வழங்க முன்வந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில். நிதித்துறை செயலாளர் டாக்டர் விவேக் ஜோஷி பேசினார். நிதித்துறை இணை செயலாளர் பர்ஷாந்த் குமார் கோயல் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை செயல் அலுவலர் அஜய்குமார் ஸ்ரீ வஸ்தவா வரவேற்றார்.

    இதனைத்தொடர்ந்து 10 மாணவர்களை அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரி யர்களுடன் மேடைக்கு அழைத்து சந்திரயான் விண்கல மாடலை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வழங்கினார். இதில் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் மற்றும் பலர் உடனிருந்தார்.

    • கூட்டுறவுத்துறை சார்பில் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் கடனுதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • இந்த தகவலை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே தளக்காவூர் கிராமத்தில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கலெக்டர் ஆஷாஅஜித் முன்னிலை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தளக்காவூர் ஊராட்சியை பொறுத்தவரை மக்களின் வரிப்பணம் ரூ.21,17,000/- தொகை உள்ளது. இது தவிர அரசின் சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கென ரூ.3.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் நடப்பாண்டிற்கென ரூ.5.14 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் பயிர் கடனுதவி, மகளிர் சுய உதவிக்குழு கடனுதவி, கால்நடை பராமரிப்பு கடனுதவி, நகை கடனுதவி, தென்னை மற்றும் வாழை பராமரிப்பு கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் கூட்டுறவுத்துறையின் சார்பில் வழங்கப் பட்டுள்ளது. இதில் ரூ.2.27 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவியும் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. அதில் 139 நபர்களுக்கு ரூ.7.25 லட்சம் மதிப்பீட்டிலான பயிர் கடனுதவிகள், 63 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை சார்ந்த 789 நபர்களுக்கு ரூ.1.89 கோடி மதிப்பீட்டிலான கடனுதவியும், 105 நபர்களுக்கு ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் நகை கடனுதவியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    மேலும் கூட்டுறவுத்துறையின் சார்பில் பல்வேறு கடனுதவிகளை வழங்குவதற்கென கடந்தாண்டு ரூ.12 ஆயிரம் கோடி இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டது.ஆனால் அதையும் தாண்டி தமிழகம் முழுவதும் 13,500 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டது.

    இதேபோன்று நடப்பாண்டிலும் தமிழகம் முழுவதும் ரூ.14 ஆயிரம் கோடி வழங்கிட இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதையும் தாண்டி ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் பல்வேறு கடனுதவிகள் வழங்கிட துறை ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கல்லல் ஊராட்சி ஒன்றிய தலைவர் சொர்ணம் அசோகன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரஸ்வதி, உதவி இயக்குநர் (ஊராட்சி கள்) குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சரி லெட்சுமணன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆரோக்கியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி கூட்டமைப்புகளுக்கு ரூ.12 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டது.
    • ஊராட்சி உறுப்பினர் சாந்தா சகாயராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி இளைஞர் திறன் திருவிழா மற்றும் கடனுதவி வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். மாங்குடி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளையும், ஊராட்சி அளவிலான கூட்ட மைப்பிற்கு வங்கி கடனு தவிகளையும் வழங்கினார். பின்னர் அவர் பேசிய தாவது:-

    தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் இளைஞர்கள் வேலை வாய்ப்பினை பெற்று பெற்று வருகிறார்கள்.அதன் அடிப்படையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் ஆகியவைகள் இணைந்து, வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா சிறப்பாக சிவகங்கை அரசு மகளிர் கலை கல்லூரியில் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் மொத்தம் 102 தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டன. 13 நபர்கள் மாற்றுத்திறனாளிகள் உள்பட 347 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள் ளது. பல்வேறு போட்டி தேர்வு களில் பங்கு பெறுவதற்கு இளைஞர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மொத்தம் 24 ஊராட்சிகளை சேர்ந்த கூட்டமைப்பிற்கு மொத்தம் ரூ.12 கோடியே 16 லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்பட்டுள் ளது.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அர்விந்த், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் வானதி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு) தேவேந்திரன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணிகணேஷ், ராஜலட்சுமி, சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் இந்திரா, மானாமதுரை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் லதா அண்ணாதுரை, சிவகங்கை நகர் மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சாந்தா சகாயராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×