search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு வார விழாவில் 1,737 பேருக்கு ரூ.14.97 கோடி மதிப்பில் கடனுதவிகள்
    X

    நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகளை கலெக்டர் சரயு, செல்லகுமார் எம்.பி., மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கிய போது எடுத்த படம்.

    கூட்டுறவு வார விழாவில் 1,737 பேருக்கு ரூ.14.97 கோடி மதிப்பில் கடனுதவிகள்

    • கலெக்டர் சரயு வழங்கினார்
    • செல்லகுமார் எம்.பி., மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பர்கூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு வார விழாவில் 1737 பேருக்கு ரூ.14 கோடியே 97 லட்சம் மதிப்பிலான கடன உதவிகளை கலெக்டர் சரயு வழங்கினார்.

    பர்கூர் ஊராட்சி ஒன்றி யம், ஒரப்பத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நேற்று தொடங்கி யது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். செல்லகுமார் எம்.பி., மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னி லை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஏகாம்பரம் வரவேற்றார். நிகழ்ச்சியில் 1,737 பயனா ளிகளுக்கு ரூ.14 கோடியே 97 லட்சத்து 85 ஆயிரத்து 910 மதிப்பிலான கடன் உதவிகளையும், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் மற்றும் பா ராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    தொடர்ந்து, கலெக்டர் சிறப்பாக செயல்பட்ட 17 கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்களும், அதிகஅளவில் ஊட்டி டீ விற்பனை செய்த 3 கூட்டு றவு விற்பனையாளர்க ளுக்கு பாராட்டு கேடயங்க ளும், அதிக அளவில் அரசு உப்பு விற்பனை செய்த 3 கூட்டுறவு விற்பனையாளர்களுக்கு பாராட்டு கேடயங்களும், அதிக அளவில் கட்டுப்பாடற்ற பொருட்கள் விற்பனை செய்த 3 விற்பனையாளர்களுக்கு பாராட்டு கேடயங்களும், கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற 27 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், கலா ஷேத்ரா பரதநாட்டிய குழு வினர் மற்றும் மங்கள இசை குழுவினர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    முடிவில் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதி வாளர் செல்வம் நன்றி கூறினார்.இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கால்நடை பராம ரிப்புத்துறை இணை இயக்கு நர் ராஜேந்திரன், வேளாண் மைத்துறை இணை இயக்குநர் பச்சையப்பன், கிருஷ்ண கிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பொது மேலாளர் சுந்தரவடிவேல், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரஜினி செல்வம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கலையரசி, துணைப்பதிவா ளர்கள் குமார், சுந்தரம், செல்வம், தாசில்தார் மகேஸ் வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் முகமது பையாஸ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×