search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டுறவு வார விழா"

    • கலெக்டர் சரயு வழங்கினார்
    • செல்லகுமார் எம்.பி., மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பர்கூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு வார விழாவில் 1737 பேருக்கு ரூ.14 கோடியே 97 லட்சம் மதிப்பிலான கடன உதவிகளை கலெக்டர் சரயு வழங்கினார்.

    பர்கூர் ஊராட்சி ஒன்றி யம், ஒரப்பத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நேற்று தொடங்கி யது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். செல்லகுமார் எம்.பி., மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னி லை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஏகாம்பரம் வரவேற்றார். நிகழ்ச்சியில் 1,737 பயனா ளிகளுக்கு ரூ.14 கோடியே 97 லட்சத்து 85 ஆயிரத்து 910 மதிப்பிலான கடன் உதவிகளையும், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் மற்றும் பா ராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    தொடர்ந்து, கலெக்டர் சிறப்பாக செயல்பட்ட 17 கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்களும், அதிகஅளவில் ஊட்டி டீ விற்பனை செய்த 3 கூட்டு றவு விற்பனையாளர்க ளுக்கு பாராட்டு கேடயங்க ளும், அதிக அளவில் அரசு உப்பு விற்பனை செய்த 3 கூட்டுறவு விற்பனையாளர்களுக்கு பாராட்டு கேடயங்களும், அதிக அளவில் கட்டுப்பாடற்ற பொருட்கள் விற்பனை செய்த 3 விற்பனையாளர்களுக்கு பாராட்டு கேடயங்களும், கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற 27 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், கலா ஷேத்ரா பரதநாட்டிய குழு வினர் மற்றும் மங்கள இசை குழுவினர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    முடிவில் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதி வாளர் செல்வம் நன்றி கூறினார்.இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கால்நடை பராம ரிப்புத்துறை இணை இயக்கு நர் ராஜேந்திரன், வேளாண் மைத்துறை இணை இயக்குநர் பச்சையப்பன், கிருஷ்ண கிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பொது மேலாளர் சுந்தரவடிவேல், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரஜினி செல்வம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கலையரசி, துணைப்பதிவா ளர்கள் குமார், சுந்தரம், செல்வம், தாசில்தார் மகேஸ் வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் முகமது பையாஸ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் நடந்த 70-வது கூட்டுறவு வார விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவிகள், சிறு வணிகக்கடன் திட்டம் போன்ற திட்டங்கள் வழங்கப்படுவதாக விழாவில் அமைச்சர் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சிக்குட் பட்ட தனியார் மகாலில், கூட்டுறவுத்துறையின் சார்பில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். அதில் கூட்டுறவுத்துறையின் வாயிலாக பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று உரிய பயன்களை வழங்குவ தற்கென நடவடிக்கையும், மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான கடனுதவிகள் மட்டு மன்றி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி கடன்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு தொழில்கள் துவங்கி பயன்பெறும் வகையில், கடனுதவிகள், சிறு வணிகக்கடன் திட்டம் போன்ற திட்டங்கள் வழங்கப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்ற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் அனைத்து கூட்டுறவு நிறுவ னங்களின் மூலம் 71,456 உறுப்பினர்களுக்கு ரூ.374.18 கோடி மதிப்பீட்டில் பயிர்கட னுதவியும், 7,853 உறுப்பி னர்களுக்கு ரூ.48.35 கோடி மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடனுதவியும், 2,47, 920 உறுப்பினர்களுக்கு ரூ.1,519.03 கோடி மதிப்பீட் டில் நகைக்கடனுதவியும், 2,384 குழுக்களுக்கு ரூ.134.98 கோடி மதிப்பீட்டில் சுய உதவிக்குழு கடனுதவியும், 1,368 உறுப்பினர்களுக்கு ரூ.4.76 கோடி மதிப்பீட்டில் சிறுவணிக கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

    மொத்தம் 4,18,657 நபர் களுக்கு ரூ.3,537.12 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் தற்சமயம் வரை கூட்டுறவுத் துறையின் சார்பில் மாவட் டம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளது.

    2 பயனாளிகளுக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணைகளை யும், 1 பயனாளிக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் காப் பீட்டு தொகைக்கான காசோ லையினையும் என மொத் தம் 3,171 பயனாளிகளுக்கு ரூ.34,88,51,260 மதிப்பீட்டி லான நலத்திட்ட உதவிகள் இவ்விழாவின் வாயிலாக வழங்கப்படவுள்ளது என் றார்.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ. ஜூனு, சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் கே.சி.ரவிச்சந்திரன், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மஞ்சுளா பால சந்தர், சிவகங்கை நகர்மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த், துணைத்தலைவர் கார்கண்ணன், துணை பதி வாளர்கள் பாலசந்தர், நாக ராஜன், குழந்தைவேல், ஸ்ரீமான், பாரதி, சேதுராமன், குமரன், காஞ்சிரங்கால்

    ஊராட்சி மன்றத்தலைவர் கே.எஸ்.எம்.மணிமுத்து மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் (பொ) மாரிச்சாமி, நுகர்பொ ருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அருண்பிரசாத், கூட்டுறவு சார்பதிவாளர், செயலாட்சியர்கள் பொன் னையா, சரவணன், சிவ கங்கை கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் (பொ) பொ.சக்திவேல் மற்றும் உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களை சார்ந்த தலைவர்கள் மற்றும் உறுப் பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டுறவு அமைப்புகளின் பங்கு என்னும் முதன்மை மைய கருப்பொருளை அடிப்படையாக கொண்டு இன்று முதல் வருகிற 20-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் நாமக்கல் மாவட்டத்தில் கொண்டாடப்பட உள்ளது.
    • கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, வினாடி வினா போட்டி நடத்தப்பட உள்ளது.

    நாமக்கல்:

    கூட்டுறவுத்துறை சார்பில் 70-வது அனைந்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு என்னும் முதன்மை மைய கருப்பொருளை அடிப்படையாக கொண்டு இன்று முதல் வருகிற 20-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் நாமக்கல் மாவட்டத்தில் கொண்டாடப்பட உள்ளது.

    இது தொடர்பாக மண்டல இணைப்பதிவாளர் செல்வகுமரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.

    விழாவின் முதல் நாளான இன்று (14-ந்தேதி) நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் கூட்டுறவு கொடியேற்றி, கூட்டுறவு வார விழா உறுதிமொழி எடுத்துக் கொண்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.

    2-வது நாளான நாளை (15-ந்தேதி) திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் கூட்டுறவு விற்பனை மேளா நடத்தப்பட உள்ளது. இதேபோல் 16-ந்தேதி ஆர்.பட்டணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் உறுப்பினர் சந்திப்பு முகாம் நடத்தப்படுகிறது.

    மேலும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, வினாடி வினா போட்டி நடத்தப்பட உள்ளது. 17-ந்தேதி நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் மருத்துவ முகாம் மற்றும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நாமக்கல் வட்டார அலுவலக வளாகத்தில் ரத்ததான முகாம் நடத்தப்பட உள்ளது.

    18-ந்தேதி ஆன்றாப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கால்நடை மருத்துவ முகாம், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நாமக்கல் வட்டார அலுவலக வளாகத்தில் கருத்தரங்கமும், 19-ந்தேதி திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெற உள்ளது. விழா நிறைவு நாளான 20-ந்தேதி மாவட்ட அளவிலான கூட்டுறவு வார விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் கூட்டுறவு நிர்வாகிகள், பணியாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம்
    • கலெக்டர், சி.என்.அண்ணாதுரை எம்.பி வழங்கினர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட அளவிலான 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருப்பத்தூர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சி.பெ.முருகேசன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக இணைப்பதிவாளர், முதுநிலை மண்டல மேலாளர் திருகுண ஐயப்பதுரை உறுதிமொழி வாசித்தார்.

    வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குநர் வ.சி.கோமதி திட்ட விளக்கவுரை ஆற்றினார்.

    விழாவில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 1,625 விவசாயிகளுக்கு ரூ.11 கோடியே 80 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பில் விவசாய கடனுதவியும், கால்நடை பராமரிப்பிற்கு 489 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 77 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் கடனுதவியும், மகளிர் சுயஉதவிக்குழுக்கடன் 72 குழுக்களுக்கு ரூ.3 கோடியே 25 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் கடனுதவியும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.50 லட்சம் கடனுதவியும், தாட்கோவின் மூலமாக 2 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் கடனுதவியும், 2 பயனாளிகளுக்கு டாப்செட்கோ ரூ.2 லட்சம் மதிப்பில் கடனதவிகள் என மொத்தம் 2,200 பயனாளிகளுக்கு ரூ.16 கோடியே 97 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிகளையும், சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு கேடயங்களையும் கலெக்டர் அமர்குஷ்வாஹா, சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோர் வழங்கி பேசினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன், துணைப்பதிவாளர்கள் சம்பத், சுவாதி, கூட்டுறவு சார்பதிவாளர்கள் மோகன், ரவிசந்திரன், தர்மேந்திரன், பூவண்ணன், சண்முகம், பிரபாகரன், ராமசந்திரன், செந்தில், சென்னம்மாள், திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய எஸ்.தண்டபாணி, நகரமன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், ஒன்றியக்குழு தலைவர்கள் விஜயா, சத்யா, சங்கீதா பாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைபதிவாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    • அமைச்சர் எ.வ.வேலு சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம் வழங்குகிறார்
    • அரசு அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

    விழாவிற்கு திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்குகிறார். சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலை வகிக்கிறார்.

    விழாவில் பொதுப்பணி துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள் மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

    விழாவில் எம். பி.அண்ணாதுரை, எம்.எல்.ஏ.க்கள் சரவணன், கிரி, அம்பேத்குமார், ஜோதி, அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கூட்டுறவு நிறுவனங்களின் தலைவர்கள் இயக்குனர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கலந்து கொள்கின்றனர்.

    • 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நவம்பர் 14 முதல் 20 வரை நடைபெறுகிறது.
    • மேலாண்மை இயக்குநருமான மீராபாய் மற்றும் சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் ஆகியோர் கூட்டுறவு கொடியேற்றி விழாவினைதொடங்கி வைத்தார்கள்.

    சேலம்:

    69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நவம்பர் 14 முதல் 20 வரை நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்ச்சியாக சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்ற கூட்டுறவு கொடியேற்று விழாவில் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான மீராபாய் மற்றும் சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் ஆகியோர் கூட்டுறவு கொடியேற்றி விழாவினைதொடங்கி வைத்தார்கள்.

    சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் கூட்டுறவு உறுதிமொழியினை வாசிக்க அனைவரும் கூட்டுறவு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் மரக்கன்று நடும்விழா நடைபெற்றது. இதில் சேலம் சரக துணைப்பதிவாளர் முத்துவிஜயா, ஓமலூர் சரக துணைப்பதிவாளர் சுவேதா, இணைப்பதிவாளர் அலுவலகம் பணியாளர் அலுவலர் மற்றும் துணைப்பதிவாளர் குணசேகர், பால்வளத்துறை துணைப்பதிவாளர் செந்தில்குமார், செவ்வாய்பேட்டை நகர கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளர் கிருஷ்ணன், டான்பெட் துணைப்பதிவாளர் பரமசிவம், மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலர் ராஜவேலன், வங்கியின் பொது மேலாளர் ரவிச்சந்திரன், வங்கி உதவி பொது மேலாளர்கள், மேலாளர்கள் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், அனைத்து கூட்டுறவு சங்க செயலாளர்கள், பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ×