search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    70-வது கூட்டுறவு வார விழா
    X

    விழாவில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு கடனுத விகளை வழங்கிய காட்சி. அருகில் கலெக்டர் ஆஷா அஜித் மற்றும் கூட்டுறவுத்துறை அதி காரிகள் உள்ளனர்.

    70-வது கூட்டுறவு வார விழா

    • சிவகங்கையில் நடந்த 70-வது கூட்டுறவு வார விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவிகள், சிறு வணிகக்கடன் திட்டம் போன்ற திட்டங்கள் வழங்கப்படுவதாக விழாவில் அமைச்சர் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சிக்குட் பட்ட தனியார் மகாலில், கூட்டுறவுத்துறையின் சார்பில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். அதில் கூட்டுறவுத்துறையின் வாயிலாக பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று உரிய பயன்களை வழங்குவ தற்கென நடவடிக்கையும், மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான கடனுதவிகள் மட்டு மன்றி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி கடன்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு தொழில்கள் துவங்கி பயன்பெறும் வகையில், கடனுதவிகள், சிறு வணிகக்கடன் திட்டம் போன்ற திட்டங்கள் வழங்கப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்ற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் அனைத்து கூட்டுறவு நிறுவ னங்களின் மூலம் 71,456 உறுப்பினர்களுக்கு ரூ.374.18 கோடி மதிப்பீட்டில் பயிர்கட னுதவியும், 7,853 உறுப்பி னர்களுக்கு ரூ.48.35 கோடி மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடனுதவியும், 2,47, 920 உறுப்பினர்களுக்கு ரூ.1,519.03 கோடி மதிப்பீட் டில் நகைக்கடனுதவியும், 2,384 குழுக்களுக்கு ரூ.134.98 கோடி மதிப்பீட்டில் சுய உதவிக்குழு கடனுதவியும், 1,368 உறுப்பினர்களுக்கு ரூ.4.76 கோடி மதிப்பீட்டில் சிறுவணிக கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

    மொத்தம் 4,18,657 நபர் களுக்கு ரூ.3,537.12 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் தற்சமயம் வரை கூட்டுறவுத் துறையின் சார்பில் மாவட் டம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளது.

    2 பயனாளிகளுக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணைகளை யும், 1 பயனாளிக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் காப் பீட்டு தொகைக்கான காசோ லையினையும் என மொத் தம் 3,171 பயனாளிகளுக்கு ரூ.34,88,51,260 மதிப்பீட்டி லான நலத்திட்ட உதவிகள் இவ்விழாவின் வாயிலாக வழங்கப்படவுள்ளது என் றார்.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ. ஜூனு, சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் கே.சி.ரவிச்சந்திரன், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மஞ்சுளா பால சந்தர், சிவகங்கை நகர்மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த், துணைத்தலைவர் கார்கண்ணன், துணை பதி வாளர்கள் பாலசந்தர், நாக ராஜன், குழந்தைவேல், ஸ்ரீமான், பாரதி, சேதுராமன், குமரன், காஞ்சிரங்கால்

    ஊராட்சி மன்றத்தலைவர் கே.எஸ்.எம்.மணிமுத்து மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் (பொ) மாரிச்சாமி, நுகர்பொ ருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அருண்பிரசாத், கூட்டுறவு சார்பதிவாளர், செயலாட்சியர்கள் பொன் னையா, சரவணன், சிவ கங்கை கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் (பொ) பொ.சக்திவேல் மற்றும் உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களை சார்ந்த தலைவர்கள் மற்றும் உறுப் பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×