search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் கடனுதவிகள் வழங்க நடவடிக்கை-அமைச்சர் தகவல்
    X

    பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். அருகில் கலெக்டர் ஆஷா அஜித், ஒன்றிய தலைவர் சொர்ணம் அசோகன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரஸ்வதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார் மற்றும் பலர் உள்ளனர்.

    ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் கடனுதவிகள் வழங்க நடவடிக்கை-அமைச்சர் தகவல்

    • கூட்டுறவுத்துறை சார்பில் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் கடனுதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • இந்த தகவலை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே தளக்காவூர் கிராமத்தில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கலெக்டர் ஆஷாஅஜித் முன்னிலை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தளக்காவூர் ஊராட்சியை பொறுத்தவரை மக்களின் வரிப்பணம் ரூ.21,17,000/- தொகை உள்ளது. இது தவிர அரசின் சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கென ரூ.3.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் நடப்பாண்டிற்கென ரூ.5.14 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் பயிர் கடனுதவி, மகளிர் சுய உதவிக்குழு கடனுதவி, கால்நடை பராமரிப்பு கடனுதவி, நகை கடனுதவி, தென்னை மற்றும் வாழை பராமரிப்பு கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் கூட்டுறவுத்துறையின் சார்பில் வழங்கப் பட்டுள்ளது. இதில் ரூ.2.27 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவியும் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. அதில் 139 நபர்களுக்கு ரூ.7.25 லட்சம் மதிப்பீட்டிலான பயிர் கடனுதவிகள், 63 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை சார்ந்த 789 நபர்களுக்கு ரூ.1.89 கோடி மதிப்பீட்டிலான கடனுதவியும், 105 நபர்களுக்கு ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் நகை கடனுதவியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    மேலும் கூட்டுறவுத்துறையின் சார்பில் பல்வேறு கடனுதவிகளை வழங்குவதற்கென கடந்தாண்டு ரூ.12 ஆயிரம் கோடி இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டது.ஆனால் அதையும் தாண்டி தமிழகம் முழுவதும் 13,500 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டது.

    இதேபோன்று நடப்பாண்டிலும் தமிழகம் முழுவதும் ரூ.14 ஆயிரம் கோடி வழங்கிட இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதையும் தாண்டி ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் பல்வேறு கடனுதவிகள் வழங்கிட துறை ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கல்லல் ஊராட்சி ஒன்றிய தலைவர் சொர்ணம் அசோகன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரஸ்வதி, உதவி இயக்குநர் (ஊராட்சி கள்) குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சரி லெட்சுமணன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆரோக்கியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×