search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ministerial Information"

    • கூட்டுறவுத்துறை சார்பில் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் கடனுதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • இந்த தகவலை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே தளக்காவூர் கிராமத்தில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கலெக்டர் ஆஷாஅஜித் முன்னிலை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தளக்காவூர் ஊராட்சியை பொறுத்தவரை மக்களின் வரிப்பணம் ரூ.21,17,000/- தொகை உள்ளது. இது தவிர அரசின் சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கென ரூ.3.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் நடப்பாண்டிற்கென ரூ.5.14 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் பயிர் கடனுதவி, மகளிர் சுய உதவிக்குழு கடனுதவி, கால்நடை பராமரிப்பு கடனுதவி, நகை கடனுதவி, தென்னை மற்றும் வாழை பராமரிப்பு கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் கூட்டுறவுத்துறையின் சார்பில் வழங்கப் பட்டுள்ளது. இதில் ரூ.2.27 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவியும் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. அதில் 139 நபர்களுக்கு ரூ.7.25 லட்சம் மதிப்பீட்டிலான பயிர் கடனுதவிகள், 63 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை சார்ந்த 789 நபர்களுக்கு ரூ.1.89 கோடி மதிப்பீட்டிலான கடனுதவியும், 105 நபர்களுக்கு ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் நகை கடனுதவியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    மேலும் கூட்டுறவுத்துறையின் சார்பில் பல்வேறு கடனுதவிகளை வழங்குவதற்கென கடந்தாண்டு ரூ.12 ஆயிரம் கோடி இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டது.ஆனால் அதையும் தாண்டி தமிழகம் முழுவதும் 13,500 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டது.

    இதேபோன்று நடப்பாண்டிலும் தமிழகம் முழுவதும் ரூ.14 ஆயிரம் கோடி வழங்கிட இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதையும் தாண்டி ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் பல்வேறு கடனுதவிகள் வழங்கிட துறை ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கல்லல் ஊராட்சி ஒன்றிய தலைவர் சொர்ணம் அசோகன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரஸ்வதி, உதவி இயக்குநர் (ஊராட்சி கள்) குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சரி லெட்சுமணன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆரோக்கியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 1½ லட்சம் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா புத்தகங்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
    • திருகோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாடபுத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.

    சிவகங்கை

    தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளே மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகே உள்ள திருகோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாடபுத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் மாணவ-மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்களை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ-மாணவிகள் தரமான கல்வி பெற பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு சீருடை, காலணி, புத்த கப்பை, பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், வண்ணப் பென்சில், வண்ணக்கிரையான்கள், சதுரங்கப்பலகை, கணித உபகரணப்பெட்டி, மிதிவண்டி மற்றும் மடிக்கணினி போன்ற பல்வேறு வகையான நலத்திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் 1,117 அரசுப்பள்ளிகள் மற்றும் 234 அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 1,351 பள்ளிகள் உள்ளன. 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 1லட்சத்து 49 ஆயிரத்து 681 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநான், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சண்முகவடிவேல், மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ரவி, திருக்கோஷ்டியூர் ஊராட்சி மன்றத்தலைவர் சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராமேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×