search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் தகவல்"

    • கூட்டுறவுத்துறை சார்பில் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் கடனுதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • இந்த தகவலை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே தளக்காவூர் கிராமத்தில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கலெக்டர் ஆஷாஅஜித் முன்னிலை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தளக்காவூர் ஊராட்சியை பொறுத்தவரை மக்களின் வரிப்பணம் ரூ.21,17,000/- தொகை உள்ளது. இது தவிர அரசின் சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கென ரூ.3.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் நடப்பாண்டிற்கென ரூ.5.14 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் பயிர் கடனுதவி, மகளிர் சுய உதவிக்குழு கடனுதவி, கால்நடை பராமரிப்பு கடனுதவி, நகை கடனுதவி, தென்னை மற்றும் வாழை பராமரிப்பு கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் கூட்டுறவுத்துறையின் சார்பில் வழங்கப் பட்டுள்ளது. இதில் ரூ.2.27 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவியும் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. அதில் 139 நபர்களுக்கு ரூ.7.25 லட்சம் மதிப்பீட்டிலான பயிர் கடனுதவிகள், 63 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை சார்ந்த 789 நபர்களுக்கு ரூ.1.89 கோடி மதிப்பீட்டிலான கடனுதவியும், 105 நபர்களுக்கு ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் நகை கடனுதவியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    மேலும் கூட்டுறவுத்துறையின் சார்பில் பல்வேறு கடனுதவிகளை வழங்குவதற்கென கடந்தாண்டு ரூ.12 ஆயிரம் கோடி இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டது.ஆனால் அதையும் தாண்டி தமிழகம் முழுவதும் 13,500 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டது.

    இதேபோன்று நடப்பாண்டிலும் தமிழகம் முழுவதும் ரூ.14 ஆயிரம் கோடி வழங்கிட இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதையும் தாண்டி ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் பல்வேறு கடனுதவிகள் வழங்கிட துறை ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கல்லல் ஊராட்சி ஒன்றிய தலைவர் சொர்ணம் அசோகன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரஸ்வதி, உதவி இயக்குநர் (ஊராட்சி கள்) குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சரி லெட்சுமணன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆரோக்கியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அருப்புக்கோட்டைக்கு புதிய தாமிரபரணி கூட்டு குடிநீர் டிசம்பர் முதல் வழங்கப்படும்.
    • இந்த தகவலை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    அருப்புக்கோட்டை

    அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அருப்புக்கோட்டை விருதுந கர், சாத்தூர் ஆகிய நகராட்சி களுக்கு புதிய தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகி ன்றன. இதில் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு மட்டும் .226 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தாமிரபரணி குடிநீர் திட்டம் மூலம் சீவலப்பேரியிலிருந்து தண்ணீர் சேகரிக்கப்பட்டு பகிர்மான குழாய்கள் மூலம் அருப்புக்கோட்டைக்கு கொண்டு வரப்படும். இதற்காக அருப்புக் கோட்டை நகர் பகுதிகளில் பகிர்மான குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்க வாய்ப்பு உள்ளது. இதுவரை 90 சதவீத பணிகள் முடி வடைந்துள்ளன. நவம்பர் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிந்து விடும். அதன் பின்னர் டிசம்பர் மாதத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படும். மேலும் வைகையில் இருந்தும் குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு விநியோ கம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வைகை வறண்ட நிலையில் உள்ளதால் வைகையில் இருந்து வரும் தண்ணீரின் தன்மை குறைந்து சுவை யற்ற நிலையில் வருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    அந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் வைகை யில் இருந்து அருப்புக் கோட்டைக்கு குழாய்கள் மூலம் கொண்டு வரும் குடிநீரை கட்டங்குடியில் ரூ. 6 கோடி செலவில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீரை சுத்திகரிப்பு செய்து அதன்பின் அருப்புக்கோட்டைக்கு வினியோகம் செய்வதற்கு ஏற்பாடு நடந்து வருகிறது.

    பழைய தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வல்லநாட்டில் இருந்து அருப்புக்கோட்டை வரை 19 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட குழாய்க ளில் ஆங்காங்கே அடிக்கடி உடைப்புகள் ஏற்பட்டு குடிதண்ணீர் வீணாகி வருகிறது. அதையும் நிவர்த்தி செய்யும் வகையில் புதிய குழாய்கள் அமைக்க குடிநீர் வடிகால் வாரியத்தி னரிடம் திட்ட மதிப்பீடு தயார் செய்ய கூறியுள்ளேன். திட்ட மதிப்பீடு தயார் செய்தவுடன் அரசுக்கு அனுப்பி நிதியை பெற்று குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்படும். மேலும் கட்டங்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வரை பழைய இரும்பு குழாய்களுக்கு பதிலாகரூ. 6 கோடி செலவில் டி.ஐ.பைப் பதிக்கப்பட உள்ளது.

    தற்போது தாமிரபரணி, வைகை ஆகிய 2 குடிநீர் திட்டங்களிலும் குறைந்த அளவே குடிநீர் பெறப்ப டுவதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நகர் மன்ற தலைவர் சுந்தரலட்சுமி, ஆணையாளர், அசோக்குமார், முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி மற்றும் தி.மு.க. நகர செயலாளர் ஏ.கே.மணி உடனிருந்தனர்.

    • 278 பணி யாளர்களுக்கு ரூ.71.55 கோடி பணிக்கொடைக்கான காசோ லைகள் வழங்கப்பட்டது.
    • புதிய டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் நியமிக்க வும் அரசாணை வழங்கப் பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், ஓய்வு பெற்ற போக்குவரத்து பணி யாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது. இதனை அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர். தொடர்ந்து அமைச்சர் பொன்முடி கூறுகையில், கடந்த மே 2020 முதல் நவம்பர் 2022 வரை பணிபுரிந்து ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற, இறந்த பணியாளர் என மொத்தம் 8,361 பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட பணப்பலன் களான ரூ.1,582 கோடியை வழங்கிட முதல்- அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

    விழுப்புரம் கோட்டத்தில், 4.11.2022 அன்று முதற் கட்டமாக ஓய்வுபெற்ற 137 பணியாளர்களுக்கு ரூ.18.63 கோடியும், 2-வது கட்டமாக 200 பேருக்கு ரூ.30.63 கோடியும் வழங்கப்பட்டது. தற்போது விழுப்புரம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மண்டலங்களில் ஓய்வு ெபற்ற பணியாளர்கள் மற்றும் இறந்த பணியாளர்களின் - வாரிசுதாரர்கள் என மொத்தம் 278 பணி யாளர்களுக்கு ரூ.71.55 கோடி பணிக்கொடைக்கான காசோ லைகள் வழங்கப்பட்டது, என்றார்.

    போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசுகை யில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தான், போக்குவரத்துத்துறையை ஏற்படுத்தினார். இந்தியாவிலேயே 21,000-க்கும் அதிகமான பஸ்கள் இயங்கும் நிலை தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. போக்குவரத்துத்துறை ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று பயனடைந்து வருகிறார்கள். தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலின், ஆட்சி பொறுப்பேற்றவுடன் போக்குவரத்துத்துறையை சீரமைத்து, அனைத்து பணியாளர்களும் மாதம் முதல் தேதியன்றே ஊதியம் பெறுகின்ற நிலையை உருவாக்கி கொடுத்தார். மேலும், பொதுமக்கள் நலனை கருத்திற்கொண்டு பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் உள்ளார். மகளிர் கட்டணமில்லா பஸ் சேவை வழங்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஆண்டொன்றுக்கு ரூ.2,500 கோடி நிதியுதவியை முதல்-அமைச்சர் வழங்கி வருகிறார். புதியதாக பஸ்கள் வாங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கும், கும்பகோணம் அரசு  போக்குவரத்து கழகத்திற்கும் புதிய டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் நியமிக்க வும் அரசாணை வழங்கப் பட்டுள்ளது, என்றார். இதில் ரவிகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 1½ லட்சம் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா புத்தகங்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
    • திருகோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாடபுத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.

    சிவகங்கை

    தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளே மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகே உள்ள திருகோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாடபுத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் மாணவ-மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்களை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ-மாணவிகள் தரமான கல்வி பெற பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு சீருடை, காலணி, புத்த கப்பை, பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், வண்ணப் பென்சில், வண்ணக்கிரையான்கள், சதுரங்கப்பலகை, கணித உபகரணப்பெட்டி, மிதிவண்டி மற்றும் மடிக்கணினி போன்ற பல்வேறு வகையான நலத்திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் 1,117 அரசுப்பள்ளிகள் மற்றும் 234 அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 1,351 பள்ளிகள் உள்ளன. 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 1லட்சத்து 49 ஆயிரத்து 681 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநான், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சண்முகவடிவேல், மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ரவி, திருக்கோஷ்டியூர் ஊராட்சி மன்றத்தலைவர் சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராமேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதி மக்களுக்கும் காவிரி குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
    • இந்த தகவலை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு சாத னைக்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

    இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்று 981 பயனாளி களுக்குரூ.4 கோடியே 17 லட்சத்து 54 ஆயிரத்து 259 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் முன்னேறிய மாவட்டங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இதற்கு அடித்த ளமாக இந்தப் பகுதிக்கு முதன்முதலாக காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் அமைத்து பொது மக்க ளுக்கான குடிநீர் தேவையை நிறைவேற்றியவர் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி.

    அதனைத் தொடர்ந்து தற்பொழுது ராமநாதபுரம் மாவட்டமக்களின் குடிநீர் தேவையை முழுமையாக நிறைவேற்றித் தருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் முன்வைத்த கோரிக்கை களை ஏற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் கரூர் மாவட்டம், நஞ்சை புகளூர் காவிரி ஆற்றுப் பகுதியில் இருந்து ரூ.2 ஆயிரத்து 400 கோடியில் தனித்திட்டமாக பைப் லைன் பொருத்தப்பட்டு மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதி மக்களுக்கும் குடி தண்ணீர் வழங்கும் வகையில் பணிகள் தொடங்க உள்ளன.

    மேலும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 110 சாலைப்பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு தேவையான திட்டங்கள் அவ்வப்போது அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

    உங்களின் தேவைகளை எங்களிடம் தெரிவியுங்கள். நாங்கள் நிறைவேற்றி தர தயாராக உள்ளோம். முதல்-அமைச்சர் தெரி விப்பது போல் மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். மக்களுக்காக நம் முதல்வர் செயல்பட்டு வருகிறார். அனைவரும் ஒன்று கூடி முதல்-அமைச்சருக்கு உறுதுணையாக இருப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், திருப்புல்லாணி யூனியன் தலைவர் புல்லாணி, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுச்சாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், வருவாய் கோட்டாட்சியர் கோபு, தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்பு திட்டம்) மாரிசெல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகாசியில் ரூ.150 கோடியில் நவீன வசதிகளுடன் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.
    • இந்த தகவலை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், ஆமத்தூரில் பட்டாசு தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் குறித்த கருத்தரங்கு நடந்தது.தொழிலாளர் நலத்துறை முதன்மைச் செயலாளர் அதுல் ஆனந்த் தலைமை தாங்கினார்.

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுதீன் விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன், ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் முன்னிலை வகித்தர்.

    அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன் ஆகியோர் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். இதில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் மூலம் தொழிற்சாலையில் இருந்து மீட்கப்பட்ட 5 வளர் இளம் பருவத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மதிப்பிலும், 1 வளர் இளம் பருவத் தொழிலாளிக்கு ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 45ஆயிரம் மதிப்பிலான மறுவாழ்வு நிதிக்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கினர்.

    அமைச்சர் கணேசன் பேசியதாவது:-

    எதிர் காலத்தில் பட்டாசு விபத்துக்களை தடுக்கும் வகையில் விரைவான நடவடிக்கை எடுப்பதற்கு கலெக்டர் தலைமையிலான குழுக்கள் விரைந்து செயல்படும். தமிழ்நாட்டிலேயே விருது நகர் மாவட்டத்தில் அதிக பட்டாசு தொழிற்சாலைகள் இருக்கின்றன. சுமார் 56 ஆயிரம் பட்டாசுத் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள்.

    விருதுநகர் மாவட்டத்தில் ஏற்படும் பட்டாசு விபத்துக்களை தடுப்பது மட்டுமல்லாமல், தொழிலாளர்களை காப்பற்றுவதற்கும் சிவகாசியில் அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி சுமார் ரூ.150 கோடி மதிப்பீட்டில், நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.

    இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி மத்திய அரசிடம் ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

    விபத்தில்லா பட்டாசு தொழில்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, சென்னையில் ஆய்வு கூட்டம் நடந்தது. அதன் விளைவாக இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது.ஆபத்து என்று தெரிந்தும் மக்கள் வறுமை காரணமாக இந்த தொழிலை செய்து வருகின்றனர். அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையையும் தமிழக அரசுக்கும், பட்டாசு தொழிற்சாலைகள் உரிமையாளர்களுக்கும் உண்டு.

    இதுவரை தொழிலா ளர்களுக்கு பயிற்சி நிறுவனம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் 35 ஆயிரத்து 961 தொழிலாளர்களுக்கு, எவ்வாறு பாதுகாப்பாக பணியாற்றவேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்பட்டு ள்ளது. பட்டாசு விபத்து குறித்து 1241 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 800 பட்டாசு ஆலைகளில் இதுவரை ஒரு விபத்து கூட ஏற்படவில்லை. விபத்தில்லா பட்டாசு நடக்கும் ஆலைகள் பின்பற்றும் வழிமுறைகளை மற்ற தொழிற்சாலைகள் வழிகாட்டியாக கொண்டு செயல்பட்டு விபத்துக்களை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இரண்டாம் தவணை தடுப்பூசி, 79.88 சதவீதம் பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசியை பொறுத்தவரை 13.37 சதவீதம் பேருக்கும் போடப்பட்டிருக்கிறது.
    • தருமபுரி மாவட்டத்தில், சுமார் 7.78 லட்சம் நபர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டி இருக்கின்றது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாகனம்பட்டி காரிமங்கலம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற 34 வது மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

    பின்னர் இதுகுறித்து அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

    தருமபுரி மாவட்டத்தை பொறுத்தவரை, தடுப்பூசி போடும் பணிகளில், பதினெட்டு வயதை தாண்டியவர்களுக்கான முதல் தவணை தடுப்பூசி, 90.73 சதவீதம் பேருக்கு போடப்பட்டிருக்கிறது.

    இரண்டாம் தவணை தடுப்பூசி, 79.88 சதவீதம் பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசியை பொறுத்தவரை 13.37 சதவீதம் பேருக்கும் போடப்பட்டிருக்கிறது. தருமபுரி மாவட்டத்தில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை முதல் தவணை தடுப்பூசி, 1,21,963 நபர்களுக்கும், இரண்டாம் தவணை, 1,05,153 நபர்களுக்கும், முன்னெச்சரிக்கை தவணை, 5,51,473 நபர்களுக்கும் ஆக மொத்தம் சுமார் 7.78 லட்சம் நபர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டி இருக்கின்றது.

    தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளின் நலனுக்காக "தமிழ்நாடு ஒருங்கிணைந்த சிறுநீரக பராமரிப்பு திட்டத்தை'' மேம்படுத்தும் வகையில் புதிய இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு சிகிச்சைக்காக ரூபாய் 13.00 லட்சம் மதிப்பீட்டில் நவீன உபகரணங்கள் வழங்கப்படும். இம்மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொலை மருத்துவ சேவை துவங்கப்படும்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம். பி.சுப்பிரமணியம், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.அமுதவள்ளி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.கிருஷ்ணமூர்த்தி காரிமங்கலம் பேரூராட்சித்தலைவர் பி.சி.ஆர்.மனேகரன், காரிமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குப்பையில்லா தமிழகத்தை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்
    • நம்மால் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியவில்ல . இது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பிளாஸ்டிக் மக்குவதில்லை.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் இன்று (21-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று சிறப்பு சுகாதார முகாமான 'நம்ம ஊரு சூப்பரு' திட்ட செயல்பாட்டினை தொடங்கி வைத்து பேசியதாவது:

    நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மாஸ் கிளீனிங் என்ற திட்டம் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் தன்னார்வலர்கள், நகர்ப்புற உள்ளாட்சி தூய்மை பணியாளர்கள் சுய உதவி குழுக்கள் இணைந்து மாஸ் கிளீனிங் செய்கிறார்கள். மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் பிரித்து பெறப்படுகிறது.

    அந்த வகையில் கிராமப் பகுதிகளும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று ஊரகத் துறை சார்பில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது இந்த திட்டத்தின் நோக்கமானது ஊரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.குடிநீரில் கழிவுகள் கலக்கக்கூடாது.

    சுத்தமான தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதாகும். கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக பப்பாளி மற்றும் முருங்கைக் கன்றுகளை இங்கு வழங்குகிறோம்.

    நம்மால் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியவில்ல . இது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பிளாஸ்டிக் மக்குவதில்லை. இந்தியாவில் இந்து நகரில் நகராட்சி துறை சார்பில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத குப்பைகளை எரிபொருளாகவும் மாற்றுகிறார்கள்.

    இந்த திட்டத்தை அறிந்து கொள்ள நமது பேரூராட்சி தலைவர்கள், அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் சென்று திரும்பி இருக்கிறார்கள். அந்த முறை வரும்போது குப்பைத்தொட்டியே இருக்காது.

    உற்பத்தியாகும் இடத்திலேயே அதனை பிரித்து மக்காத குப்பைகளை மின்சாரம் தயாரிக்கவும், மக்கும் குப்பைகளை உரமாக தயாரித்து உங்களுக்கே வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதில் குப்பைக்கு பணம் தந்து பெற்று விடுகிறார்கள். இன்றைக்கு தமிழகத்தில் நகர்ப்புறங்களில் 55 சதவீத மக்கள் வசிக்கிறார்கள். இருந்த போதிலும் ஊரகத் துறைக்கு தமிழக அரசு ரூ.26 ஆயிரம் கோடி நிதியினை ஒதுக்கியுள்ளது.

    கிராமப்புறங்களில் ஜல் ஜீவன் திட்டத்தில் வீடு தோறும பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.40 ஆயிரம் கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.பழனியாண்டி, ந.தியாகராஜன், ப.அப்துல்சமது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வே.பிச்சை, ஒன்றியக் குழுத் தலைவர் ச.துரைராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வளர்ச்சித் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • காமில் சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட நகரங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றன.
    • முகாமில் 2,960 போ் பல்வேறு பணிகளுக்கு தோ்வு செய்யப்பட்டனா். இவா்களில் 2,401 பேருக்குப் பணி நியமன ஆணைகள் உடனடியாக வழங்கப்பட்டன.

    காங்கயம்:

    திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியன சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் காங்கயத்தில் நடைபெற்றது. இம்முகாமில் சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட நகரங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றன. படித்த இளைஞா்கள், இளம்பெண்கள் என 11,306 போ் கலந்து கொண்டனா்.

    முகாமில் 2,960 போ் பல்வேறு பணிகளுக்கு தோ்வு செய்யப்பட்டனா். இவா்களில் 2,401 பேருக்குப் பணி நியமன ஆணைகள் உடனடியாக வழங்கப்பட்டன. இரண்டாம் கட்டத்தோ்வுக்கு 559 போ் தகுதி பெற்றனா். திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் 260 நபா்கள் தோ்வு பெற்றனா். வெளிநாடுகளில் பணிபுரிய 187 போ் தோ்வு பெற்றனா்.

    வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு பெற்றவா்களுக்குப் பணி நியமன ஆணைகளை வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.

    நிகழ்ச்சியில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் பேசியதாவது:-

    படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவோம் என்ற உறுதிமொழியோடுதான் இந்த அரசு பொறுப்பேற்றுள்ளது. அரசுத் துறையின் சாா்பில் பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வந்தாலும், தனியாா் துறையிலும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும் என்பதற்காக தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 62 இடங்களில் தனியாா் துறையினா் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி 90,643 இளைஞா்கள், இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தந்துள்ளோம்.

    படித்த இளைஞா்களுக்காக தனியாா் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, திறன் பயிற்சி அளித்து, அந்த நிறுவனமே அவா்களுக்கு வேலை தரக்கூடிய திட்டத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த முகாமில் வேலை கிடைக்காத இளைஞா்களுக்கு அடுத்த முகாமில் வேலைவாய்ப்பை உருவாக்கி, வேலை இல்லை என்ற நிலை தமிழ்நாட்டில் இல்லை என்ற உன்னத நிலையை உருவாக்குவோம் என்றாா்.

    நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் கொ.வீரராகவ ராவ், மாவட்ட கலெக்டர் வினீத், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மண்டல இணை இயக்குநா் ஞானசேகரன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலா் சுரேஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    ×