search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new buses"

    • 278 பணி யாளர்களுக்கு ரூ.71.55 கோடி பணிக்கொடைக்கான காசோ லைகள் வழங்கப்பட்டது.
    • புதிய டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் நியமிக்க வும் அரசாணை வழங்கப் பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், ஓய்வு பெற்ற போக்குவரத்து பணி யாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது. இதனை அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர். தொடர்ந்து அமைச்சர் பொன்முடி கூறுகையில், கடந்த மே 2020 முதல் நவம்பர் 2022 வரை பணிபுரிந்து ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற, இறந்த பணியாளர் என மொத்தம் 8,361 பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட பணப்பலன் களான ரூ.1,582 கோடியை வழங்கிட முதல்- அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

    விழுப்புரம் கோட்டத்தில், 4.11.2022 அன்று முதற் கட்டமாக ஓய்வுபெற்ற 137 பணியாளர்களுக்கு ரூ.18.63 கோடியும், 2-வது கட்டமாக 200 பேருக்கு ரூ.30.63 கோடியும் வழங்கப்பட்டது. தற்போது விழுப்புரம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மண்டலங்களில் ஓய்வு ெபற்ற பணியாளர்கள் மற்றும் இறந்த பணியாளர்களின் - வாரிசுதாரர்கள் என மொத்தம் 278 பணி யாளர்களுக்கு ரூ.71.55 கோடி பணிக்கொடைக்கான காசோ லைகள் வழங்கப்பட்டது, என்றார்.

    போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசுகை யில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தான், போக்குவரத்துத்துறையை ஏற்படுத்தினார். இந்தியாவிலேயே 21,000-க்கும் அதிகமான பஸ்கள் இயங்கும் நிலை தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. போக்குவரத்துத்துறை ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று பயனடைந்து வருகிறார்கள். தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலின், ஆட்சி பொறுப்பேற்றவுடன் போக்குவரத்துத்துறையை சீரமைத்து, அனைத்து பணியாளர்களும் மாதம் முதல் தேதியன்றே ஊதியம் பெறுகின்ற நிலையை உருவாக்கி கொடுத்தார். மேலும், பொதுமக்கள் நலனை கருத்திற்கொண்டு பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் உள்ளார். மகளிர் கட்டணமில்லா பஸ் சேவை வழங்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஆண்டொன்றுக்கு ரூ.2,500 கோடி நிதியுதவியை முதல்-அமைச்சர் வழங்கி வருகிறார். புதியதாக பஸ்கள் வாங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கும், கும்பகோணம் அரசு  போக்குவரத்து கழகத்திற்கும் புதிய டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் நியமிக்க வும் அரசாணை வழங்கப் பட்டுள்ளது, என்றார். இதில் ரவிகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பி.ஆர்.டி.சி. ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
    • நிரந்தர ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளாக போனஸ் வழங்கவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வேலை ய்யன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுவை சாலை போக்கு வரத்து கழக ஊழியர்களுக்கு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் 10 ஆண்டுகள் பணி முடித்த ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரமும், போனஸ் தொகையும் வழங்கப்பட வில்லை. நிரந்தர ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளாக போனஸ் வழங்கவில்லை.

    உயர்த்தப்பட்ட டி.ஏ. தொகை 41 சதவீதம், 7-வது சம்பள கமிஷன் ஊதியக்குழு பரிந்துரைக்கான சம்பளம் மற்றும் 2 ஆம்கட்ட எம்.ஏ.சி.பி. 96 ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.

    4 பிராந்தியங்களுக்கும் சேர்த்து மொத்தம் 18 பஸ்கள் நிறுத்தப்பட்டு ள்ளன. அவை களுக்கு புதிய வாகனம் ஏற்பாடு செய்து உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 8 வண்டிகளுக்கு ரீ-பாடிகட்ட வேண்டும். கடந்தாண்டு மற்றும் இந்தாண்டு சேர்த்து சுமார் ரூ.27 கோடி அரசு நிதி ஒதுக்கியும் நிர்வாகம் எந்தவித பணியையும் அதற்காக செய்யாமல் இருப்பது கவலை அளிக்கிறது.

    பி.ஆர்.டி.சி. கடன் வழங்கும் சங்கத்திற்கு கடந்த 7 ஆண்டு காலமாக நிர்வாக ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து தொகையை செலுத்தாத காரணத்தினால், ஊழியர்களுக்கு கூடுதல் வட்டி 16 சதவீதம் போடப்பட்டு இறுதி கடிதங்களை சங்கம் அனுப்பிவருகிறது.

    நிர்வாகம் அவ்வாறு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகையை உடனே சொசைட்டிக்கு செலுத்த வேண்டும். சொசைட்டி போட்ட வட்டி க்கு பி.ஆர்.டி.சி. நிர்வாகமே முழு பொறுப்பாகும். மேலும், நிலுவையில் உள்ள 2 மாத சம்பளம் மற்றும் போனஸ் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

    இதுதொடர்பாக முதல்-அமைச்சர், போக்குவரத்து துறை அமைச்சர், துறை செயலர் மற்றும் மேலாண் இயக்கு நருக்கு கடிதம் அளிக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சென்னை தலைமை செயலகத்தில் 275 புதிய பேருந்துகளை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 7 பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். #Edappadipalaniswami
    சென்னை:

    தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக 21,678 பேருந்துகளை இயக்கி வருகிறது.

    சுமார் 1 கோடியே 74 லட்சம் பயணிகள், தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் பேருந்து சேவையின் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.



    பொது மக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 17 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 72 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 43 பேருந்துகளும், கோவை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 75 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 68 பேருந்துகளும், என மொத்தம் 68 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 275 புதிய பேருந்துகளை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பொது மக்களின் பயன்பாட்டிற்காக 7 பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். #Edappadipalaniswami
    140 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 555 புதிய பேருந்துகளை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 7 பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். #EdappadiPalanisamy
    சென்னை:

    தமிழ்நாடு அரசு 8 போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக 21,678 பேருந்துகளை இயக்கி வருகிறது. சுமார் 1 கோடியே 74 லட்சம் பயணிகள், தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய அண்டை மாநில மக்களும் பேருந்து சேவையின் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.

    பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 56 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 82 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 112 பேருந்துகளும், கோவை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 140 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 102 பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 63 பேருந்துகளும், என மொத்தம் 140 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 555 புதிய பேருந்துகளை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 7 பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    இதற்கான விழா சென்னை கோட்டையில் இன்று காலை நடந்தது.

    நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் வி. பாஸ்கரன், மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் அன்பு ஆபிரகாம், அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். #EdappadiPalanisamy

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 300 புதிய பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் முதல் கட்டமாக 100 பஸ்கள் இந்த மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #TNBuses
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3200 பஸ்கள் 700-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

    ஒரு சில பஸ்கள் மிகவும் மோசமான நிலையில் இயக்கப்படுகிறது. கூரை, இருக்கைகள், கதவு உடைந்து காணப்படுகின்றன.

    மேலும் குறிப்பிட்ட கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு விட்டதால் அவற்றை தகுதியற்றவையாக ஒதுக்க வேண்டும். ஆனால் புதிய பஸ்கள் கொள்முதல் செய்வது தாமதம் ஆனதால் தொடர்ந்து ஓட்டை உடைசலான பஸ்களை இயக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2000 புதிய பஸ்கள் வாங்க அரசு நிதி ஒதுக்கி அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக வந்த பஸ்கள் அனைத்தும் மற்ற போக்குவரத்து கழகங்களுக்கு கொடுக்கப்பட்டன. மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 300 புதிய பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    அவற்றில் முதல் கட்டமாக 100 பஸ்கள் இந்த மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், புதிய பஸ்கள் பாடி கட்டும் பணி நிறைவடைந்து இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வந்து விடும். முதலில் 100 புதிய பஸ்கள் விடப்படுகிறது. இந்த பஸ்கள் அனைத்தும் மத்திய அரசின் சாலை போக்குவரத்து பாதுகாப்பின் அடிப்டையில் வடிவமைக்கப்படுகிறது.

    பயணிகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நாடு முழுவதும் பேருந்துகள் ஒரே வடிவில் அமைக்கப்பட வேண்டும் என்ற விதிகளை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளதால் ‘பாடி’ கட்டமைக்கும் பணி தாமதமானது.

    பயணிகள் இருக்கைகள் இடைவெளிவிட்டு அமைத்தல், ஊனமுற்றோருக்கான இருக்கை போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய பஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு வசதியில் எந்தவித தரமும் குறையக்கூடாது என்பதில் உறுதியாக நிபந்தனை கடைபிடிக்கப்பட்டுள்ளது.

    புதிய பஸ்கள் விடப்பட்டால் பயணிகளின் கூட்டம் மேலும் அதிகரிக்கும். ஏற்கனவே குறைந்த பட்ச கட்டணம் ரூ.5 ஆக குறைக்கப்பட்டதால் 40 ஆயிரம் பயணிகள் அதிகரித்துள்ளனர். மற்ற நாட்களை விட வார நாட்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNBuses
    போளூர்-சென்னைக்கு 2 புதிய பஸ்களை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். #ministersevurramachandran

    போளுர்:

    திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலத்திற்கு 22 புதிய பஸ்கள் ஒதுக்கப்பட்டன. போளூர் போக்குவரத்து மணிமனைக்கு 4 புதிய பஸ்கள் ஒதுக்கப்பட்டன. இதில் 2 பஸ்கள் ஏற்கனவே பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

    மீதமுள்ள 2 புதிய பஸ்கள் இயக்கத்தை போளூர் பஸ் நிலையத்தில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பஸ்கள் ஆரணி, ஆற்காடு வழியாக சென்னைக்கு செல்கிறது. 

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கந்தசாமி, பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., அண்ணா தொழிற்சங்க துணை தலைவர் முருகன், போளூர் துணை மேலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #ministersevurramachandran

    திருப்பூர் மாவட்டத்திற்கு 33 புதிய பஸ்களை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    திருப்பூர்:

    முதலமைச்சர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக 542 பஸ்களை இயக்கி வைத்தார். அதில் திருப்பூர் மாவட்டத்திற்கு 33 பஸ்களையும் இயக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நேற்று திருப்பூர் பழைய பஸ் நிலைய வளாகத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருப்பூர் மண்டலத்தின் சார்பில், திருப்பூர் 1, திருப்பூர் 2, பல்லடம், காங்கயம், தாராபுரம், பழனி 1 மற்றும் பழனி 2 ஆகிய கிளைகளின் சார்பில் திருப்பூர் - ராமேஷ்வரம், திருச்சூர், சிவகாசி, திருச்சி, பரமக்குடி, பொள்ளாச்சி, பாலக்காடு, குருவாயூர் மற்றும் சேலம் ஆகிய 11 புறநகர் பஸ்ககளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரன், இ.கா.ப., எம்.எல்.ஏ.,க்கள். குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), கரைப்புதூர் ஏ. நடராஜன் (பல்லடம்), முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக திருப்பூர் மண்டல பொது மேலாளர் கோவிந்தராஜ், துணை மேலாளர்கள் குணசேகரன் (வணிகம்), வேலுச்சாமி (தொழில்நுட்பம்), திருப்பூர் தெற்கு தாசில்தார் ரவிச்சந்திரன், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உட்பட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை கலெக்டர் பழனிசாமியுடன் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருப்பூர் நகரின் மைய பகுதியான பழைய பஸ் நிலையம் அருகில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பெருமாள் கோவில் அரிசி கடை வீதியில் இருந்து பல்லடம் சாலை பழைய கலெக்டர் அலுவலகம் வரை ரூ.43 கோடி மதிப்பீட்டில் 671.1 மீட்டர் நீளம் மற்றும் 12 மீட்டர் அகலத்துடன் 16 தூண்களுடன் பறக்கும் பாலம் கட்டப்பட்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இப்பாலப்பணிகள் முடிவுற்று தற்போது வடிகால் அமைக்கும் பணி மற்றும் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் அனைத்தும் விரைவில் முடித்து அடுத்த மாதம் (ஆகஸ்ட்) முதல் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இப்பாலம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வரும்போது மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும். இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    டிரைவர் போதையில் இருப்பதை கண்டறியும் நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்துக்கான புதிய பஸ்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்துக்கு தமிழ்நாடு போக்குவரத்துக்கழகத்தின் (கோவை) ஒரு பேருந்து மற்றும் சிற்றுந்து நேற்று கொண்டு வரப்பட்டிருந்தது. அவற்றின் கட்டுமானம் மற்றும் நவீன வசதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

    அவருடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கூடுதல் தலைமைச் செயலாளர் டேவிதார் உடனிருந்தனர்.

    பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த பேட்டி வருமாறு:-

    2 ஆயிரம் புதிய பஸ்களை வாங்க அரசு ஆணையிட்டு இருந்தது. அதன்படி, புதிய கூண்டுகள் கட்டி தயாராக உள்ள முதல் சிற்றுந்து மற்றும் சாதாரண பேருந்து ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். இதில் பல்வேறு நவீன வசதிகள் உள்ளன. 2 ஆயிரம் பஸ்களும் இந்த வடிவமைப்பில் இருக்கும்.

    இந்த பஸ்கள் நல்ல தரமாக கட்டப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த நிதி ஆண்டில் போக்குவரத்துக்கழகங்களுக்கு மேலும் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க இசைவு தெரிவித்துள்ளார்கள். மிக விரைவில் தமிழக போக்குவரத்துக்கழகங்களில் 5 ஆயிரம் புதிய பஸ்கள் இயங்கும்.

    இதில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்னவென்றால், தரமான வேகக்கட்டுப்பாட்டுக் கருவி, ஜி.பி.எஸ். வசதி, செல்போன் செயலி மூலம் பஸ் வரும் நேரத்தை அறியும் வசதி, சீட் சாய்வை 105 டிகிரியில் இருந்து 115 ஆக உயத்தியிருப்பது, 2 அவசர கால வழிகள் போன்றவை உள்ளன.

    ஜி.பி.எஸ். வசதி இருப்பதால் இலவச வைபை தொழில்நுட்பத்தையும் எதிர்காலத்தில் கொண்டு வரமுடியும். அடுத்த பஸ் நிறுத்தத்தை பஸ்சில் தெரிவிக்கும் வசதியையும் கொண்டுவர வழிவகை ஏற்பட்டுள்ளது.

    குடிபோதையில் டிரைவர் இருப்பதை கண்டறியும் கருவி, அவரது இருக்கைக்கு அருகே வைக்கப்பட்டுள்ளது. இதை மாதிரியாக பொருத்தி இருக்கிறோம். இன்னும் பல வசதிகள் கொண்டுவரப்படும்.

    பேருந்து ரூ.24.7 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி இருந்தாலும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர வேண்டியது அரசின் கடமை. அடமானத்தில் உள்ள சொத்துகளை மீட்கும் நடவடிக்கை படிப்படியாக செய்யப்பட்டு வருகிறது.

    போக்குவரத்தை நவீனமயமாக்கும் முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. படுக்கை வசதி, ஏ.சி. வசதி, கழிவறை, மிதவை போன்ற வசதிகள் இனி வரக்கூடிய பஸ்களில் இருக்கும். தனியாருக்கு போட்டியாக அவை அமையும்.

    சென்னை தவிர மற்ற நகரங்களுக்கு சிற்றுந்து வசதிகளை கொண்டு செல்லும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. 200 பேட்டரி பஸ்களை வாங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×