search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடனுதவி"

    • பனை தொழிலாளிகளுக்கு கடனுதவி வழங்க வேண்டும்.
    • நாடார் மகாஜன சங்க தலைவர் கரிக்கோல் ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே நரிப்பையூர் வட்டார நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின்

    121-வது பிறந்தநாள் விழா நடந்தது. வட்டார நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் செண்பக பாண்டி யன் தலைமை வகித்தார். நரிப்பையூர் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், நரிப்பையூர் வட்டார நாடார் இளைஞர் பேரவை தலைவர் அந்தோணி ராஜ், நரிப்பையூர்வட்டார காங்கிரஸ் தலைவர் ஞானசேகரன், சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பா ளர்களாக மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி நாடார் மகாஜன சங்க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் குகன் ஆகியோர் கலந்து கொண்டனர். சங்க செயலாளர் தமிழரசன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் கலந்து கொண்டு காமராஜரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அதிக மதிப்பெண் மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியின் படி ரேஷன் கடையில் கருப்பட்டியை விற்பனை செய்ய வேண்டும். பனைமரம் வெட்டுவதை தடுத்து நிறுத்திடும் சட்டத்தை அமல்படுத்திட வேண்டும். பனைத் தொழிலாளர்களுக்கு வங்கி கடன் உதவி வழங்க வேண்டும். இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை தரவையிலிருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும். அதன் மூலம் குடிநீர் நன்கு கிடைக்கும். பனைமரம் தேசிய மரமாக அரசு அறிவித்துள்ள நிலையில் அதனை வெட்டுவதை தடுத்து நிறுத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில் நரிப்பையூர் வட்டார நாடார் உறவின்முறை சங்க கிராமத் தலைவர்கள் கிருஷ்ணசாமி, ஜேம்ஸ் விக்டர், அந்தோணி ஜெபமாலை, சிவனேந்த பெருமாள், மிக்கேல், ஜீவராஜ், கந்தப்பழம், முனியசாமி, சரவண பழனி முருகன், சித்திரை பாண்டியன், உதயகுமார், பால்பாண்டி, சுப்பிர மணியன், பெருமாள், லிங்கம் உள்பட கிராம தலைவர்கள் பங்கேற்றனர். நரிப்பையூர் வட்டார நாடார் உறவின்முறை சங்க பொருளாளர் ஜோசப் கென்னடி நன்றி கூறினார்.

    கரூரில் 2392 பெண்களுக்கு ரூ.12.13 கோடி கடனுதவி வழங்கப்பட்டது

    கரூர்,

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கூட்டுறவுத்துறையின் சார்பில் மகளிர் பொருளாதார நிலையினை உயர்த்தும் விதமாக 46 கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த, 221 மகளிர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினராக உள்ள 2,392 பெண்களுக்கு ரூ.12.13 கோடி மகளிர் சுய உதவிக்குழுக்கடன் வழங்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் கடன் தொகையினை வழங்கி பேசும்போது,பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறுகையில்,மகளிர்களின் குடும்ப பொருளாதார நிலையினை உயர்த்திடும் விதமாக 10.30 சதவீதம் குறைந்த வட்டியில் மகளிர் சுய உதவிக்குழுக்கடன் வழங்கப்பட்டு வருகின்றது. கரூர் மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டில் 182 மகளிர் சுய உதவிக்குழுக்களின் 2,215 உறுப்பினர்களுக்கு ரூ.19.16 கோடி மகளிர் சுய உதவிக்குழுக்கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மகளிர் சுய உதவிக்குழுக்கடன் வழங்கப்பட்டது. அடுத்தபடியாக கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தும் விதமாக 34 நியாய விலை கடைகளுக்கு க்யூ ஆர் கோடு வழங்கக்கூடிய அந்த நிகழ்வும் அதே போல இரண்டு நபர்களுக்கு கருணை அடிப்படையில் வேலைக்கான பணி நியமன ஆணைகளையும் வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டிலேயே நமது மாவட்டத்தில் தான் 21 நியாய விலைக் கடைகளில் சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டு வருகின்றது. வரும் காலங்களில் அனைத்து கடைகளிலும் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் பேசினார்.இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கரூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, மகளிர் திட்ட இயக்குநர் சீனிவாசன், துணைப்பதிவாளர்கள் ஆறுமுகம், அபிராமி (பொதுவிநியோகத்திட்டம்) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 10 பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
    • அதிக பட்சமாக ரூ.40லட்சம் வரையும் மானியம் பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பயனாளி களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜூலு கலந்து கொண்டு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில், இணை மானிய திட்டத்தின் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.20.15 லட்சம் மதிப்பிலான கடனு தவிகள் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த திட்டம் ராமநாத புரம் மாவட்டத்தில் ப்புல்லாணி, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றியங்களில் 143 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் தொழிற்கடன்களுக்கு 30 சதவீதமும், அதிக பட்சமாக ரூ.40லட்சம் வரையும் மானியம் பெறலாம். தனிநபர், குழு தொழில்க ளுக்கு கடன் வழங்கப்படும். திட்ட மதிப்பீட்டில் தொழில் கடன் பெறுபவர் பங்களிப்பு தொகை பொது பிரிவினர் 10 சதவீதம், சிறப்பு பிரிவினர்களுக்கு 5சதவீதம் செலுத்த வேண்டும். கடன் பெறுவோர் 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnrtp.org/citizenlog.in இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்ய லாம். விண்ணப்பத்தை அந்தந்த ஊராட்சி தொழில் சார் வல்லுநர்களிடம் பெறலாம்.

    இந்த திட்டம் குறித்த தகவல்களுக்கு மகளிர் வாழ்வாதார சேவை மையம் (மண்டபம் மற்றும் திருப்புல்லாணி வட்டாரங்களுக்கு 72004 36477 என்ற தொடர்பு எண்ணிலும், திருவாடனை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரங்களுக்கு 90477 08040 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வாழ்ந்து காட்டு வோம் திட்ட அலுவலகத்தை 9486745280, 8300098120 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட திட்ட செயல் அலுவலர் குமரன் , செயல் அலுவலர்கள் ராஜபாண்டி, தொழில் நிதி வல்லுநர் சத்திய சொரூபன் , உதவி பொறியாளர் பிரதீப், தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜன் தலைமையில் கடனுதவி வழங்கப்பட்டது.
    • கூட்டுறவு சங்கத் தலைவர் நாகமுத்து, செயலாளர் கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த கவரப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கிசான் கடன் அட்டை திட்டம் சார்பில் கால்நடை பராமரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் விற்பனை மகளிர் குழு சுழல் நிதியாக 13 குழுவிற்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜன் தலைமையில் கடனுதவி வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவர் நாகமுத்து, செயலாளர் கணபதி, ஒன்றிய கவுன்சிலர் வெற்றி, திமுக ஒன்றிய செயலாளர், சுகுமார் மற்றும் மகளிர் குழுவினர் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

    • புதிய தொழில் தொடங்க இளைஞர்களுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.
    • ரூ.4லட்சத்து 57ஆயி ரத்திற்கான கடனுதவி ஆணையினை கலெக்டர் வழங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுய தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதன் மூலம் அவர்கள் சமூக பொரு ளாதார ரீதியாக வளர்ச்சி அடையும் நோக்கில் தமிழக அரசால் படித்த வேலை வாய்ப்பற்ற இளை ஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, மாவட்ட தொழில் மையம் மூலம் சிறப்பாக செயல்படுத் தப்பட்டு வருகிறது.

    மாவட்ட தொழில் மையத்தின் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் 2023-24-ம் நிதியாண்டிற்கான முதல் காலாண்டில் ரூ.29 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் தற்போது 7 மகளிர் தொழில் முனைவோர்களுக்கு ரூ.7 லட்சத்து 18 ஆயிரத்து 400 மதிப்பிலும், ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த 1 தொழில் முனைவோருக்கு ரூ.1லட்சத்து 14 ஆயிரத்து 250 மதிப்பிலும், சிறு பான்மையினர் பிரிவைச் சார்ந்த 3 தொழில் முனைவோர்களுக்கு ரூ.3லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலும் மற்றும் 1 மாற்றுத்திறனாளி தொழில் முனைவோர்களுக்கு ரூ.45 ஆயிரத்து 350 மதிப்பிலும் என மொத்தம் 12 புதிய தொழில் முனைவோர்க ளுக்கு ரூ.12 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பிலான தமிழக அரசின் மானியத் தொகை பெறுவதற்கான ஆணை களை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

    முதல்-அமைச்சரின் தனிப்பிரிவிற்கு புதிய தொழில் தொடங்க கடனு தவி வேண்டி விண்ணப்பித்த இளைஞருக்கு புதிய தொழில் தொடங்குவதற்காக மானியத்துடன் கூடிய ரூ.4லட்சத்து 57ஆயி ரத்திற்கான கடனுதவி ஆணையினை கலெக்டர் வழங்கினார்.

    மேலும் விருதுநகர் மாவட்டத்தில் வியாபார நோக்கத்திற்காக தொழில் தொடங்க ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்ப தாரர்கள் மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், பொதுமேலாளர் (மாவட்ட தொழில் மையம்) ராமசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டுறவுத்துறை மூலம் கடன் வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் நடைபெற்றது
    • மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.19.50 லட்சம் கடனுதவி

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் மண்டல இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் தனலட்சுமி தலைமையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அறந்தாங்கி கிளையில் உள்ள காவேரி மகளிர் சுய உதவி குழுவிற்கு உயர்ந்தபட்சமாக ரூ.20 லட்சம் குழுக்கடன் வழங்கப்பட்டது. மேலும் தாட்கோ சுய உதவி குழு கடனாக தேக்காட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள 3 சுய உதவி குழுக்களுக்கு ரூ.19.50 லட்சம் கடன் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சரக துணைப்பதிவாளர்கள், வங்கியின் துணை பதிவாளர் முதன்மை வருவாய் அலுவலர், வங்கியின் பொது மேலாளர் மற்றும் வங்கியின் உதவி ெபாது மேலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சிறுபான்மையினர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் 8 - ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
    • அதிகபட்ச மானியத்தொகை ரூ.2.5 லட்சம் வரை வழங்கப் படும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்து உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்களில் தொழில் தொடங்கிட விழை வோரை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசால் புதியதாக அறிவிக்கப்பட்டு மாவட்டத் தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் புலம்பெயர்ந்தோர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தமிழக அரசின் மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி பெறுவதற்கு, மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் பரிந்துரை செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தேவை யான தகுதிகள் குறித்த விரிவான விவரம் பின்வருமாறு:-

    பொதுப் பிரிவினர் - 18 வயது முதல் 45 வயது வரை, சிறப்புப் பிரிவினர் - 18 வயது முதல் 55 வயது வரை சிறுபான்மையினர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் கல்வித் தகுதி 8 - ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். சேவை மற்றும் வணிகம் துறை சார்ந்த தொழில் களுக்கு குறைந்தபட்சம் - 5 லட்சம், உற்பத்தித் துறைக்கு அதிகபட்சம் - ரூ.15 லட்சமும், வேலைவாய்ப்பு விசாவுடன் 2 ஆண்டுகளுக்கு குறையாமல் வெளிநாட்டில் வேலை பார்த்திருக்க வேண்டும். 01. 01. 2020 அல்லது அதற்கு பிறகு வெளிநாட்டி லிருந்து தமிழகம் திரும்பிய வராக இருத்தல் வேண்டும். கடவுச் சீட்டு வழி முறை, விசா நகல் , கல்விச் சான்று, இருப்பிடச் சான்று, சாதிச் சான்று மாற்றுத் திறனாளிகளுக்கான சான்று ஆகியவற்றின் நகல்கள் இணைத்து வழங்க வேண்டும்.

    இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து தொழில் துவங்கும் தொழில் முனைவோர்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அரசு மானியமாக (அதிகபட்ச மானியத்தொகை ரூ.2.5 லட்சம் வரை) வழங்கப் படும். மானியத்தொகை 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்ட பின்னர் கடன் தொகையில் சரி கட்டப்படும். எனவே, கொரோனா பெருந்தொற்று பரவலால் வெளிநாட்டில் வேலை யிழந்து தமிழகம் திரும்பிய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தொழில் தொடங்கி இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • டாப்செட்கோ மூலம் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

    அரியலூர்:

    தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் சமூகப் பொருளாதார நிலையினை மேம்படுத்தும் வகையில் தனி நபர் கடன், பெண்களுக்கான புதிய பொற்கால கடன், பெண்களுக்கான நுண் கடன், ஆண்களுக்கான நுண் கடன் மற்றும் கறவை மாட்டு கடன் ஆகிய பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரியலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் வருமாறு:-

    விண்ணப்பத்தாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பினராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். பொது காலக்கடன்/தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 6 சதவீதம் முதல் 8 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

    பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. நுண் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு ஆண்டிற்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடன் தொகையாக ரூ.1.25 லட்சமும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. திட்ட அலுவலரால் (மகளிர் திட்டம்) தரம் செய்யப்பட்டு இருத்தல் வேண்டும்.

    நுண் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆடவர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு ஆண்டிற்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடன் தொகையாக ரூ.1.25 லட்சமும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. நுண் கடன் வழங்கும் திட்டத்தில் ஆடவர், மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. டாப்செட்கோ திட்டத்தில் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு கிளை வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம்.

    விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும். மேற்படி திட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்கள் கடன் பெற்று பயன்பெறலாம், என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தொழில் முனைவோருக்கு கடனுதவியுடன் மானியம் வழங்கபடும் என கலெக்டர் தெரிவித்தார்
    • மேலும் விவரங்களை பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பெரம்பலூர் என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 8925533976 என்ற தொலைபேசி எண்ணிலோ அணுகலாம்.

    பெரம்பலூர்,

    தமிழக அரசு எஸ்.சி., மற்றும் எஸ்.டி. பிரிவு தொழில் முனைவோருக்கென பிரத்யேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர் முன்மொழியும், நேரடி வேளாண்மை தவிர்த்த உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்த தொழில் திட்டத்துக்கும் கடனுதவியுடன் இணைந்த மானியம் வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர்களுக்கு வேறெந்த கல்வித் தகுதியும் தேவையில்லை. மொத்த திட்ட தொகையில் 65 சதவீதம் வங்கி கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு, 35 சதவீத அரசின் பங்காக மானியம் வழங்கப்படும். எனவே பயனாளர்களுக்கு தம் பங்காக நிதி செலுத்த வேண்டிய தேவை இருக்காது. தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மற்றும் குறிப்பிட்ட திட்டம் தொடர்பான சிறப்பு பயிற்சி அல்லது திறன் மேம்பாட்டு பயிற்சி தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்கப்படும்.

    ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், திட்ட அறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடர்பான உதவிகள் மாவட்ட தொழில் மையத்தில் வழங்கப்படும். மேலும் விவரங்களை பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பெரம்பலூர் என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 8925533976 என்ற தொலைபேசி எண்ணிலோ அணுகலாம். இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் வருகிற 30-ந் தேதி மாலை 5 மணியளவில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள எஸ்.சி., எஸ்.டி., பிரிவு தொழில் முனைவோர்கள், இக்கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறுமாறு, கலெக்டர் கற்பகம் அழைப்பு விடுத்துள்ளார்.

    • ஆதிதிராவிடர் தொழில் முனைவோர்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
    • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப் பதாவது:-

    தமிழக அரசின் பட்ஜெட் அறிக்கையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (எஸ்.சி./எஸ்.டி.) தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டம் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்கும் ஆரம்ப அமைவு கட்டத்தில் எதிர் கொள்ளும் நிதிச்சுமையை தணிப்பது மற்றும் தேவை யான வளங்களைப் பெறு வதை எளிதாக்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

    மேலும் தொழில் முனை வோர்களின் ஒட்டுமொத்த செலவை கணிசமாக குறைத்து தொழில் முனைவோர்கள் தங்கள் வணிகத்தில் ஆர்வமுடன் முதலீடு செய்வதை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் பேருதவியாக இருக்கும்.

    இந்த திட்டத்தில் எந்திரங்கள் மற்றும் உபகர ணங்களை வாங்குவதற்கான கடனுக்கு 35 சதவீத மூலதன மானியமும், 6 சதவீத வட்டி மானியமும் வழங்க வழி வகை செய்யப்பட்டள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்க ளுக்கு விண்ணப்பிக்கலாம். நேரடி விவசாயம் சார்ந்த தொழில்கள் மேற்கொள்ள இந்த திட்டத்தில் வழிவகை இல்லை.

    இந்த திட்டத்தில் புதிய தொழில் ஆரம்பிக்கவும் மற்றும் ஏற்கனவே செயல்படுத்தப்படும் தொழில்களின் விரிவாக்கத்திற்கும் மானிய கடனுதவி வழங்கப்படும். வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு எந்திரங்கள், நிலம், சோதனைக்கருவிகள், கணிணி சார்ந்த பொருட்கள் மற்றும் தொழில் சார்ந்த வாகனங்கள் வாங்கவும் இந்த திட்டத்தில் மானியத்துடன் கடன் வழங்கப்படும்.

    மேற்காணும் திட்டத்தில் பயன்பெற திட்ட அறிக்கை, விலைப்பட்டியல் மற்றும் உரிய ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in/aabcs என்ற இணையதளம் முகவரியில் விண்ணப்பித்து பயனடையலாம்.

    மேலும் கூடுதல் விபரங்க ளுக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பொது மேலாளர் அலுவலகம், மாவட்ட தொழில் மையத்தை நேரிலோ அல்லது 89255 34036 என்ற தொலைபேசியிலோ அணுகலாம்.

    இந்த திட்டத்திற்கான மாபெரும் விழிப்புணர்வு முகாம் வருகிற 30-ந் தேதி அன்று மாவட்ட கூட்ட அரங்கில் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆவின் பாலகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை பெறப்பட்டுள்ளது.
    • ரூ.3.75 லட்சம் மானியம் வழங்கப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாட்கோ மூலம் புதிய தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு கடனுதவி திட்ட ங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உறைவிப்பான், குளிர்விப்பான் போன்ற உபகரணங்களை கொள்மு தல் செய்து, ஆவின் பாலகம் அமைத்து வரு வாய் ஈட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை பெறப்பட்டுள்ளது.

    மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆவின் பாலகம் அமைக்கும் திட்ட த்தின்கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராகவும்,18 முதல் 65 வயதுடையவராகவும், விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் ஏதும் பெறாதவராகவும் இருக்க வேண்டும். ஆதிதிராவிட தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 30 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் மானியம் வழங்கப்படும். மேலும், இத்திட்டம் தொடர்பாக இணையதள முகவரி மற்றும் மாவட்ட மேலாளர் அலுவலகம் தாட்கோ, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். என இதில் அவர் இவ்வாறு கூறினார்.

    • இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
    • கலெக்டர் வளர்மதி தகவல்

    ராணிப்பேட்டை:

    கோவிட்-19 (கொரோனா) பெருந்தொற்று பரவலால் வெளிநாட்டில் வேலையிழந்து நாடு திரும்பிய புலம்பெயர் தமிழர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு "புலம்பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்" என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் வேலையிழந்து நாடு திரும்பிய தமிழர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் இணைந்த கடனுதவி பெற்று பயன்பெறலாம்.

    அவர்கள் கோவிட்-19 பெருந்தொற்று பரவலினால் 01.01.2020 அன்று அல்லது அதற்கு பிந்தைய நாட்களில் தமிழகம் திரும்பியவராக இருக்க வேண்டும், குறைந்தது 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,பொது பிரிவினருக்கு வயது 18 க்கு மேலாகவும் 45 க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    சிறப்பு பிரிவினருக்கு (பெண்கள், SC, ST, BC, MBC, சிறுபான்மையினர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு) வயது 18 க்கு மேலாகவும் 55 க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    வியாபார மற்றும் சேவை தொழில் திட்டங்களுக்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சம் ஆகவும் உற்பத்தி தொழில் திட்டங்களுக்கு ரூ.15 லட்சம் வரை திட்ட மதிப்பீடாக இருக்க வேண்டும்.

    பயனாளர்கள் பங்காக பொது பிரிவு பயனாளர்கள் எனில் திட்ட தொகையில் 10 சதவிகிதம் மற்றும் பெண்கள், இடஒதுக்கீட்டு பிரிவினர் உள்ளட்ட சிறப்பு பிரிவினர் எனில் 5 சதவிகிதம் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை வங்கிக் கடனாக வழங்கப்படும். அரசு, திட்டத் தொகையில் 25 சதவிகிதம் அதிகபட்சம் ரூ.2.5 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

    இத்திட்டம், மாவட்ட தொழில் மையம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற www.msmeonline.tn.gov.in/meap என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் விண்ணப்பத்தினை இரு நகல்களாக சமர்பிக்க வேண்டும்.

    எனவே, இந்த வாய்ப்பினை வெளிநாடுகளிலிருந்து கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் வேலையிழந்து நாடு திரும்பிய ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியும், தொழில் துவங்க ஆர்வமும் கொண்டோர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் வளர்மதி அழைப்பு விடுத்துள்ளார்.

    மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், எண்.5, தேவராஜ் நகர்,ராணிப்பேட்டை அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது கீழ் கண்ட தொலைபேசி எண்கள் 04172-270111/270222. மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    ×