என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புதிய தொழில் தொடங்க இளைஞர்களுக்கு மானியத்துடன் கடனுதவி
- புதிய தொழில் தொடங்க இளைஞர்களுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.
- ரூ.4லட்சத்து 57ஆயி ரத்திற்கான கடனுதவி ஆணையினை கலெக்டர் வழங்கினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுய தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதன் மூலம் அவர்கள் சமூக பொரு ளாதார ரீதியாக வளர்ச்சி அடையும் நோக்கில் தமிழக அரசால் படித்த வேலை வாய்ப்பற்ற இளை ஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, மாவட்ட தொழில் மையம் மூலம் சிறப்பாக செயல்படுத் தப்பட்டு வருகிறது.
மாவட்ட தொழில் மையத்தின் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் 2023-24-ம் நிதியாண்டிற்கான முதல் காலாண்டில் ரூ.29 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் தற்போது 7 மகளிர் தொழில் முனைவோர்களுக்கு ரூ.7 லட்சத்து 18 ஆயிரத்து 400 மதிப்பிலும், ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த 1 தொழில் முனைவோருக்கு ரூ.1லட்சத்து 14 ஆயிரத்து 250 மதிப்பிலும், சிறு பான்மையினர் பிரிவைச் சார்ந்த 3 தொழில் முனைவோர்களுக்கு ரூ.3லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலும் மற்றும் 1 மாற்றுத்திறனாளி தொழில் முனைவோர்களுக்கு ரூ.45 ஆயிரத்து 350 மதிப்பிலும் என மொத்தம் 12 புதிய தொழில் முனைவோர்க ளுக்கு ரூ.12 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பிலான தமிழக அரசின் மானியத் தொகை பெறுவதற்கான ஆணை களை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.
முதல்-அமைச்சரின் தனிப்பிரிவிற்கு புதிய தொழில் தொடங்க கடனு தவி வேண்டி விண்ணப்பித்த இளைஞருக்கு புதிய தொழில் தொடங்குவதற்காக மானியத்துடன் கூடிய ரூ.4லட்சத்து 57ஆயி ரத்திற்கான கடனுதவி ஆணையினை கலெக்டர் வழங்கினார்.
மேலும் விருதுநகர் மாவட்டத்தில் வியாபார நோக்கத்திற்காக தொழில் தொடங்க ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்ப தாரர்கள் மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பொதுமேலாளர் (மாவட்ட தொழில் மையம்) ராமசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்